உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ககன்தக் -243 குண்டு வெற்றிகரமாக சோதனை

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ககன்தக் -243 குண்டு வெற்றிகரமாக சோதனை

புதுடில்லி: நீண்ட தூரம் பறந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் ககன்தக் -243 என்ற குண்டை, இந்திய விமானப்படை வெற்றிகரமாக பரிசோதித்தது. விமானத்தில் இருந்து எதிரி நாட்டுப் படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான குண்டுகள், பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஜே.எஸ்.ஆர். டைனமிக்ஸ் மூலம் சறுக்கு குண்டுகள் (gliding bombs) வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. விமானத்திலிருந்து ஏவப்பட்டதும், காற்று இயக்கத்தின் உதவியுடன் இலக்கை நோக்கி செல்லும் வகையில் இந்த குண்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.12 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கக்கூடிய விமானத்தில் இருந்து குண்டுகளை வீசினால், அது 144 கிலோமீட்டர் முதல் அதிகபட்சமாக 180 கிலோமீட்டர் வரை தொலைவில் உள்ள இலக்குகளை சரியாக தாக்கும். இதனால், எதிரி நாடுகளின் வான்வெளிக்கு செல்லாமலேயே, அந்த நாடுகளில் இருக்கும் இலக்குகளை தாக்க முடியும்.ககன்தக் -243 சறுக்கு குண்டு சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டதன் மூலம் உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி திறன் மேலும் வலுவடைந்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இந்திய விமானப்படை, எதிரிகளைத் தாக்கும் திறன் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, இந்த சோதனை எங்கு நடத்தப்பட்டது என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 03, 2026 14:04

தீவிரவாதிகளின் உற்பத்தி மையமாக இருக்கும் மதரசாக்களில் போட்டு டெஸ்ட் பண்ண என்ன தயக்கம் >>


Anand
செப் 03, 2026 10:32

வாழ்த்துக்கள்...


Mohan
செப் 03, 2026 09:38

வாழ்த்துக்கள் மேலும் நம் ஆத்ம நிருபர் சிறக்கட்டும் ...தற்சார்பு


Dv Nanru
செப் 03, 2026 09:33

ஆஹா என்ன சந்தோஷம் விமானப்படை அசத்திவிட்டது உலகமே வியந்து பார்க்கின்றது உண்மையிலேயே இந்திய விமானப்படையின் இந்த சாதனை நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் ஒன்றாகும். உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே இத்தகைய அதிநவீன, துல்லியத் தாக்குதல் ஆயுதங்களை உருவாக்கி வெற்றி காண்பது, இந்தியாவின் பாதுகாப்புத் துறை தன்னிறைவு அடைந்து வருவதற்கான தெளிவான சான்று. உலக அரங்கில் இந்தியாவின் ராணுவ வலிமையும், தொழில்நுட்பத் திறனும் மேலும் உயர்ந்து நிற்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்திய விமானப்படை நீண்ட தூரம் சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் ஆயுதங்களை வெற்றிகரமாகப் பரிசோதித்து வருகிறது. இதுவரை பாதுகாப்புத் துறைக்கான ஆயுதங்கள் பெருமளவில் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போதைய வெற்றி பிற நாடுகளைச் சார்ந்திருப்பத்தைக் கணிசமாகக் குறைத்துள்ளது. ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களைத் தயாரிப்பது நாட்டின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் காட்டுகிறது. எதிரி நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இத்தகைய துல்லியத் தாக்குதல் ஆயுதங்கள் பெரிதும் உதவுகின்றன. ராணுவத் தேவைகளை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்வது, இறக்குமதிச் செலவுகளைக் குறைத்து நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்ப்பதோடு புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது. வல்லரசு நாடுகளுக்கு இணையான அதிநவீன தொழில்நுட்பத்தை இந்தியா அடைந்து வருகிறது என்பதற்குச் சான்றாகத் திகழும் இந்த முன்னேற்றம், நாட்டின் உலகளாவிய வல்லரசுப் பயணத்தை மேலும் வேகப்படுத்துகிறது. ககன்சக்தி / ககன்தக் போன்ற உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட துல்லியத் தாக்குதல் குண்டுகளின் வெற்றிகரமான பரிசோதனை மற்றும் இந்தியாவின் பாதுகாப்புத் திறன் வளர்ச்சி. இந்திய விமானப்படை நீண்ட தூரம் சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை வெற்றிகரமாகப் பரிசோதித்து வருகிறது, இதுவரை பாதுகாப்புத் துறைக்கான ஆயுதங்கள் பெருமளவில் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. தற்போதைய வெற்றி, ஆயுதத் தேவைகளில் இந்தியா பிற நாடுகளைச் சார்ந்திருப்பத்தைக் கணிசமாகக் குறைத்துள்ளது, ஆத்மநிர்பார் பாரத் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களைத் தயாரிப்பது நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியைக் காட்டுகிறது. எதிரி நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இத்தகைய துல்லியத் தாக்குதல் ஆயுதங்கள் பெரிதும் உதவுகின்றன, இந்தியப் படைகளின் இந்த நவீனமயமாக்கல், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. ராணுவத் தேவைகளை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்வது, தேவையற்ற இறக்குமதிச் செலவுகளைக் குறைத்து நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கிறது, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையில் ஏற்படும் இந்த முன்னேற்றம், இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளையும் ஆராய்ச்சி வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. வல்லரசு நாடுகளுக்கு இணையான அதிநவீன தொழில்நுட்பத்தை இந்தியா அடைந்து வருகிறது என்பதற்குச் சான்றாக இது திகழ்கிறது, தன்னிறைவு பெற்ற பாதுகாப்புத் துறையும், மேம்பட்ட ராணுவ வலிமையும் இந்தியாவின் உலகளாவிய வல்லரசுப் பயணத்தை வேகப்படுத்துகின்றன.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி