உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரண்டாக உடைந்தது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

இரண்டாக உடைந்தது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

- நமது சிறப்பு நிருபர் -

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இரண்டாக உடைந்தது. அதில் அதிருப்தியில் இருந்த மணிஷ் பிரம்பட், தனியாக கட்சி துவங்கியதுடன், அபிஜித் தீப்கே, டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலின் டீம் ஆக செயல்பட்டதாக குற்றம்சாட்டினார்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற இயக்கம் கிண்டலாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் நிறுவனர் அபிஜீத் திப்கே வெளிநாட்டில் இருந்த நிலையில், தான் இந்தியா திரும்பிய பிறகு, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி, நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக டில்லியில் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.இந்நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா இயக்கம் இரண்டாக உடைந்தது. அந்த இயக்கத்தில் இருந்து சமீபத்தில் விலகிய மணிஷ் பிரம்பட், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி - ஜனநாயகம் என்ற புதிய கட்சியை துவங்கி உள்ளார்.இது தொடர்பாக மணிஷ் கூறியதாவது: இன்று நாங்கள் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி- ஜனநாயகம் என்ற பெயரில் புதிய கட்சியை துவக்குகிறோம். மக்களின் ரத்தம், வியர்வை சிந்தி உருவான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, பின்னர் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் தேர்வு செய்யப்பட்ட ஒரு குழுவாக தன்னை மாற்றிக் கொண்டதே இதற்கு காரணம். அரசியல் பேரங்களில் ஈடுபடுவதே அவர்களின் நோக்கம். மாணவர்கள் அல்லது பிற மாநில மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்காக போராடுவதில் அவர்கள் எந்த ஆர்வமும் காட்டவில்லை. மாறாக கெஜ்ரிவால் கட்டளைப்படி மட்டும் செயல்படும் அவர்கள், பாஜவுக்கு எதிரான கட்சியை ஆதரிப்பதற்காக பாஜவை எதிர்க்க விரும்புகிறார்கள். சிஜேபி கட்சி குழுவுக்காக தேர்வு செய்யப்பட்ட எட்டு பேருக்கும் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்பு உள்ளது. ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தை ஆதரித்தவர்களுக்கு சிஜேபியில் எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

விருமாண்டி
செப் 05, 2026 20:43

இப்படி உண்மையான செய்திகளை வெளியிட்டு பாஜகவினரை மகிழ்ச்சில் ஆழ்த்திய மலருக்கு மிக்க நன்றி.


விருமாண்டி
செப் 05, 2026 04:23

பாஜகவை விட்டு விலகிய அண்ணாமலை இப்போது என்ன செய்கிறார்?


theruvasagan
செப் 04, 2026 10:45

யாரோ ஹிட் அடிச்சிருக்காங்க போல. இப்ப பாருங்க நெடி தாங்காமல் ஒவ்வொரு கரப்பான் பூச்சியா வெளிய ஓடிவரும்.


venkatan
செப் 04, 2026 07:41

ஊழலை எதிர்க்க ஒருகாலத்தில் ஒன்றுக்கூடிய இயக்கமே உடைந்து சில கட்சிகள் தோன்றின. பனைமரத்துக்கு அடியில் இருந்துகொண்டு ப் பாலைக்குடித்தானாம் என்று ஒரு சொலவம் உண்டு.


Aarbinms
செப் 04, 2026 07:19

கரப்பான் பூச்சி தலை இல்லாமலும் சிறிது காலம் வாழ முடியும் என்று சொல்வார்கள். இதுங்க சாகும் தருவாயில் உள்ளது சரி. ஆனால் இத போன்ற கேடு கெட்ட இயக்கங்கள்/ கட்சிகள் செய்து விட்டுப் போன ஊழல்கள் / நாசங்கள் பல காலங்கள் தொடருதுதே. இவற்றை உளவுத்துறை மூலம் கண்டறிந்து முளையிலேயே அழிக்க வேண்டாமா? அஜித் தோவல்/அமித் ஷா போன்றவர்கள் கவனம் செலுத்த வேண்டாமா. நீதித்துறை சீர்திருத்தம் செய்யணும் முதலில்.


Kasimani Baskaran
செப் 04, 2026 06:56

கரப்பான் பூச்சி என்பது துடைப்பக்கட்சியில் மீந்து போன சில தென்னங்குச்சிகள். அவற்றை தொகுத்து, புதிய வண்ணம் பூசி வேறு வடிவத்தில் வழங்கியது வின்சி மற்றும் சோரோஸ் போன்ற அந்நிய சக்திகள். அது குப்பைக்கு போகும் என்பது நிச்சயம் - அதே சமயம் மத்திய அரசு பிரச்சினைகளை புரிந்துகொண்டு அதற்கு தீர்வு காண முயல்வது ஒரு நல்ல விஷயம். பொதுவாகவே தேர்வு முறைகளை தவறு நடக்காமல் இருக்கும் வகையில் நவீனப்படுத்துவது அவசியம்.


karupanasamy
செப் 04, 2026 05:14

அடுத்தது மூட்டை பூச்சி முன்னேற்ற கழகம்னு ஆரம்பிப்பானுங்க


Lakshminarasimhan
செப் 04, 2026 06:53

அதான் தற்குறி கும்பலின் த வெ க இதற்கு ஈடாக உள்ளதே இன்னும் எதற்கு முன்னேற்ற கழகம் ?


Vasan
செப் 04, 2026 03:20

கரப்பான் பூச்சி உடைந்தது என்று கூறுவது தமிழ் இலக்கண பிழையல்லவோ? கரப்பான் பூச்சி பிய்ந்தது என்றல்லவோ தமிழ் இலக்கண சுத்தமாக சொல்ல வேண்டும்?


Vazhga Bharatham
செப் 04, 2026 07:54

கட்சி உடைந்தது.


Raghu
செப் 04, 2026 02:35

எதிர்த்து கேள்வி கேட்டால் தேச விரோதி பட்டம் மட்டும் உடனே கிடைக்கும்


sankaranarayanan
செப் 04, 2026 01:10

உச்ச மன்ற நீதிபதி கரப்பான் பூச்சி கழகம் என்று கூறியதை இவர் நிஊபித்துக் காட்டி விட்டார் துடைப்பக்கட்டை சின்ன உடைய கேஜரிவாலுக்கு கரப்பான் பூச்சி தான் துணை துடைப்பத்துக்கும் கரப்பான் பூச்சிக்கும் அவ்வளவு தொடர்பு உள்ளது என்பதை மக்கள் போக போக அறிவார்கள் கடைசியில் அதே துடைப்பக்கட்டையால் அந்த கரப்பான் பூச்சி அடிபட்டு அழிந்தே போயிடும்


மேலும் செய்திகள்