| ADDED : பிப் 13, 2024 07:04 AM
தங்கவயல்: தங்கவயலில் நாளை, லோக் ஆயுக்தா மக்கள் குறை கேட்பு முகாம் நடக்கிறது.தங்கவயல் தாலுகா தாசில்தார் நாகவேணி நேற்று கூறியதாவது:தங்கவயல் நகராட்சி அரங்கில் நாளை 14ம் தேதி காலை 11:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை, லோக் ஆயுக்தா போலீசார், மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியை நடத்துகின்றனர். அப்போது மக்கள் பிரச்னைகளை லோக் ஆயுக்தா அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.கோலார் மாவட்ட லோக் ஆயுக்தா எஸ்.பி., ரமேஷ் சுற்றறிக்கை:அரசு அலுவலகங்களில் அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்களின் கோரிக்கைகளை கவனிக்காமல் அலட்சியம் செய்தல், தாமதப்படுத்துதல், தொல்லைகள் கொடுத்தல் போன்றவைகள் செய்திருந்தால், எழுத்து மூலமாக புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.