உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் கடும் மழை: 7 பேர் மண்ணில் புதையுண்ட பரிதாபம்

கர்நாடகாவில் கடும் மழை: 7 பேர் மண்ணில் புதையுண்ட பரிதாபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. உத்தர கன்னட மாவட்டத்தில் கனமழை காரணமாக, இன்று (ஜூலை 16) தேசிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. 10 பேர் மண்ணில் புதைந்தனர். தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த 3 டேங்கர் லாரிகள் மற்றும் வீடு ஒன்று நிலச்சரிவில் சிக்கின. மண்ணில் புதைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 7 பேரின் உடல்களை மீட்பு படையினர் மீட்டனர். மாயமான 3 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Subramanian
ஜூலை 16, 2024 22:23

ஆழந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


Rajah
ஜூலை 16, 2024 18:11

வருந்துகின்றேன்.


வாய்மையே வெல்லும்
ஜூலை 16, 2024 17:31

அய்யகோ அந்தோ பரிதாபம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை