உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இவிஎம் இல்லாமல் மோடியால் வெற்றி பெற முடியாது: இந்திய ஒற்றுமை பயண நிறைவு விழாவில் ராகுல் பேச்சு

இவிஎம் இல்லாமல் மோடியால் வெற்றி பெற முடியாது: இந்திய ஒற்றுமை பயண நிறைவு விழாவில் ராகுல் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மின்னணு இயந்திரங்கள் இல்லாமல் மோடியால் வெற்றி பெற முடியாது என ராகுல்கூறினார். இந்திய ஒற்றுமை பயண நிறைவு விழா மும்பையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக முதல் வர் ஸ்டாலின், தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி,கர்நாடாக முதல்வர் சித்தராமயைா, காங்., தலைவர் கார்கே, மறறும் மற்ற கட்சி தலைவர்களான சரத்பவார் ,உத்தவ் தாக்கரே, பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவதை மோடி நிறுத்தி விட்டார். மின்னணு இயந்திரங்களை அரசியல் கட்சிகள் முன்பு எடுத்துக்காட்ட தேர்தல் ஆணையம் மறுக்கிறது. மின்னணு தேர்தல் இயந்திரங்கள் இல்லாமல் மோடியால் தேர்தலில் வெற்றி பெற முடியாது.இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க முடியவில்லை.ஆனால், ஒரு திருமணத்திற்காக பத்தே நாட்களில் பன்னாட்டு விமான நிலையத்தை ஏற்படுத்தினார்கள்.இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் தான் மோடி அரசை இயக்குகின்றனர். இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் தலித்கள் மற்றும் பழங்குடியினர் ஒருவர் கூட கிடையாது.லாபத்தில் இயங்காத பல நிறுவனங்களும் பா.ஜ.,வுக்கு நன்கொடை அளித்துள்ளது.இந்தியாவில் பயன்படுத்தும் பொருட்களில் பெரும்பாலானவை சீன தயாரிப்பு தான். நீங்கள் நினைப்பதை நான் செய்வேன். இது அன்பை பரப்புகின்ற தேசம்.மத்திய அரசின் துறைகள் மூலம் யாத்திரையை முடக்க முயற்சி நடைபெற்றது. இவ்வாறு ராகுல் பேசினார்.

பா.ஜ.,வை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் : ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்திய ஒற்றுமை மற்றும் நீதிக்கான பயணத்தை நிறைவு செய்த ராகுலுக்கு எனது வாழ்த்துகள். ராகுலை எம்.பி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றவர்; மக்களை பிளவுபடுத்தும் பா.ஜ.,வை விரைவில் ஆட்சியிலிருந்து அகற்றுவோம். என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 58 )

K Subramanian
ஏப் 02, 2024 11:04

Some decency is to be maintained by people and this man is beyond all repairs and he once was calling Modiji a Chowkidar chor hai Shame on this man and its lesser said the better about this man How do people listen to people like him ? Can we take it that Congress wins elections with the help of EVMs in Telengana and other places wherever if at all they win?


K Subramanian
மார் 18, 2024 12:36

இவன் ஒரு நாளும் திருந்த மாட்டான். இன்னும் மாட்ட போறான்


jayaraman
மார் 18, 2024 12:32

ஆடாத் தெரியாதவன் தெரு கோணல் என்றானாம்


vbs manian
மார் 18, 2024 11:53

நவீன தொழில் நுட்பத்தின்மீது நம்பிக்கை இல்லை. தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டார். தோல்விக்கான காரணங்களை தேட தொடங்கி விட்டார்.


Mohan
மார் 18, 2024 11:51

இறைவனாக பார்த்து இத்திருநாட்டிற்கு ரெண்டு பேரை அனுப்பி விட்டு இருக்கார் ..ஒன்னு பப்பு .மற்றொன்று தத்தி .இவர்கல் இல்லாட்டி மோடி ஒரு தொகுதில கூட டெபாசிட் வாங்க முடியாது ..evm எல்லாம் சும்மா


Anand
மார் 18, 2024 11:39

இந்த இத்தாலிய மாபியா இந்தியாவிற்கு பிடித்த........, ஒழித்துக்கட்ட வேண்டும்....


