உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேற்றுமையில் ஒற்றுமைமிக்க நாடு இந்தியா; மோகன் பகவத்

வேற்றுமையில் ஒற்றுமைமிக்க நாடு இந்தியா; மோகன் பகவத்

புனே: வேற்றுமையில் ஒற்றுமைமிக்க நாடு இந்தியா என்றும், பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு இங்கு இடமில்லை என்று ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். புனேவில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நீண்ட காலமாக நாம் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். இதனை உலக நாடுகளுக்கும் கொண்டு சென்றால், நம்முடைய நாடு தான் முன்மாதிரியான நாடாக திகழும். ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு, இந்து தலைவர்கள் இதுபோன்று பல்வேறு இடங்களில் செய்வார்கள் என்று சிலர் நினைக்கின்றனர். அது ஏற்றுக்க முடியாதது. அயோத்தி ராமர் கோவில் இந்துக்களின் நம்பிக்கை. எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்னையை கிளப்புகிறார்கள். இதனை எப்படி அனுமதிக்கிறார்கள்? இது தொடர அனுமதிக்கக் கூடாது. நம்மால் ஒற்றுமையுடன் வாழ முடியும் என்பதை இந்தியா நிரூபித்துக் காட்ட வேண்டும். இந்தியர்கள் முன்பு செய்த தவறுகளை சரி செய்து விட்டு, உலக நாடுகளில் இந்தியாவை முன்மாதிரியான நாடாக மாற்ற பணியாற்ற வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் நம்முடைய நாடு இயங்கி வருகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு வழிநடத்துகிறது. மேலாதிக்கத்தின் நாட்கள் முடிந்து விட்டது, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Nethiadi
டிச 20, 2024 16:41

இந்த சங்கீ லாம் கருத்து சொல்லு கிர அளவுக்கு நம்ம நாட்டோட நிலைமை இருக்கு.


V வைகுண்டேஸ்வரன்
டிச 20, 2024 11:56

இவரு நாக்பூர் காடேஸ்வரா அல்லது நாக்பூர் அரஜன் சம்பத் தா? அப்பப்ப ஸ்கிரீன் ல வருவார். ஏதாவது காமெடி பண்ணிட்டு போயிடுவார். யாரும் சீரியஸா எடுத்துக்கவும் மாட்டாங்க. பாவம்.


Sakthi
டிச 25, 2024 07:55

உங்க பேரு உண்மையான வைகுண்டேஸ்வரனா. பொய்குண்டேசவரண்ணு வச்சுக்கோங்க. பொருத்தமா இருக்கும்.


முக்கிய வீடியோ