உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பரூக் கட்சிக்கு சுயேச்சை ஆதரவு: காங்., தயவு இனி தேவையில்லை

பரூக் கட்சிக்கு சுயேச்சை ஆதரவு: காங்., தயவு இனி தேவையில்லை

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலில், தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தேசிய மாநாட்டு கட்சிக்கு, நான்கு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் நேற்று ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, சட்டசபையில் அக்கட்சியின் பலம், 46 ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ஆதரவு இல்லாமலேயே, அக்கட்சி பெரும்பான்மையையும் பெற்றுள்ளது.யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு, செப்டம்பர், 18, 25 மற்றும் கடந்த 1ம் தேதி என, மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள், 8ம் தேதி வெளியாகின. முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, 42 இடங்களிலும்; அக்கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த, காங்கிரஸ் ஆறு இடங்களிலும் வென்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vzkm47xv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ஜ., 29 இடங்களில் வெற்றி பெற்று, இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, வெறும் மூன்று இடங்களை மட்டுமே பிடித்தது.இந்நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தேசிய மாநாட்டு கட்சிக்கு, சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற பியாரே லால் சர்மா, சதீஷ் ஷர்மா, சவுத்ரி முகமது அக்ரம், ராமேஷ்வர் சிங் ஆகிய நான்கு எம்.எல்.ஏ.,க்கள் நேற்று ஆதரவு தெரிவித்தனர். இதனால், தேசிய மாநாட்டு கட்சியின் பலம், சட்டசபையில், 46 ஆக அதிகரித்துள்ளது.பெரும்பான்மைக்கு, 45 பேர் ஆதரவு தேவை என்ற நிலையில், தற்போது காங்., ஆதரவு இல்லாமலேயே, 46 என்ற எண்ணிக்கையை தேசிய மாநாட்டு கட்சி அடைந்துள்ளது.காங்கிரசின் ஆறு இடங்களையும் சேர்த்தால் ஒட்டு மொத்த பலம், 52 ஆக அதிகரிக்கும். தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் ஆதரவு இல்லாமலேயே தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி அமைத்து விட முடியும் என்றாலும், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ., பின்வாங்கினாலும், அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு விடும்.இதேபோல, பா.ஜ.,வுக்கு மூன்று சுயேச்சைகள் நேற்று ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையில், தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ஸ்ரீநகரில் நேற்று நடந்தது. அதில், அக்கட்சியின் சட்டசபை குழு தலைவராக, பரூக் அப்துல்லாவின் மகன் ஒமர் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டார். இவர், துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவை விரைவில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Rasheel
அக் 11, 2024 13:29

7 லக்ஷம் பேர் காஷ்மீரி ஹிந்துக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட காரணாமாக இருந்த பாகிஸ்தானிய ஆதரவாளர்களுக்கு பச்சைக்கொடி காட்டுவதை என்னவென்று சொல்லுவது?


தமிழ்வேள்
அக் 11, 2024 12:55

கொலைகாரர்களை ஆதரிக்கும் இந்து சுயேச்சை எம் எல் ஏ க்களுக்கு சொந்த மூளை சுயபுத்தி என்பது கிடையாதா ?


sridhar
அக் 11, 2024 12:40

காங்கிரஸ் தேசத்தில் யாருக்குமே தேவை இல்லை.


Rpalnivelu
அக் 11, 2024 14:56

அதை காங்கிரஸ் என்று சொல்லாதீங்க. ரஹூல் ராஜீவ் பெரோஸ் கான் குடும்ப கட்சி


Sivagiri
அக் 11, 2024 12:31

முதல்ல , அப்டியீ பில்டப் பண்ணிட்டே இருப்பாய்ங்க , அப்புறம் , சரி கொடுக்கிறதை கொடுயா-ன்னு கால்ல விழுந்து வாங்கிட்டு போவாய்ங்க . . . . செருப்பால அடிச்சாலும் போக மாட்டாய்ங்க . . .


Raman
அக் 11, 2024 11:36

Comments of Thanjai Mannar show his mindset.. DMK grooming for years, Rs 200 stuff..he must be wondering when he would receive Rs 200 this day...for these guys country last, that is unfortunate


bgm
அக் 11, 2024 15:09

அவனா தஞ்சை மன்னநா. கேவலம் ஒரிஜினல் பேர போட பயப்படும் கூழை. 200 ரூவா அடிமை மன்னன் பெயரில் சொந்த நாட்டையே காட்டி கொடுக்கும் எட்டப்பன்


krishna
அக் 11, 2024 17:09

THANJAI MANNAR IS 100% GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI. WHAT HE NEEDS IS 200 PKUS QUARTER. FOR THIS HE WILL SELL ANYTHING INCLUDING HIMSELF.SAME DESIGN PAAMARAN VENUGOPAL BOLI VELAN IYENGAR MURUGAN THAMIZHAN VAIKUNDESWARAN ARASU ETC ETC 200 ROOVAA OOPIS BOY CLUB.


Raman
அக் 11, 2024 11:33

DMK guy...did you receive rs 200 this day ? Hurryup


Lion Drsekar
அக் 11, 2024 11:30

இப்படியே போனால் அடுத்து காங்கிரஸும் பிஜிபியும் கூட்டு சேர்ந்து ஆட்சியை அமைப்பார்கள், எல்லா குறுநில மன்னர்களும் உடையமானதே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அப்படி இருக்க பி ஜெ பி யம் காங்கிரசுக்கு எதிராக உள்ள கட்சிதானே , தேர்தல் என்று வரும்போது எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றாக ஒன்றுசேர்ந்து மக்கள் ஒன்றுபடாமல் இருக்க , மக்களுக்கு சேவைசெய்ய ஒன்று திரளும்போது இந்த இரண்டு கட்சிகளும் ஏன் ஒன்று சேரக்கூடாது, ஹிரண்யாய நமஹ


தஞ்சை மன்னர்
அக் 11, 2024 11:15

ஆர் எஸ் எஸ் கும்பலை சேர்ந்தவர்கள் என்னதான் கோல் மூட்டி பார்த்தாலும் ஒன்னும் நடக்க மாட்டேங்குது என்ன செய்யவது வளர்ப்பு அப்படி


ஆரூர் ரங்
அக் 11, 2024 10:51

காங்கிரஸ் 370 வது பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் எனப்பிரச்சாரம் செய்தும், தான் போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் தோல்வியடைந்தது. 370லாம் முடிந்தகதை எனக்கூறி ஒதுக்கிவிட்டு மற்ற பிரச்சினைகளடிப்படையில் போட்டியிட்ட அப்துல்லா குடும்பம் ஆட்சியமைக்கிறது. 370 பற்றிய விவாதங்கள் இனி எழாது. காஷ்மீர் தேசீய நீரோட்டத்தில் இணையும் காலம் நெருங்குகிறது.


ஆரூர் ரங்
அக் 11, 2024 10:42

நான்கில் மூவர் ஹிந்துக்கள். பதவியாசை மூர்க ஆட்களிடம் சேர வைக்கிறது. இன்னும் திருந்தவில்லை. வாக்களித்த அறிவிலிகள் சிந்திக்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை