உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காசுக்கு தான் படம் நடிக்கிறார்கள்; அல்லு அர்ஜூன் மீது நடவடிக்கை சரி என்கிறார் முதல்வர் ரேவந்த் ரெட்டி!

காசுக்கு தான் படம் நடிக்கிறார்கள்; அல்லு அர்ஜூன் மீது நடவடிக்கை சரி என்கிறார் முதல்வர் ரேவந்த் ரெட்டி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சினிமா நட்சத்திரங்கள் காசுக்கு தான் படம் நடிக்கிறார்கள். அல்லு அர்ஜூன் மீது நடவடிக்கை சரி தான். வழக்கு விசாரணையில் யாரும் தலையிட மாட்டார்கள் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். திரையரங்க நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜூனுக்கு, ஹைதராபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதை அடுத்து, இன்று (டிச.,14) சஞ்சல்குடா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக, ஆங்கில செய்தி சேனலுக்கு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அளித்த பேட்டி:ஒருவரை ஜெயிலுக்கு அனுப்பியது குறித்து இவ்வளவு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. ஆனால், ஒரு பெண் தன் உயிரை இழந்து இருக்கிறார். அவரைக் குறித்து நீங்கள் ஒரு துளியும் கவலைப்படவில்லை. அந்தப் பெண்ணின், குடும்பம் எப்படி இருக்கிறது.. அந்த ஏழை பெண்ணின் வாழ்க்கை என்ன ஆனது? என்று எதுவும் கேட்கவில்லை. அல்லு அர்ஜூன் மீது நடவடிக்கை சரிதான். போலீசார் அவர்களது வேலையை செய்கிறார்கள்.

நடவடிக்கை

அல்லு அர்ஜூன் படத்தை பார்த்து விட்டு வெளியே வந்து கொண்டாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. சினிமா நட்சத்திரங்கள் பணம் சம்பாதிப்பதற்காக தான் படம் நடிக்கிறார்கள். சாமானியர்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கின் விசாரணையில் யாரும் தலையிட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.பிடித்த தெலுங்கு நடிகர் யார் என்ற கேள்விக்கு, 'நானே ஒரு நட்சத்திரம் தான், நான் யாருடைய ரசிகனும் இல்லை' என ரேவந்த் ரெட்டி பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

தத்வமசி
டிச 15, 2024 10:45

அரசியலில் நுழைந்தவுடன் ஆண்டியும் கோடானு கோடி சேர்ப்பதன் மர்மமென்ன முதல்வரே? ஆட்சியில் அமரத் துடித்து நாட்டுக்கு எதிராக பேசும் நபர்களை என்ன செய்யலாம் முதல்வரே? அவர்களுக்கு காசுக்குத் தானே பொய் சொல்கிறார்கள். இலவசத்தை அள்ளி விடுகிறீர்களே உங்கள் அப்பன் வீட்டு சொத்தா முதல்வரே கோடி கோடியாய் சம்பாதித்து மறைத்து வைத்து வரி கட்டாமல் ஏய்க்கும் அரசியல்வாதியும் பணத்துக்கு தானே வருகிறான். மக்களை ஏமாற்றே ரோடே போடாமல், வளர்ச்சிப் பணிகளை செய்யாமல் கணக்கு காட்டி ஊரை ஏமாற்றும் அரசியல் வாதியும் பணம் சம்பாதிக்கத் தானே வந்தார்கள்.


anantharaman
டிச 15, 2024 08:02

ரெட்டி போன்றவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? பணத்துக்காக நடிகர்கள் என்பது புதிதாக, பணத்தைக் கொள்ளை, அடிக்கத் தானே நீங்களும் அரசியலில் உள்ளீர்? அந்தப் பெண், அறிவிழந்து நடிகர்களைப் பார்க்க முண்டி அடித்து கூட்ட நெரிசலில் ஏன் போக வெண்டும். சினிமா மோகம் இப்படித்தான் முடியும்வரை இந்த முதல்வரும் ஒரு நாள் இதை உணர்வான்


Sundararajan
டிச 14, 2024 22:29

If the cine actor will come then inform to police for law and order otherwise suddenly came due to rush one young lady died Money will not a permanent solution of the family.. children will affect with out mother


Nandakumar Naidu.
டிச 14, 2024 21:48

இவருக்கு இவரே நட்சத்திரம் என்று பெருமை பட்டுக்கொள்கிறார்.


Nandakumar Naidu.
டிச 14, 2024 21:46

இப்படிப்பட்ட அர்த்தமற்ற பேச்சினால் ரேவந்த் ரெட்டியின் மதிப்பு அதாள பாதாளத்தில் விழுந்து விட்டது. காங்கிரஸ் குடும்பத்தின் கொத்தடிமையாகி விட்டார். அல்லுவின் வளர்ச்சியால் பொறாமை பிடித்தவர் ரேவந்த் ரெட்டி மற்றும் காங்கிரஸ் குடும்பம். அடுத்த தேர்தல்களில் மண்ணோடு மண்ணாக அழிந்து போவார்கள்.


Puratchi Veeran
டிச 14, 2024 20:30

எல்லோரும் பணத்துக்காகத்தான் வேலை செய்கிறார்கள் , ஒரு முதலமைச்சர் பேசுகின்ற பேச்ச இல்லை இது , தரக்குறைவாக உள்ளது


Natarajan Ramanathan
டிச 14, 2024 19:19

அல்லு அர்ஜுனன் உடனே இருபத்து ஐந்து லட்சம் நிவாரண உதவியாக அந்த பெண்ணின் குடும்பத்துக்கு கொடுத்துவிட்டார் வேறு என்னதான் செய்வது?


Easwar Kamal
டிச 14, 2024 19:18

ரேவந் செய்தது சரிதான். இந்த ஆந்திர நடிகனுங்க என்னமோ கடவுள் என்ற நினைப்பில்தான் வாழுறானுga , நாம தமிழ் நடிகர் எவ்வளவோ பரவாயில்லை. இந்த மக்களும் ஒரு காரணம். தமிழக மக்கள் கொஞ்சம் திருந்தி விட்டார்கள். ஆந்திர மக்கள் இன்னும் திருந்த வில்லை. இவனுங்க ஆட்டம் அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவிலும் உயிர் இழப்பு ஏற்பட்டால்தான் இங்கும் ஒரு முடிவு வரும். இப்போது தமிழ்நாட்டை போல் இரவு கட்சி இல்லை என்று சொல்லி இருக்கிறார். மக்கள திருந்திவில்லை என்றால் அரசுதான் இந்த வீணாப்போன மக்களை திருத்த வேண்டிவரும்.


Mohan das GANDHI
டிச 14, 2024 18:40

காங்கிரஸ் ஊழல் திருடர்கள் இவர்களுக்கு கமிஷன் தராததால் அல்லு அர்ஜுனை கைது நடவடிக்கை ? இது தமிழ்நாட்டிலும் திமுக விக் தெலுங்கன் ஸ்டாலின் ஊழல் ஆட்சியிலும் இதே நிலை தான் ? ? ? அரசியல்வாதிகள் ஊழல் மாமூல் கமிஷன் க்ரெப்ஸன் இவர்களை முதலில் நீதி தண்டிக்க வேண்டும்.


என்றும் இந்தியன்
டிச 14, 2024 17:55

Chief - முதன்மையான Cheap - கேவலமான, மலிவான Minister - மந்திரி இது தான் உண்மையான அர்த்தம் யாருக்கு எது பிடிக்குமோ அதை எடுத்துக்கொள்ளலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை