உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யாரும் செய்யாததை செய்து காட்டியவர் மோடி; அமித் ஷா புகழாரம்

யாரும் செய்யாததை செய்து காட்டியவர் மோடி; அமித் ஷா புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாக கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கியவர் பிரதமர் மோடி என்று மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.சர்வதேச கூட்டுறவு ஆண்டையொட்டி மத்திய பிரதேசத்தின் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் இந்திய அளவில் சரிசமமற்ற நிலையில் இருப்பதை பார்க்க முடியும். சில மாநிலங்களில் கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சி வேகமாக உள்ளது. சில மாநிலங்களில் அரசுமயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சில மாநிலங்களில் அழிக்கப்பட்டு விட்டது. இதற்கு காரணம் தேவையான சட்டங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாததுதான். கூட்டுறவு சங்கங்களுக்கு என தனி அமைச்சகம் உருவாக்காததால், அந்த எண்ணம் எழவில்லை.ஆனால், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகு, கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கினார். அதற்கு முதல் அமைச்சராக என்னை நியமித்தார். கடந்த மூன்றரை ஆண்டுகளால், இந்த அமைச்சகத்தில் பிரதமர் மோடி பல மாற்றங்களை கொண்டு வந்தார். கூட்டுறவு சங்கம் தொடர்பாக அமைச்சகத்தால் பல துணை சட்டங்கள் கொண்டு வரப்பட்டு அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சட்டங்களை ஏற்றுக் கொண்ட மாநிலங்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

சிந்தனை
ஏப் 14, 2025 20:34

ஹிந்துக்களுடன் சேர்ந்து வாழ முடியாது எங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று முஸ்லிம்கள் கூறியது கூறியதால் தான் பாகிஸ்தான் பங்களாதேஷ் பிரித்துக் கொடுக்கப்பட்டு விட்டது.... இதை மறந்து போன சட்டம், சரியாக புரிந்து கொள்ளாத மக்கள்... விளைவு உருப்படாத நாடு


Sivagiri
ஏப் 14, 2025 09:12

மற்றவர்கள் அதாவது காங்கிரஸ் , நேரு :.பாமிலி - மற்றும் த்ராவை மாடல் , செய்யாதது என்று மட்டும் அல்ல , செய்ய முடியாதது - மற்றும் செய்ய தெரியாதது , செய்ய துணிவு இல்லாதாது , முடித்து காட்டியவர் .


P. SRINIVASAN
ஏப் 14, 2025 09:06

ஆமாம், விலைவாசி உயர்வு, அளவுக்கு மீறிய வரி, மத வெறி அரசியல் இதல்லாம் தானே? சரியா சொன்னீங்க திரு மிட்ஷா அவர்களே


pmsamy
ஏப் 14, 2025 08:04

பொது மக்களுக்கு கெட்டதை தவிர வேறு எதுவும் மோடி செய்யவில்லை ஏழைகள் இன்னும் ஏழையாகவே இருக்கின்றனர் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகின்றனர் பாஜக இந்தியாவிலிருந்து ஒழிய வேண்டும்


Kasimani Baskaran
ஏப் 14, 2025 03:59

தமிழகத்தில் கூட்டுறவு என்று கொள்ளை அடிப்பது சர்வசாதாரணமாக நடக்கிறது. அதையும் கொஞ்சம் கவனித்தால் நாட்டுக்கு நல்லது.


தமிழன்
ஏப் 14, 2025 01:29

உண்மையை ஒத்துக்கொண்ட அமித்ஷாவுக்கு நன்றி 3.5 வருடமாக சல்லி பைசா குறைக்காத பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலை, தேர்தல் பத்திரம் ஊழல், சிஏஜி அறிக்கையில் உள்ள தங்கம் விலையில் ரோடு போட்டது, விவாதமே இல்லாமல் சட்டம் இயற்றப்பட்டது, டபுள் இஞ்சின் சர்க்கார், சுண்டு விரல் அசைவிலேயே மணிப்பூரை 3 வருடமாக சொர்க்க பூமியாக வைத்திருப்பது, மணிப்பூருக்கு உடனே சென்றது???, கவர்னர்களை எதிர் கட்சி ஆளும் மாநிலங்களில் அமைதியாக??? வைத்திருந்தது, பெண்களை கற்பழித்த காம வெறி பிசாசுகளுக்கு மாலை போட்டு போட்டோசூட் நடத்தியது, பல ஆயிரம் விவசாயிகளை கொன்ளது, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு மைக்ரோசாப்ட் கம்பெனியில் வேலை வாங்கி கொடுத்தது என இன்னும் பல சாதனைகளை சொல்லாமல் செய்த 56 இன்ச் விஷ்வகுரு பரமபிதா மோடி


Kanns
ஏப் 13, 2025 22:57

ModiBJP also CHEATS People NativeMajorityHindus& Nation With FALSE PROPAGANDAS WITHOUT ANY ACHIEVEMENTS except Art370Abolition by RSS Madhav, vvlong Pendg RamTemple& recent WaqfAmendment Instead of its Abolishment Economic Growth Automatic Post NarasimhaRao, AntiChinaWest& Populous Market BY AntiPeoplePower-Misusing DICTATOR MODI& Co, StoogeLoot Ministers-MPs-MLAs etc through Stooge-BureaucratsOfficials. NO LIVELIHOODS PROVIDED only Minm WageJobs from President to Labourer But EVEN PEOPLES OWNLIVELIHOOD DESTROYED By Modi-Mental AADHAR-SpyMaster Which Failed to Punish Any PowerMisusingMegaLooters, BillionsOfForeign Infiltrators etc esp. EXTENSIVE POWERMISUSERS Rulers, StoogeVested Officials esp InvestigatorPOLICE-JUDGES& PowerHungry BUREAUCRATS NewsHungry-BiasedMEDIA, VotePowerHungry PARTIES/Groups incl Vested FALSE-COMPLAINTSGroups/Unions, Women, SCs, advocates etc, All UNCHECKED by RULERBIASED COURTJUDGES. SHAMEFUL BANANA REPUBLIC


Thetamilan
ஏப் 13, 2025 22:30

இது ஒரு சாதனையா ? நாட்டின் முதல் ஜனாதிபதியிடம் கற்றுக்கொள்ளாமல் , கோர்ட்டுகளிடமும் அடிவாங்கிய முதல் அரசு


Ramesh Sargam
ஏப் 13, 2025 22:12

தமிழக முதல்வர் ஸ்டாலின் கூட பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சியை கைப்பற்றினார். அதுவும் யாரும் செய்யமுடியாத காரியம்தான். அவரை நீங்கள் புகழ மாட்டீர்களா...?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை