உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "சைக்கிள் ஓட்டுங்க: ஆயுசை கூட்டுங்க": ஆய்வில் வெளியான "குட்நியூஸ்"

"சைக்கிள் ஓட்டுங்க: ஆயுசை கூட்டுங்க": ஆய்வில் வெளியான "குட்நியூஸ்"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'சைக்கிள் ஓட்டுவதால் முன்கூட்டியே மரணமடைவது 47 சதவீதம் குறைகிறது' என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனால் சைக்கிள் பயன்படுத்துவதை அதிகரித்தால், ஆயுள் நாட்கள் அதிகரிக்கும் என்பது உறுதியாகி உள்ளது.வீட்டு அருகில் இருக்கும் கடை முதல், தூரமாக இருக்கும் கடை வரை எங்கு சென்றாலும் பைக்கில் செல்வது தற்போது வழக்கமாகிவிட்டது. முந்தைய காலங்களில் சைக்கிள் ஓட்டி, வியர்வை சிந்தி நாம் சென்றடைய வேண்டிய இடத்திற்கு செல்லும் நிலை, தற்போது தலைகீழாக மாறிவிட்டது. இந்நேரத்தில், சைக்கிள் பயன்படுத்துவதை அதிகரித்தால், ஆயுள் நாட்கள் அதிகரிக்கும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 16வயது முதல் 74 வயதுக்குட்பட்ட 82 ஆயிரம் பேரை 18 ஆண்டுகளாக பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்காணித்து, ஆய்வு ஒன்று நடத்தி உள்ளனர். இந்த ஆய்வு குறித்த தகவல்கள், பி.எம்.ஜி பப்ளிக் ஹெல்த் (BMJ Public Health) பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

மரணம் தள்ளி போகுது..!

அந்த கட்டுரையில் கூறியிருப்பதாவது: சைக்கிள் பயன்படுத்துபவருக்கு, மற்றவர்களை காட்டிலும் முன்கூட்டியே மரணம் ஏற்படும் அபாயம் 47 சதவீதம் குறைவாக உள்ளது. அதேபோல், புற்றுநோயால் உயிரிழப்பது 51 சதவீதமும், இருதய கோளாறுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 24 சதவீதமும், மனநல கோளாறு ஏற்படுவது 20 சதவீதமும் குறைவாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Swaminathan L
ஜூலை 18, 2024 18:20

சைக்கிளில் செல்வது ஆரோக்யமான விஷயம் தான். தெறிக்கும் ட்ராஃபிக், புழுதி, குண்டும் குழியுமான சாலைகள், கூட்டம் என்கிறபோது சைக்கிள் பயணம் அலுப்பைத் தரும்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 18, 2024 19:31

தமிழகத்தை விட பின்தங்கிய மாநிலங்கள் பலவற்றில் சாலைகளின் தரம் நன்றாக உள்ளது .....


selvam
ஜூலை 18, 2024 17:31

நான் சிறுவயதில் சைக்கிள் ஓட்டும் போது, மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.. தற்போது பைக்கில் செல்வதால் மகிழ்ச்சி கிடைப்பதில்லை


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை