உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பண மோசடி கும்பலுடன் தொடர்பு; கம்யூ., - எம்.பி.,யின் பாதுகாவலர் கைது

பண மோசடி கும்பலுடன் தொடர்பு; கம்யூ., - எம்.பி.,யின் பாதுகாவலர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கட்டப்பஞ்சாயத்து மற்றும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலுக்கு உடந்தையாக இருந்த, மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி., வெங்கடேசனின் பாதுகாவலரான போலீஸ்காரர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்.ஐ., ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில், 'லார்டு ஆப் தி ட்ரிங்ஸ்' என்ற பாரில், கடந்த மாதம், 22ம் தேதி, ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி.,யின் மகன் செல்வபாரதி, 28, தரப்பினரும், சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையை சேர்ந்த, அ.தி.மு.க., தகவல் தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகி பிரசாத், 33, தரப்பினரும் மோதிக் கொண்டனர்.பீர் பாட்டிலை உடைத்து, கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர். பிரசாத் உடன் தொழில் அதிபர்களான, சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த கணேஷ்குமார்,42, போரூரை சேர்ந்த தனசேகர், 29, தி.மு.க., பிரமுகரான, சென்னை இ.சி.ஆரில், 'துாண்டில்' என்ற பெயரில் ஹைடெக் ஹோட்டல் நடத்தி வரும், துாண்டில் ராஜா,36, ஆகியோரும் களேபரத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு, அ.தி.மு.க., பிரமுகரான அஜய் வாண்டையார் என்ற அஜய் ரோகன், 36; நடிகர் கருணாஸ் கட்சியான முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த ரவுடி நாகேந்திர சேதுபதி என்ற சுனாமி சேதுபதி, 33, ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் செல்வபாரதி தரப்பினரையும், பாரில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர். இது குறித்து, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்வபாரதி, அஜய் ரோகன் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் பதுங்கி இருந்த துாண்டில் ராஜாவையும் கைது செய்தனர். செல்வபாரதி, அஜய் ரோகன், சுனாமி சேதுபதி, பிரசாத் ஆகியோரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.அவர்கள் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி., வெங்கடேசனின் பாதுகாவலராக இருந்த போலீஸ்காரர் செந்தில்குமார்,44; கோவையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்.ஐ., மணிதுரை, 48, ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பிரசாத், அஜய் ரோகன், துாண்டில் ராஜா, சுனாமி சேதுபதி உள்ளிட்டோர் அடங்கிய கும்பல், கட்டப்பஞ்சாயத்து, அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்வது, தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது என, அட்டூழியம் செய்து வந்துள்ளது. 2017 ல், பார் ஒன்றில் அடிதடி தகராறிலும் ஈடுபட்டு உள்ளது.பிரசாத், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற வைத்து, அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். சேலத்தை சேர்ந்த குழந்தைவேலு, அசோக் குமார் ஆகியோரிடம், 16 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார்.அஜய் ரோகன், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரிடம், 2.11 கோடி ரூபாய் வாங்கியும் மோசடி செய்து உள்ளார். இவர்கள், ரியல் எஸ்டேட் தொழிலில் கட்டப்பஞ்சாயத்து செய்யவும், தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிக்கவும், போலீஸ்காரர் செந்தில்குமார், எஸ்.ஐ., மணிதுரை ஆகியோர் மொபைல் போன் டவர் லோக்கேஷன் எடுத்து கொடுத்து உள்ளனர். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
ஜூன் 06, 2025 12:29

காவல்துறை கைது செய்யும். நீதித்துறை ஜாமீன் கொடுத்து வெளியே அனுப்பும். இப்படிப்போன்ற அவலம் எந்த நாட்டிலும் நடப்பதில்லை. வெட்கம். வேதனை.


Rathna
ஜூன் 06, 2025 11:34

மாவோயிஸ்ட் தீவிரவாதம், உண்டியல் குலுக்கல், தேச விரோத சீனாவுடன் கூட்டு, பங்களாதேஷி ரோஹிணிய ஆதரவு, நல்ல ஓடும் தொழில்களை வன்முறை மூலம் மூடுவது, தொழிற்ச்சாலைகளில் அடாவடி என்று கொடி கட்டி பறக்கிறான்.


Kalyanaraman
ஜூன் 06, 2025 11:06

காவல்துறையில் இருப்பவர்கள் நீதிபதிகள் தவறு செய்தால் சாமான் எனக்கு கொடுக்க வேண்டிய தண்டனையை விட ஆறு மடங்கு எட்டு மடங்கு அதிகமாக கொடுக்க வேண்டும்.


ஆரூர் ரங்
ஜூன் 06, 2025 10:18

வெங்கடேசன் உண்மை உருவம் வெளிவரும் நாள் நெருங்குகிறது.


Padmasridharan
ஜூன் 06, 2025 08:54

கட்டப்பஞ்சாயத்து பண்ணிதானே காவலர்கள் பணத்தை மக்களிடம் புடிங்கிகிட்டு இருக்காங்க.. புதிய குற்றவாளிகளை உருவாக்கிக்கிட்டு இருக்காங்க. சம்பளத்தை தவிர வாங்கற பணம் லஞ்ச ஊழல் என்று சட்டம் இருந்தும் மொதல்ல அத உடைக்கறதே கறைபடிந்த காக்கிச்சட்டை போட்ட காவலர்கள்தான்.


Palanisamy Sekar
ஜூன் 06, 2025 08:40

கம்யூக்கள் தான் கட்சியையே அடகுவைத்து 25 கோடி வாங்கி பில்டிங் கட்டி அதனை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாடைக்கு விட்டு கொழுத்த சம்பாத்தியம் செய்கின்றார்கள் என்றால் இப்போது எம் பியின் பாதுகாவலர்களும் அதனை பார்த்து சம்பாத்தியம் செய்ய துடிக்கின்றார்களே. எம் பி யையும் சிபிஐ மூலம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.


புதிய வீடியோ