Rengaraj
மார் 18, 2024 11:36

தோல்வி பயம் வந்துவிட்டதால் இந்த வாக்கு இயந்திரத்தை குற்றம் சொல்ல ஆரம்பித்துவிட்டார். வாக்கு இயந்திரம் சம்பந்தமாக உச்சநீதிமன்றம் இவர்கள் கோஷ்டியினர் அளித்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. இந்தியாவில் மோடி ஆட்சியில் புதிதாக எத்தனை விமான நிலையங்கள் வந்துவிட்டன என்று இவருக்கு சுத்தமாக தெரியவில்லை. இவருக்கு தொலைநோக்கு திட்டம் எதுவுமே கிடையாது. மாமியார் மருமகளை குறை சொல்வதுமாதிரி அதுசரியில்லை, இது சரியில்லை என்று சொல்கிறாரே தவிர நாங்கள் தொலைநோக்குத்திட்டத்தோடு என்ன செய்யப்போகிறோம் என்று சொல்லத்தெரியவில்லை. ஞானம் இருந்தால்தானே சொல்வதற்கு ? மறுபடி தலித், பழங்குடியினர் என்று ஜாதி அரசியலை எடுக்கிறார். ஜாதி, மதம் என்று இவர் பிதற்றுவதை கேட்டு கேட்டு காது வலிக்கிறது. ஒரு வட்டச்செயலாளர் கூட கொஞ்சம் அரசியல் ஞானத்தோடு பேசுவார். அரசியல் நாகரிகம் தெரியும் . இந்த ராகுலுக்கு அது கொஞ்சம்கூட இல்லை. இவரெல்லாம் பிரதமர் பதவிக்கு எப்படி ஆசைப்படுகிறார் என்றே தெரியவில்லை. சபை நாகரிகம் இவருக்கு கிடையாது . முதல்வர் ஸ்டாலின் இவரிடம் நேற்று சால்வை அணிவித்து புத்தகம் தருகிறார். ராகுல் மேடையில் அதை இடது கையால் வாங்குகிறார். ஒரு கடை நிலை ஊழியனுக்குக்கூட வேளையில் சேர தகுதி வைத்து இருக்கிறார்கள். இவரை பிரதமர் பதவிக்கு அமர்த்த இவரிடம் அப்படி என்ன தகுதியோ அனுபவமோ இருக்கிறது ? இந்தியாவின் நிதி நிலை பற்றி ஏதும் தெரியுமா ? நாலு தொழில் அதிபர்கள் பேர் முன்னால் அதைப்பற்றி பேச கொஞ்சமாவது ஞானம் இருக்கா ?இதை யாருமே கேட்க மாட்டார்களா ? இவரை நம்பியும் ஒரு கூட்டம் ஜால்றா போடுகிறது ? எந்த ஒரு காங்கிரஸ் கட்சிக்காரருக்கும் தன்மானம் மற்றும் வெட்கமே இல்லையா ?


ram
மார் 18, 2024 11:34

இதற்கே எலேச்டின் கமிஷன் இந்த பப்பு மேல் வழக்கு போடலாம். அப்போ கர்நாடகா, தெலுங்கானா காங்கிரஸ் வெற்றி பெற்றது ?????


Anand
மார் 18, 2024 12:34

காங்கிரஸ் வெற்றி பெற்ற மாநிலங்களில் இது பொருந்தாது, பிஜேபி வெற்றி பெரும் இடங்களில் தான் நாங்கள் குத்தம் குறை சொல்வோம்......


Raju Ramasamy
மார் 18, 2024 11:08

மக்களை யார் பிளவு படுத்துறங்க என உனக்கு வரும் தேர்தலில் தெரிந்து விடும் .......


S.Bala
மார் 18, 2024 10:20

தனி உலகத்தில் வாழும் அவர்களை துன்புறுத்தாதீர்கள் தேர்தல் முடியும் வரை


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை