உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீட்டு வாசலுக்கு அரசு திட்டம் பெங்களூரில் இன்று துவக்கம்

வீட்டு வாசலுக்கு அரசு திட்டம் பெங்களூரில் இன்று துவக்கம்

பெங்களூரு :அரசு திட்டங்கள் வீட்டு வாசலுக்கு வரும் திட்டத்தை, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், இன்று பெங்களூரில் துவக்கி வைக்கிறார்.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., அரசு நடக்கிறது. பொது மக்கள், அரசு திட்டங்களை பெறுவதற்காக, அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தடுக்கும் வகையில், புதிய திட்டத்தை துவங்க, பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சரும், துணை முதல்வருமான சிவகுமார், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.இதன்படி, 'வாசலுக்கு வந்தது அரசு - சேவைக்கு இருக்கட்டும் ஒத்துழைப்பு' என்ற பெயரில், அரசு திட்டங்கள் வீட்டு வாசலுக்கு வரும் திட்டம் வகுக்கப்பட்டது.இத்திட்டத்தை, பெங்களூரு கே.ஆர்.புரத்தில் உள்ள ஐ.டி.ஐ., விளையாட்டு மைதானத்தில், இன்று காலை 9:30 மணிக்கு, துணை முதல்வர் சிவகுமார் துவக்கி வைக்கிறார். மஹாதேவபுரா, கே.ஆர்.புரம் தொகுதி மக்கள் இதில் பங்கேற்கலாம்.இந்த நிகழ்ச்சியில், மக்கள் அளிக்கும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, இணையதளத்தில் பதிவு செய்ய, மாநகராட்சி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 15 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும்.பெங்களூரு மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், மெட்ரோ ரயில், குடிசை மேம்பாட்டு ஆணையம், போலீஸ், பி.எம்.டி.சி., வருவாய் துறை உட்பட அனைத்து துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்று, மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்து, அரசு திட்டங்கள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

gopalasamy N
ஜன 05, 2024 13:34

Nothing will happen in TN most of these drama done and after came to power petitions thrown to dustbin only unwise will follow these advertisement


Fayaz Ahmed
ஜன 03, 2024 17:45

Good idea of the Karnataka government.. This is the duty of the government to look after public relations needs .. mainly Bangalore roads are too worst... This must be improve n immediately with out further delay... Do the needful..


அப்புசாமி
ஜன 03, 2024 13:01

நாப்பது பர்சண்டை வீட்டிற்கு வரும் ஆளிடம் குடுத்துரலாம்.


thangam
ஜன 03, 2024 09:56

கன்னட வெறியர்கள் ... வீட்டுக்கு வீடு வந்து கன்னட பெயர் பிளாக்கை வைக்க சொல்வார்கள் .. பேர் கூட கன்னடத்தில்.. மொழி பற்று அல்ல. வெறி பிடித்த காட்டு மிருங்கண்கள்


Ramesh Sargam
ஜன 03, 2024 06:22

நான் ராமமூர்த்தி நகரின் Sir M.V. நகர் பகுதியில் வசிப்பவன். ஆனால் இப்பொழுது அமெரிக்காவில் உள்ளேன் . எங்கள் ஏரியாவின் முக்கியமான பிரச்சினைகள்: 1) காவிரி நீர் வாரத்திற்கு ஒரு நாள், அதுவும் நான்கு மணி நேரம் மட்டும்தான் வருகிறது. குறைந்த பட்சம் ஐந்து மணிநேரம், வாரத்தில் மூன்று நாட்கள் கொடுத்தால், அடுத்தமுறையும் காங்கிரஸ் ஆட்சி guarantee. 2) குப்பைகள் தினம் தினம் அள்ளப்படுவதில்லை. வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டுமுறை அந்த குப்பைகளை எடுத்து செல்லும் சிறிய வாகனம் வரும். அதுவும் நம் வீட்டிற்கு முன் வரும்போது அது முழுவதும் ரொம்பி, வழிந்துகொண்டு வரும். ஆகையால், பெரியாவாகனமாக வந்து, எல்லா குப்பைகளையும் தினம் தினம் அப்புறப்படுத்தவேண்டும். 3) தெரு நாய்கள் பிரச்சினை. ஒன்று ஏரியாயில் அந்த தெரு நாய்களுக்கு பரிதாபப்படுபவர்கள் அவர்கள் வீட்டிற்குள் கொண்டுசென்று அவற்றை பராமரிக்கவேண்டும். அப்படி அவர்கள் செய்யாத பட்சத்தில் நாய் பிடிக்கும் வாகனத்தில் அவர்களை கொண்டு சென்று municipal corporation என்ன செய்யுமோ அதை செய்யுங்கள். இப்போதைக்கு இந்த மூன்று பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வேண்டும். நன்றி.


Pavithra
ஜன 03, 2024 20:20

அமெரிக்காவுல வேல பாக்குற உங்களுக்கு Diversity and Inclusion பத்தி கண்டிப்பா தெரிஞ்சிருக்கும் ஆனாலும் அது எதுவும் உங்கள் பதிவுகளில் நான் பார்த்ததே இல்லை சார்


D.Ambujavalli
ஜன 03, 2024 05:59

எத்தனை போலி ஆபீசர், அரசு ஊழியர் என்று சொல்லிக்கொண்டு வீடுகளை நோட்டமிடப் போகிறார்களோ? ரேஷன் பொருள்களை வழங்குவது வேறு ஆவணங்கள் கண்டவர்கள் கையாண்டு, பல ரகசியங்கள் லீக் ஆக வாய்ப்புண்டு


Kasimani Baskaran
ஜன 03, 2024 04:55

அரசு அலுவலகங்களை நெறிப்படுத்தாமல் செருப்புக்கு தகுந்தது போல காலை வெட்டுவது ஆபத்தான அணுகுமுறை. என்ன இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எடுத்துக்கொள்ளப்படும் முயற்சி பாரட்டத்தகுந்ததுதான்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை