உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வுக்கு எகிறிய மவுசு... இண்டி கூட்டணிக்கு சரிவு; சர்வே சொல்வது என்ன?

பா.ஜ.,வுக்கு எகிறிய மவுசு... இண்டி கூட்டணிக்கு சரிவு; சர்வே சொல்வது என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தற்போதைய சூழலில் லோக்சபா தேர்தல் நடந்தால் பா.ஜ., தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என்று பிரபல தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த லோக் சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இண்டி கூட்டணி 234 தொகுதிகளை பிடித்தது. பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறி வந்த நிலையில், அந்தக் கட்சிக்கு 240 இடங்களே கிடைத்தன. இதனால், கூட்டணி கட்சிகளின் தயவால் ஆட்சியமைத்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தேதியில் லோக்சபா தேர்தல் நடந்தால் பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று தி இண்டியா டுடே மற்றும் சிஓட்டர் மூட் ஆப் தி நேஷன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அந்த நிறுவனமானது, ஜன.,2ம் தேதி முதல் பிப்.,9ம் தேதி வரையில் நாடு முழுவதும் 1,25,123 பேரிடம் கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. அதில், ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ. கூட்டணி 343 இடங்களை பிடிக்கும் என்று தெரிய வந்துள்ளது. அதேபோல, 232 இடங்களை பிடித்த இண்டி கூட்டணிக்கு 188ஆக குறையும் என்றும் தெரிகிறது.குறிப்பாக, பா.ஜ., 281 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் 99 தொகுதிகளை பெற்ற காங்கிரசுக்கு 78ஆக குறையும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Bala
பிப் 13, 2025 20:50

மதவாத திமுக கட்சியின் தற்போதைய செல்வாக்கு சரிவு பற்றி ஒரு சர்வே எடுங்கள்


பேசும் தமிழன்
பிப் 13, 2025 18:30

இண்டி கூட்டணி என்பதே ஒரு ஏமாற்று வேலை.... இண்டி கூட்டணி நொண்டி கூட்டணியாகி விட்டது.... இல்லாத ஒன்றை ஏன் கட்டிக் கொண்டு அழ வேண்டும் ???


Natarajan Ramanathan
பிப் 13, 2025 17:05

விரைவில் காங்கிரசை முற்றாக தடை செய்து இந்த நாட்டை காப்பாற்றவேண்டும்.


venugopal s
பிப் 13, 2025 16:52

அப்புறம் என்ன? தைரியம் இருந்தால் மத்தியில் ஆட்சியை ராஜினாமா செய்து விட்டு புதிதாக பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டியதுதானே? யார் வேண்டாம் என்றது?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
பிப் 13, 2025 17:38

வேணுகோப்பால் முழு பைத்தியமாகவே மாறிவிட்டார்....!!!


vivek
பிப் 13, 2025 18:19

இப்போ என்ன அவசரம் வேணு..திமுக வுக்கும் ஆப்பு வச்சிட்டு மொத்தமா தேர்தல் வச்சிடுவோம்....என்ன நான் சொல்றது..


பேசும் தமிழன்
பிப் 13, 2025 18:32

நம்ம விடியல் கூட 200 தொகுதியில் வெற்றி பெறுவோம் எ‌ன்று கூறுகிறார்.... ராஜினாமா செய்து விட்டு... 200 தொகுதியில் வெற்றி பெற வேண்டியது தானே ???


vadivelu
பிப் 13, 2025 20:34

வேணுகோபால் காரு பாவம் என்ன என்னவோ சொல்லி பார்க்கிறார், ஒன்றும் பெரிய இடம் கவனிப்பதாகவே தெரியவில்லை. சிவாஜி கிருஷ்ண.....போல இனி மேடை ஏற வேண்டியதுதான்.


Sampath Kumar
பிப் 13, 2025 15:28

இதுக்கு என்னத்துக்கு சர்வதே கை புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை சுமை இமேஜ் டேமேஜ் சேயும் செய்தி


ஆரூர் ரங்
பிப் 13, 2025 15:25

விடியல் ஒருவர் மட்டுமே கடைசிவரை ராகுலை ஆதரித்து முட்டுக் குடுப்பாரு . தத்தி இனத்துடன் இனம்தான் சேரும்.


V.Mohan
பிப் 13, 2025 13:33

விடியல் திராவிட சம்பள விசுவாசிகள்


AKM KV SENTHIL MUSCAT
பிப் 13, 2025 12:45

தமிழ்நாட்டின் நிலைமையில்... விஜய்யம் அதிமுகவும் கூட்டணி வைத்தால் அதிமுகவுக்கு நல்லது இல்ல ஜோலி முடிச்சிக்கலாம் நினைத்தால் பாஜக வோடு சேரலாம்..... மகாராஷ்டிரா சிவசேனா மாதிரி அதிமுகவும் ....


Jay
பிப் 13, 2025 12:21

மவுசு குறையாமல் இருக்குமா? விஷயம் தெரிஞ்சவர்கள் யாரும் இனி காங்கிரசுக்கு ஓட்டு போட மாட்டார்கள். 2013 இல் கொண்டு வரப்பட்ட வகுப்பு வாரிய சட்ட திருத்தத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். சட்ட திருத்தத்தின்படி வகுப்பு வாரியம் நினைத்தால் எந்த இடத்தையும் அவர்கள் ஆக்கிரமிக்கலாம். ஆனால் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்லக்கூடாது என்று சட்டம் இயற்றியுள்ளனர். மாறாக ஆக்கிரமித்த வகுப்புவாரியத்திடமே சென்று முறையிட வேண்டும். இப்படி எல்லாம் ஒரு சட்டத்தை யாராவது கொண்டு வருவார்களா? இப்படிப்பட்டவர்களுக்கு மக்கள் எப்படி மறுபடியும் ஓட்டு போடுவார்கள்? காங்கிரஸ்+திமுக ஜல்லிக்கட்டுக்கு கொண்டு வந்த தடை மறந்து விடுமா?


Suppan
பிப் 13, 2025 16:15

ஏதாவது வகுப்புக்கலவரம் நடந்தால் ஹிந்துக்களின் மீது மட்டுமே எப் ஐ ஆர் பதியவேண்டும், முஸ்லீம் கிறிஸ்தவர்கள் மீது எப் ஐ ஆர் பதியக்கூடாது என்றும் காங்கிரஸ் ஒரு சட்ட நகல் கொண்டுவந்தது. பா ஜ க வின் கடும் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. இது எவ்வளவு பேருக்குத் தெரியும் ?


RAMAKRISHNAN NATESAN
பிப் 13, 2025 12:00

திமுக, ஆர் ஜெ டி, சமாஜ்வாதி போன்ற மாநிலக்கட்சிகள் காங்கிரசை மீறி செல்வாக்கு பெற்றாலும் ஆபத்தே ..... அதே சமயம் காங்கிரசே ஒரு பிளவுவாத, தேச விரோத கட்சியாக இருப்பதால் காங்கிரஸ் ஒழிவதே நல்லது .....