உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வு முறைகேடு வழக்கு: ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நீட் தேர்வு முறைகேடு வழக்கு: ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை ஜூலை 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. நாடு முழுதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, மே 5ம் தேதி நடந்தது. இதன் முடிவு, ஜூன் 4ம் தேதி வெளியானது. இந்த தேர்வில், இதுவரை இல்லாத அளவுக்கு, 67 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். வினாத்தாள் கசிந்தது, ஆள் மாறாட்டம் நடந்தது என, பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a5beq7e0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விவகாரம் தொடர்பான, 30க்கும் மேற்பட்ட வழக்குகளை தொகுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. நீட் தேர்வு முறைகேடு வழக்கில், தேசிய தேர்வு முகமை பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. தேர்வு ரத்து என்பது தவறிழைக்காத மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகும் என பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு மீதான விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Daisy
ஜூலை 12, 2024 12:30

Re-neet is the correct solution for all.Mistakes100% confirmed.Conduct a fresh exam for all.Otherwise everyone will do these mistakes in every year in their areas as a title of "localised ities".Central govt decision is wrong in this matter.Or give chance to consider 12 &11 std marks and 60% neet score for mbbs admission in this academic year.


Muthu Kumaran
ஜூலை 11, 2024 16:54

ரொம்ப இழு இழு என இழுக்கிறது.


hindustani
ஜூலை 11, 2024 15:15

எல்லாம் சரி, ஏன் தேசிய தேர்வு முகமை NTA தேர்தல் முடிவு வெளியான அதே நாளில் ஏன் நீட் முடிவை அறிவித்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது.


rajkumar
ஜூலை 11, 2024 14:32

நீட் தேர்வில் ஊழல் செய்த குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்


மேலும் செய்திகள்











புதிய வீடியோ