உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபாவில் எதிரொலித்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: பா.ஜ., எம்.பி.,க்கள் வெட்கக்கேடு என முழக்கம்

லோக்சபாவில் எதிரொலித்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: பா.ஜ., எம்.பி.,க்கள் வெட்கக்கேடு என முழக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பற்றி எதிர்க்கட்சிகள் எழுந்து நின்று விளக்கம் அளிக்க வேண்டும் என பா.ஜ., எம்.பி., அனுராக் தாக்கூர் லோக்சபாவில் வலியுறுத்தினார். பா.ஜ., எம்.பி.,க்கள் 'வெட்கக்கேடு.. வெட்கக்கேடு..' என முழக்கமிட்டனர்.

சனாதனம்

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் லோக்சபாவில் நடைபெற்றது. அப்போது பா.ஜ., எம்.பி., அனுராக் தாக்கூர், ஆளும்கட்சியின் பல்வேறு சாதனைகளை பற்றியும், எதிர்க்கட்சிகளின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் பேசினார். அவர் பேசியதாவது: தேர்தல் முடிவு வெளியான ஜூன் 4ல் இருந்து 99 இடங்களை பெற்ற கட்சி, 240 இடங்களை விட அதிகம் வெற்றிப்பெற்றது போல் சித்தரிக்க முயற்சிக்கிறது. பிரதமர் மோடியின் ஆட்சியில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது; ஆனால் எதிர்க்கட்சியை சேர்ந்த உதயநிதி சனாதன தர்மத்தை இழிவுப்படுத்துகிறார். இவ்வாறு அனுராக் தாக்கூர் பேசினார்.அனுராக் தாக்கூரின் இந்த பேச்சுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது குறுக்கிட்டு பேசிய திமுக எம்.பி., தயாநிதி, ''சனாதன விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. லோக்சபா விதி எண் 352ன் படி, அனுராக் தாக்கூரின் கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்தார்.

பேச தயாரா

இதற்கு பதிலளித்த லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ''அப்படியென்றால் நீங்கள் (எதிர்க்கட்சியினர்) அனைவரும் விதி எண் 352ன்கீழ் பேச தயாராக இருக்க வேண்டும். நீட் விவகாரம் கூட நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதுபற்றி லோக்சபாவில் ஏன் பேசுகிறீர்கள்?'' எனக் கேள்வி எழுப்பினார்.

வெட்கக்கேடு

பின்னர் பேசிய அனுராக் தாக்கூர், ''தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து எதிர்க்கட்சிகள் எழுந்து நின்று விளக்கம் அளிக்க வேண்டும்'' என்றார். அப்போது, 'வெட்கக்கேடு.. வெட்கக்கேடு..' என ஆளும் பா.ஜ., எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

மதுரை வாசு
ஜூலை 03, 2024 16:52

இங்கிருக்கும் கள்ளக்குறிச்சிக்கு வழிதெரியதவர்கள் தூரத்திலிருக்கும்.மணிப்பூர் பற்றி பேச அருகதை இருக்கா?


மமனோகர்
ஜூலை 02, 2024 10:12

இந்தி மொழியில் அக்கறை காட்டாத பேரறிஞர் அண்ணா, நாஞ்சில் மனோகரன், முரசொலி மாறன், வைகோ போன்றோர் மக்களவையில் கோலோச்சிய சரித்திரம் மறக்க முடியாது. மத்தியிலே ஆட்சிக்கு ஆதாரமாக இருந்தவர்கள் இந்த இந்தி தெரியாதவர்கள் தான். மொழிபெயர்க்க இப்போதுதான் வசதிகள் இருக்கின்றனவே


Aap ki Chocobar
ஜூலை 02, 2024 09:19

மணிப்பூரை எட்டியே பார்க்காதவர்கள் இப்படி கேள்வி கேட்க எந்த அருகதையும் இல்லாதவர்கள்.


konanki
ஜூலை 01, 2024 23:26

மணிப்பூர் போன திஹார் ராணி கள்ள சாராய கள்ள குறிச்சிக்கு ஏன் போகவில்லை?


