உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதி லட்டு விவகாரம்; பேட்டி அளிக்கும் அவசியம் என்ன: சந்திரபாபுவுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி!

திருப்பதி லட்டு விவகாரம்; பேட்டி அளிக்கும் அவசியம் என்ன: சந்திரபாபுவுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி!

புதுடில்லி: திருப்பதி லட்டு விவகாரத்தில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பினர். திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டது தொடர்பான ஆய்வறிக்கையில் தெளிவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.பிரசித்தி பெற்ற திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதை ஆய்வறிக்கையும் உறுதி செய்யப்பட்டது.இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி சுப்ரீம் கோட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று(செப்.,30) நீதிபதிகள் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது ஆந்திரா அரசு, 'லட்டு தயாரிப்புக்கு நெய் உரிய தரத்தில் இல்லாத போது சோதனைக்கு அனுப்பினோம். 2வது முறையும் சோதனைக்கு அனுப்பினோம். பின்னர் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டது' என விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பினர். அப்போது நீதிபதிகள் கூறியதாவது: * இந்த விவகாரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டவராக கடவுளை வைத்திருக்க வேண்டும்.* மத உணர்வுகளை மதிக்க வேண்டும்.* திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டது தொடர்பான ஆய்வறிக்கையில் தெளிவில்லை.* அரசியல் சாசனத்தை கையில் வைத்திருக்கும் முதல்வர் அலுவலகம் கவனமாக செயல்பட்டிருக்க வேண்டும்.* லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலையில் வந்த நிலையில் செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்?* திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்தது ஏன்?* எஸ்.ஐ.டி., குழுவின் அறிக்கை கிடைப்பதற்கு முன் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க வேண்டிய அவசியம் என்ன?* கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது. * லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் எங்கே?* சுவை மாறியதாக கூறப்படும் லட்டுகள் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனவா?* தற்போதைய நிலையில் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட நெய் லட்டு தயாரிக்க பயன்படுத்தவில்லை என்பது தெரிய வருகிறது. * தொடர்ந்து புகார் கிடைக்கபெற்றிருந்தால் நெய் டேங்கர்கள் அனைத்திலும் மாதிரி எடுத்திருக்க வேண்டும். * திருப்பதி லட்டு விவகாரத்தை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள எஸ்.ஐ.டி., விசாரிப்பதா? அல்லது சுதந்திரமான விசாரணை அமைப்பைக் கொண்டு விசாரிப்பதா? என்பதை மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

Mohan
அக் 06, 2024 10:00

தப்பை முதலில் ஒப்புக் கொள்ளணும், சரி செய்வது எப்படி என்று யோசிக்கணும் சிறுபான்மை ஆளுங்க தப்பு செஞ்சதை முழுசா போட்டு மூடிவிடணும்னு நினைச்சா என்னிக்கும் விடிவு காலமே வராது


spr
அக் 01, 2024 17:42

"மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது." இது ஒரு மாநில அரசு செய்ய வேண்டிய வேலை இதில் மத்திய அரசை இழுக்க வேண்டிய தேவையென்ன? அண்மைக் காலங்களில் திருப்பதி லைட்டின் சுவை குறைந்திருப்பது எல்லோரும் அறிந்த. மட்டமான நெய்யோ அல்லது நெய்யில் கலப்படமோ நடந்திருக்க வாய்ப்பு உண்டு முன்பு போல முந்திரி திராட்சை அளவும் இல்லை சர்க்கரை அதிகமாகியது போல இனிப்புச்சுவை அதிகம் என்பதுவும் மக்கள் யாவரும் அறிந்தும் பிரசாதம் எனக் கோயிலில் இருந்து பெறப்படுவதால் குற்றம் சொல்ல விரும்பாத நிலையில், சோதனைச்சாலை முடிவு வரும்வரை நீதிமன்றம் உட்பட எவருமே அது குறித்துப் பேசுவது முறையல்ல


vbs manian
அக் 01, 2024 09:28

யாரும் பேசக்கூடாதா. சோதனை அறிக்கையை சந்தேகிக்கிறார்கள். நீதிபதிகள் விஞ்ஞானிகளா. இன்றும் அரசு தரக்குறைவான பேக்கரி உணவகங்கள் மீது ரைட் விடுகிறது. விமானங்களில் கொடுக்கப்படும் உணவில் கரப்பு பல்லி காணப்படுகின்றன. ஐஸ்கிரீமில் மனித விறல் காணப்பட்டது. யாரும் புகார் செய்யக்கூடாது. அப்படித்தானே.


VENKATASUBRAMANIAN
அக் 01, 2024 08:23

இது சொன்னது வேண்டுமானால் தவறாக இருக்கலாம்.. ஆனால் நடந்ததை யாரும் மறைக்க முடியாது. முந்தைய ஆட்சியில் மாற்று மதத்தினரை வைத்து என்னவெல்லாம் செய்தார்கள் என்பது நாடே அறியும்


Durai Kuppusami
அக் 01, 2024 08:09

கோடிக்கணக்கான இந்துக்கள் மனம் மிகவும் புண்பட செய்த முதல் குற்றவாளி நீதான் இதையெல்லாம் அறிவே இல்லாமல் வெட்ட வெளிச்சம் ஆக்கியது உன் சின்ன புத்தி தான் தவறு இருந்தால் அதை வெளியே சொல்லாமல் அங்கேயே முடிவுக்கு கொண்டு வந்து இருக்கவேண்டும் அதைவிட்டு முந்திரி கொட்டை மாதிரி வெளியே சொல்லி உலகம் பூராவும் உள்ள இந்துக்கள் மனம் மிகவும் நோகடித்துவிட்ட நீதானே முதல் அயோக்கியன் உனக்கு மக்கள் மனத்திலிருந்து மன்னிப்பு கிடையாது... ஓம் நமோ நாராயணாய நம .......


xxxx
அக் 01, 2024 07:59

Yes


J.V. Iyer
அக் 01, 2024 03:09

இப்போதெல்லாம் பொதுப்பணத்தை சுருட்டிவர்கள் வெளியே. குற்றத்தை சொன்னவர்களுக்கு தண்டனை. விசித்திரம்.


Easwar Kamal
செப் 30, 2024 23:17

இது நாயடு கட்டி விட்ட கதை. 2 கோல்டிங்கள் சண்டையில் பெருமாளை உள்ளை இழுத்து விட்டுட்டானுவ. அதுதான் கோர்ட் சொல்லுது.


கோவிந்தரெட்டி
செப் 30, 2024 22:38

சுப்ரிம் கோர்ட்டுக்கு தெரியுமா அரசியல் வாசனை? நாயுடு பாவம் பத்து வருஷமா காஞ்சிபோய் கெடக்காரு. சூட்டோடு சூடாக பழி தீர்த்துக்க வாணாமா


பேசும் தமிழன்
செப் 30, 2024 21:47

உண்மையை.... முந்தைய அரசு செய்த தகிடுதத்தங்களை...நாட்டு மக்களுக்கு சொன்னதில் என்ன தவறு இருக்க முடியும் ??? ...இந்துக்கள் எந்த வழியிலும் ஒன்றுமையாகி விட கூடாது என்பதில் அனைவரும் ஒரே எண்ணத்தில் தான் இருக்கிறீர்கள் !!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை