உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எந்த திட்டமாக இருந்தாலும் குறைகள் இருப்பதை தவிர்க்க முடியாது: ஐகோர்ட்

எந்த திட்டமாக இருந்தாலும் குறைகள் இருப்பதை தவிர்க்க முடியாது: ஐகோர்ட்

சென்னை: எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளதாகவும், எந்த திட்டம் வந்தாலும், அதில் குறை இருப்பது தவிர்க்க முடியாதது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.கிளாம்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பஸ்களும் இயக்கப்பட வேண்டும் என கடந்த ஜன.,24ல் போக்குவரத்து துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ''கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பஸ்கள் இயக்க வேண்டும் என்ற உத்தரவு தொடர்பான பிரச்னையில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ரூ.400 கோடியில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன. தூரத்தை தவிர வேறு எந்த அசவுகரியமும் இல்லை'' என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.இதனையடுத்து நீதிபதி, ''எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. எந்த திட்டம் வந்தாலும் அதில் குறைகள் இருப்பதை தவிர்க்க முடியாது. ஆம்னி பஸ் உரிமையாளர்கள் - அரசு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி அதன் விபரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்'' என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்.,7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

g.s,rajan
பிப் 02, 2024 13:09

திட்டங்களில் குறைகளே நிறைந்து இருந்தால் என்ன செய்வது அதற்கு என்ன தீர்வு ...???


seshadri
பிப் 02, 2024 12:07

நீதிபதியே குறைகளை ஆதரித்து பேசும் போது வேறு யாரிடம் சொல்வது. திட்டம் தீட்டும் போதே எந்த மாதிரி குறைகள் வரும் என்று எதிர்பார்த்து செயல் பட வேண்டும். தமிழகத்தில் கொள்ளை அடிப்பது ஒன்றுதான் தெளிவாக திட்டமிட்டு நடக்கிறது. மற்றது எல்லாம் தெண்டம்தான். மக்களும் இந்த நாடும் நாசமாய் போகட்டும் என்று பி எஸ் வீரப்பா ஒரு படத்தில் பேசுவார் அதுதான் இன்று நடக்கிறது.


SIVA
பிப் 02, 2024 09:26

இதை நடைமுறை படுத்தும் அதிகார பதிவியில் உள்ளவர்கள் அரசு செலவில் பயணம் செய்வதால் மக்களின் கஷ்டம் அவர்களுக்கு புரியவில்லை , ஒரு நாள் பொது மக்களாக வாழ்ந்து பாருங்கள் , பாதி பேருந்துகள் இங்கு இருந்தும் ( ஐம்பது சதவீதம் ) மீதி பேருந்துகள் அங்கு இருந்தும் கிளம்பினாள் போக்குவரத்து குறைய வாய்ப்பு உள்ளது ....


Ramesh Sargam
பிப் 02, 2024 09:19

சிறுசிறு குறைகள் இருந்தால் மக்கள் பொறுத்துக்கொள்வார்கள். ஆனால் மக்களின் பெரும் குறையே, மாநகர் சென்னை மற்றும் சுற்றுவட்டார இடங்களிலிருந்து, கேளம்பாக்கம் வருவதுதான் பெரிய பிரச்சினை. அது பெரும் குறையும் கூட. இதை எப்படி நீதிமன்றம் 'சிறு குறை' என்று கருதுகிறதோ, புரியவில்லை.


Duruvesan
பிப் 02, 2024 05:52

ஆக விடியல் பிரதமர் ஆனவுடன் சென்னை சிங்காரம் ஆகும்


Ramesh Sargam
பிப் 02, 2024 00:53

'தூரத்தை தவிர வேறு எந்த அசவுகரியமும் இல்லை'. அந்த தூரம்தானய்யா பெரிய பிரச்சினை. யாரோ ஒரு சில பயணியர் கூறியதுபோல, வெளி மாவட்டங்களிலிருந்து கிளாம்பாக்கம் வர ஐந்து, ஆறு, ஏழு மணி நேர பிரயாணம். ஆனால், கிளாம்பாக்கத்திலிருந்து சென்னையின் பல பகுதிகளுக்கு செல்ல மூன்று, நான்கு, ஐந்து மணி நேர பிரயாணம். இது அசவுகரியம் இல்லையா? இல்லை, சென்னை மாநகரில் உள்ளவர்கள், கிளாம்பாக்கம் அருகில் வீடு, வேலை தேடிக்கொள்ளவேண்டுமா? நீதிமன்றமும் அரசு தரப்பு வக்கீலுக்கு ஆதரவாக இருப்பது வருத்தமளிக்கிறது.


GMM
பிப் 01, 2024 20:12

எந்த ஊரிலும் பழைய நிலையம் புது நிலையம் நகர பஸ் ஆட்டோ, ஷார் ஆட்டோ... மூலம் தொடர்பு இருக்கும். கோயம்பேடு நகர், புற நகர் பஸ். இணைப்பு, மெட்ரோ ரயில், ரயில்வே ஸ்டேஷன் இணைப்பு கொண்டது. தென் மாவட்ட மக்கள் அதிகம் சென்னையில். கிளம்பாக்கம் இருந்து நகர் முழுவதும் வந்து போய் தான் ஆக வேண்டும். ஆம்னி நிலையம் வேண்டாம். அரசு பஸ் நிலையமாக மாற்றப்படுமா? குறைகள் தவிர்க்க முடியாது. போக்குவரத்து வசதி இட பயன்பாடு மாற்றமும் கூடாது. ஆம்னி அரசியல் கட்சிகள் தொடர்பு இருக்கும். அவர்களை அசைக்கிறார்கள் என்றால் பெரிய. சேவை திட்டம் இருக்கும்?


Kanakala Subbudu
பிப் 01, 2024 20:08

பொது மக்களை பற்றி யாருக்கும் கவலை இல்லை. மக்கள் இனி பேருந்துக்கு பதில் ரயில் பயணங்களை மேற்கொண்டு விடுவார்கள் என்று தோன்றுகிறது. இரயில்வே நிர்வாகம் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் புதிய தடத்திலும் புதிய ரயில்களும் விடவேண்டும். ஒரு ரயில் என்பது 10-15 பேருந்துகளுக்கு சமம். இயற்கை உபாதைகளுக்கு வசதியும் இரு்க்கிறது


Naga Subramanian
பிப் 01, 2024 19:11

அதெல்லாம் கிடக்கட்டும். கோயம்பேடு முழுவதும் பெருக்கி துடைச்சு காலியும் பண்ணியாச்சு. அடுத்தது என்ன? அங்க யாரு கடைய விரிக்க போறாங்க. அதையும் சொல்லலாமுல்ல.


ஆரூர் ரங்
பிப் 01, 2024 18:49

திமுக ஆட்களுடன் பேச்சு வார்த்தைக்கு போனா வெறுங்கையுடன் போக முடியாதே???? அணில் இருந்த இடத்தில் இப்போ முதலை வாய் . ஸ்வீட் பாக்ஸ் இல்லாம போனா என்னாகும்?


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