Rathinasabapathi Ramasamy
ஜூலை 02, 2024 10:31

மணிப்பூர் பற்றி பேசுவதுமில்லை இன்னும் அங்கு கலவரம் நடந்து கொண்டுதான் உள்ளது. அதை பற்றி வாய் திறக்க மாட்டார்கள்


Purushothaman S
ஜூலை 01, 2024 22:23

மிகவும் தெளிவான உண்மை


Neethan K
ஜூலை 01, 2024 18:48

இங்கிருந்து ஜெர்மனி வேலைக்கு செல்பவர்கள் ஜெர்மன் மொழி கற்றுக் கொள்கிறார்கள்.. இங்கிருந்து பிரான்ஸ் வேலைக்கு செல்பவர்கள் அந்த உள்ளூர் மொழியை கற்றுக் கொள்கிறார்கள்... ஆனால் இங்கிருந்து தேர்வு செய்யப்பட்டு அனுப்பும் எம்பிக்கள்.. டெல்லி செல்லும் பொழுது அங்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஹிந்தி மொழியை கற்றுக் கொள்வதே இல்லை.. இவர்கள் பேசும் மொழி யாரும் அங்குள்ள பெரும்பான்மையானவர்களுக்கு தெரிவதில்லை. பாராளுமன்றத்தில் பெரும்பாலும் விவாதங்கள், வாத, பிரதிவாதங்கள் ஹிந்தி மொழியிலேயே நடக்கின்றன. இந்த நிலையில் இங்கு சென்றவர்கள் ஹிந்தியை பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாமல்.. காலத்தை ஓட்டுவது.. எந்த வகையில் சரியாக இருக்கும்.? கனிமொழி, டி ஆர் பாலு, திருச்சி சிவா.. தயாநிதிமாறன், ஜெகத்ரட்சகன், மாணிக் தாகூர், ஆ ராசா உள்ளிட்ட மூத்த எம்பிக்களுக்கு கூட சரியாக ஹிந்தி தெரியாது என்ற நிலை.. தமிழகத்துக்கு பெரும் நஷ்டம் தான் தரும்.


Barakat Ali
ஜூலை 01, 2024 20:19

யார் சொன்னது ?? திகார் திரும்பாத ராணிக்கு, கண்கள் பணித்து இதயங்களை இனிக்க வைத்த மாறன் ஆகியோருக்கு ஹிந்தி நன்கு தெரியும் ......


krishnan radha
ஜூலை 02, 2024 08:46

எல்லோரும் புரயக்கூடிய ஆங்கிலத்தில் பேசலாமே? ஏன இந்தியில் பேசவேண்டும்? இந்தியில் பேசினாலும் மொழிபெயர்ப்பு வசதி உள்ளதே.


Aap ki Chocobar
ஜூலை 02, 2024 09:21

உண்மைதான். ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற அந்நிய நாடுதான் டெல்லியும்.


manokaransubbia coimbatore
ஜூலை 01, 2024 18:37

ஆசிரியர் அவர்களே கமெண்ட்ஸ் கீழே 3 ஸ்டார் உள்ளது ஆனால் அது எதற்கு என்று புரிய நன்று மோசம் தவறு என்று தெரியல. ஆகவே அதற்கு எப்படி மார்க் செய்வது என்று புரியவில்லை . அதற்கு ஏதாவது செய்தால் பரவாயில்லை


Bellie Nanja Gowder
ஜூலை 01, 2024 20:18

நீங்கள் நட்சத்திரத்தின் மேல் கர்சரை வைத்தால் அது என்ன என்பதை அதுவே சொல்லும்.


Sakthi
ஜூலை 01, 2024 16:41

இங்க எதாவது சொன்னால் ஒன்னு குஜராத் பூவனுக இல்லடி உபி போவாங்க. இந்த கேரளா கர்நாடக தெலுங்கானா WB எல்லாம் கண்ணு தெரியாது.


venugopal s
ஜூலை 01, 2024 16:34

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட தமிழ்நாட்டைப் பற்றிப் பேச உரிமை அற்றவர்கள்!


Barakat Ali
ஜூலை 01, 2024 20:14

மணிப்பூரில் சுமார் அறுபதாண்டுகளாகக் கலவரம் உண்டு ... காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்து ..... யூபிஏ ஆட்சியின் பத்தாண்டுகள் வரை ... அப்போதெல்லாம் காங்கிரஸ் உடன் சேர்ந்து அடித்து சுருட்டுவதில் திமுக பிசியாக இருந்தால் அதை ஒரு பிரச்னையாகவே பார்க்கவில்லை ... மணிப்பூர் குறித்து கேள்வி கேட்கும் நாரசொலி அடிமைகளுக்கு அது மேப்பில் எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாது ....


நிக்கோல்தாம்சன்
ஜூலை 01, 2024 23:00

தமிழ்நாட்டில் குய்ட் இந்தியா ன்று எழுதிய கோமகன்களை என்னவென்று சொல்வீர்கள் ?


D.Ambujavalli
ஜூலை 01, 2024 16:30

மொத்தத்தில் மாநில அளவிலும், மத்தியிலும், எதிர்க்கட்சிகளின் குற்றங்களை பூதக்கண்ணாடி கொண்டு பார்த்து, தங்கள் குறைகளை நியாயப்படுத்தும் செயல்தான் நடக்கிறது


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி