உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகம் வேண்டாம்; தொழில் தொடங்க ஆந்திரா தான் சரியான இடம்; ஜகா வாங்கியது தென்கொரிய நிறுவனம்

தமிழகம் வேண்டாம்; தொழில் தொடங்க ஆந்திரா தான் சரியான இடம்; ஜகா வாங்கியது தென்கொரிய நிறுவனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தென்கொரியாவை சேர்ந்த பிரபல காலணி நிறுவனம் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இருந்தது. தற்போது வாபஸ் பெற்று கொண்டு ஆந்திராவில் தொழிற்சாலை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.தென்கொரியாவை சேர்ந்த வாசவுங் பன்னாட்டு நிறுவனம் காலணிகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனம் அடிடாஸ் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கு சப்ளையராக இருந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம், இந்த நிறுவனம் தமிழகத்தில் காலணிகளை உற்பத்தி செய்ய தொழிற்சாலை அமைக்க, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு இருந்தது. ரூ.1720 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தால் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அந்நிறுனம் அறிவித்து இருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lv8b98po&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது இந்த நிறுவனம் தனது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வாபஸ் பெற்று கொண்டது. ஆந்திரா மாநிலம் குப்பத்தில் தொழிற்சாலை அமைக்க, ஆந்திர அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சட்டசபை தொகுதியான குப்பத்தில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது.இது குறித்து அந்த நிறுவனம் கூறியதாவது: இந்த ஆலையில் ஆண்டுக்கு 2 கோடி ஜோடி விளையாட்டு காலணிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். குப்பத்தில் உள்ள இரண்டு கிராமங்களில் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக தமிழகம் மற்றும் ஆந்திர அரசுடன் பேச்சு நடத்தி வந்தோம். தற்போது நீண்ட ஆலோசனைக்கு பிறகு ஆந்திராவில் அமைக்க முடிவு செய்து இருக்கிறோம். முதலீடு செய்வதற்காக, நாங்கள் பல்வேறு நாடுகளை மதிப்பீடு செய்தோம். இந்தியா மிகவும் உறுதியளிக்கிறது. ஏனென்றால் அது ஒரு பெரிய இளம் மக்கள்தொகையையும் நல்ல கல்வி முறையையும் கொண்டுள்ளது. பயிற்சி பெற்ற பொறியாளர்கள் எங்கள் வணிகத்திற்கு முக்கியம். இவ்வாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் இந்த நிறுவனம் செய்யும் முதல் முதலீடாக இது இருக்கும். தென் கொரியா, தைவான், வியட்நாம், இந்தோனேசியா மற்றும் சீனாவில் மட்டும் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 60 )

kalyanasundaram
நவ 19, 2025 16:52

DMK demand for very high bribe is the main cause


Kannadasan
நவ 17, 2025 07:09

கொஞ்ச நஞ்ச மாடா கமிஷன் அடிக்கிறீங்க கருணாநிதியை விட ஸ்டாலின் டேஞ்சர் என்பது இதுதானோ


MUTHUKUMAR C
நவ 16, 2025 08:44

வர வேண்டிய முதலீட்டில் கமிஷன் எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கு போட்டு கனவு கண்ட நேரத்தில் இப்படி காலை வாரி விட்டு விட்டுட்டாங்களே என்று அடிவருடிகள் ஆதங்கம்


Kalyanasundaram Linga Moorthi
நவ 16, 2025 01:26

they know they can get everything what Andhra promised


Kalyanasundaram Linga Moorthi
நவ 16, 2025 01:17

fact. there is a big commission behind thats why they have gone. why all the companies going to Andhra & Telengana? they are safe in every respect not like frauds 420 dmk cm chtalin and families and allies


மணிமுருகன்
நவ 16, 2025 00:17

ஊழல் கட்சி திமுக கூட்டணி கமிஷன் பேரத்தை கேட்டு ஓடியிருப்பார்கள்


சுந்தர்
நவ 15, 2025 21:41

அப்ப தெரியல...இப்ப நல்லா தெரிஞ்சிருச்சு. வரட்டா... பய்ய்...


Babu
நவ 15, 2025 21:36

கம்பெனி வரும்ம்ம். ஆனா வராது...


Kalyanasundaram Linga Moorthi
நவ 16, 2025 01:30

he is christhuvan, so christhuvans say Jesus is coming like investment is coming but gone to Andhra cos cm of the state knows how to attract the investors not like commission cm chtalin and allies


Sivakumar
நவ 15, 2025 19:47

இப்படி தமிழகத்துக்கு எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டால் தமிழின விரோதியாகமாட்டீர்களா ? இப்படித்தானே ஒரு கூட்டம் ஆன்டி-indian பட்டம் இலவசமாக கொடுக்கிறது


joe
நவ 15, 2025 19:10

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் பிற்போக்கான அரசியல் வாதிகள் என்பதை மிகவும் கவனிக்கவேண்டிய விஷயம் .தமிழக பொது மக்களும் இந்த அரசியல் துரோகிகளுக்கு ஆதரவாக செயல்படுவது மகா வெட்கக்கேடானது .இந்த கருத்துக்களால்தான் தொழில் நிறுவனம் ஆந்திராவுக்கு செல்கிறது .தமிழக மக்களும் திருந்த மாட்டார்கள் .சாதீய வெறியர்களின் பிடியிலும் தமிழகம் ... துதாண்டா தமிழகம்...


நிக்கோல்தாம்சன்
நவ 15, 2025 19:33

நிஜம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை