உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவாத தீ.. தண்ணீரால் பதிலடி தந்தது இந்தியா

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவாத தீ.. தண்ணீரால் பதிலடி தந்தது இந்தியா

பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இது தான்... என காஷ்மீரின் அழகை கண்டு அனைவரும் வியப்படைகின்றனர். இயற்கையின் பேரழகு எல்லா இடங்களிலும் கொட்டிக்கிடக்கும் காஷ்மீர், பல ஆண்டு பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து தற்போது தான், மெல்ல, மெல்ல மீண்டு வந்தது.மோடி அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால் பயங்கரவாத சுவடுகள் கொஞ்சம், கொஞ்சமாக மாய்ந்து வந்தன. அனந்த்நாக் மாவட்டத்தில், பனிமலையும், பசுமை போர்த்திய இயற்கை சூழலையும் கொண்ட பஹல்காம், ஜம்மு - காஷ்மீரின் மிகச் சிறந்த கோடை வாசஸ்தலங்களில் ஒன்று; கலாசார, பாரம்பரிய பெருமை கொண்ட நகரம். ஹிந்துக்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் சென்று தரிசிக்க வேண்டும் என ஏங்கும், அமர்நாத் குகை கோவில் செல்லும் வழித்தடத்தில், இந்த சுற்றுலா தலம் அமைந்துள்ளது.

பாக்., கைக்கூலிகள்

'மினி சுவிட்சர்லாந்து' என அழைக்கப்படும் இந்த அழகிய நகரம், சுற்றுலா பயணியர் வருகையால் எப்போதும் பரப்பரப்பாக காணப்படும். தற்போது கோடைகாலம் என்பதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தந்தனர். பஹல்காம் பனிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பைசாரன் புல்வெளியில், ஏப்., 22ம் தேதி, பாக்., கைக்கூலிகள் நடத்திய கொடூர தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர்.ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது அரசியல் சட்டப் பிரிவை, 2019ம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. அதற்குப்பின் நடந்துள்ள, மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் இது. மக்கள் கூட்டத்துக்குள் நான்கைந்து பயங்கரவாதிகள் நுழைந்து நடத்திய திடீர் தாக்குதல் என, இதை சாதாரணமாக எடுத்துவிட முடியாது.

பெயர் கேட்டு துப்பாக்கி சூடு

இது இரு நாடுகளுக்கு இடையேயான, காலம் காலமான பகையின் பரிணாம மோதல். 1947ம் ஆண்டு, சிலரின் அரசியல் கனவுகளுக்காக இந்தியாவை மதரீதியாக பிளவுபடுத்தினர். அதன் காயங்கள் இன்னும் ஆறாத நிலையில், நாட்டு மக்களை மத ரீதியாக பிளவு படுத்த பயங்கரவாதிகளை கருவியாக பயன்படுத்தி, ஏவி விட்டுள்ளது, நமது அண்டை நாடான பாகிஸ்தான்.சுற்றுலா பயணியரின் பெயரை கேட்டு, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் கொடூரம், இங்கு அரங்கேறியுள்ளது. மதத்தின் பெயரால் அப்பாவி மக்களை பலி கொடுக்கும் இந்த பயங்கரவாதத்தின் தாக்கம், பஹல்காம் மட்டுமல்ல, பல நாட்டு எல்லைகளை தாண்டி எதிரொலிக்கும். இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவுக்கு பிரதமர் மோடி புறப்பட்ட தருணம்; அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் இந்தியா வந்த தருணம் என, துல்லிய நேரத்தை கணக்கிட்டு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்தியா பதிலடி

பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், போர் சூளுரை எதுவும் விடுக்காமல், பயங்கரவாத பாகிஸ்தானின் ஆணி வேரையே அறுத்தெறியும் நடவடிக்கையில் இந்தியா இறங்கியுள்ளது. பாகிஸ்தான் மீது இந்தியா அறிவித்துள்ள தடைகள், போரை விட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.முதலாவதாக, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து என்பது பாகிஸ்தானை பொறுத்தவரை ஒரு அணு ஆயுத தாக்குதலுக்கு நிகரானது. 'தண்ணீரும், ரத்தமும் ஒரே நேரத்தில் பாய்ந்தோடுவதை அனுமதிக்க முடியாது' என பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அது தற்போது இந்தியா உலகுக்கு சொல்லும் செய்தியாக அமைந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு பேரிடி

இந்தியா- - பாகிஸ்தான் இடையே, 1960 செப்., 19ல் கராச்சியில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போதைய பிரதமர் நேரு - பாக்., அதிபர் அயூப் கான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். ஒன்பது ஆண்டு பேச்சுவார்த்தைக்குப்பின், உலக வங்கி மத்தியஸ்தம் செய்ய, இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.ஒப்பந்தத்தின் விதிகளின்படி, சிந்து நதி திட்டத்தில் கிழக்கு நதிகளான -சட்லெஜ், பியாஸ் மற்றும் ரவி நதிகளின் நீர் இந்தியாவின் கட்டுப்பாடற்ற பயன்பாட்டிற்கு கிடைக்கும். மேற்கு நதிகளான- சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றிலிருந்து பாகிஸ்தான் தண்ணீரை பெறுகிறது. மொத்தத்தில் சிந்து நதி அமைப்பிலிருந்து இந்தியாவுக்கு 20 சதவீத நீர் தான் கிடைக்கிறது. 80 சதவீதம் தண்ணீரை பாகிஸ்தான் பெறுகிறது.இரு நாடுகள் இடையே பல போர்கள், மோதல்கள் நடந்தபோதும் தாக்குப்பிடித்த இந்த ஒப்பந்தம், தற்போது முதல் முறையாக மோடி அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது, பாகிஸ்தானுக்கு பேரிடியாக அமையும். காரணம், சிந்து நதி தண்ணீரையே பாகிஸ்தான் முழுக்க, முழுக்க தனது விவசாய மற்றும் தொழில் தேவைகளுக்காக நம்பியுள்ளது.பாகிஸ்தான் பற்றவிடும் மதவாத - பயங்கரவாத தீயை தண்ணீரால் அணைக்கும் முயற்சியாக, தக்க பதிலடி தந்துள்ளது இந்தியா.

பாதிப்புகள் என்ன?

* சிந்து நதி கட்டமைப்பு தான் பாகிஸ்தானில் ஒரு கோடி மக்களின் முக்கிய நீர் ஆதாரம்* பஞ்சாப், சிந்து மாகாணங்களின் முக்கிய தொழில் விவசாயம். இதன் பாசன தேவைக்கு முக்கிய நீர் ஆதாரம் இது.* பாகிஸ்தானின் 23 சதவீத வருமானம் வேளாண்மை தொழிலில் இருந்து கிடைக்கிறது. 68 சதவீத மக்கள் வேளாண்மையை நம்பி உள்ளனர்.* சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால், வேளாண்மை தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டு, பாகிஸ்தானின் பொருளாதார கட்டமைப்பே ஆடிப்போய் விடும். நிலத்தடி நீர் இருப்பு பாதிக்கப்படும். நீர்மின் திட்டங்கள் பாதிக்கப்படும். பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். கடுமையான உணவு பற்றாக்குறை ஏற்படும். பசி, பட்டினி தாண்டவமாடும்.

பாக்., கொக்கரிப்பு

சமீபத்தில், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆஸிம் முனிர், காஷ்மீர் குறித்து பேசியதும் கவனிக்கத்தக்கது. 'காஷ்மீர் என்பது பாகிஸ்தானின் கழுத்து பெரும் நரம்பு. காஷ்மீர் பிரச்னை என்பது எல்லை சார்ந்த பிரச்னை மட்டுமல்ல; சித்தாந்த ரீதியிலானது. நம்பிக்கை அடிப்படையிலான யுத்தம்' என, அவர் முழங்கியுள்ளார்.பல ஆண்டுகளாக பாகிஸ்தான் உரமூட்டி வளர்த்து வந்த, லஷ்கர்-இ- தொய்பாவின் சார்பு அமைப்பான, தி ரெசிஸ்டன்ட் போர்ஸ் என்ற பயங்கரவாத குழு, பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. 'எய்தவன் இருக்க அம்பை நோவது ஏன்?' என்ற கணக்கில், இந்தியாவின் ஒட்டுமொத்த கோபமும் பாகிஸ்தான் பக்கம் திரும்பியுள்ளது.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sridhar
ஏப் 25, 2025 13:56

இந்தியா பதிலடி என்றெல்லாம் சொல்லி நம் புண்பட்ட மனதிற்கு மருந்தாக பயன்படலாமே தவிர, இந்த நடவடிக்கையால் பாகிஸ்தானுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்பதுதான் உண்மை. நதிகளிலிருந்து நீர் நிறுத்தப்படப்போவதில்லை. அந்த நதிகளின் போக்கை திருப்பி அமைத்து அதில் அணை கட்டி நீர்வளத்தை நம் நாட்டுக்கு பயன்படுத்த தற்போது எந்த திட்டமும் இந்தியாவிடம் இல்லை. தற்போதைக்கு அணை நீர்மட்டம், தண்ணீர் திறப்பு போன்ற விவரங்களை இந்தியா பாகிஸ்தானுக்கு பகிறாது. அவர்களை அணைக்கட்டு சோதனைகளுக்கு வர அனுமதி அளிக்காது. அவர்களுக்கு ஒரு சிறிய இடைஞ்சல் அவ்வளவே


Murthy
ஏப் 25, 2025 11:06

மக்கள் கூடும் இடத்தில ராணுவம் பாதுகாப்பு கொடுக்காமல் யாருக்கு பாதுகாப்பு கொடுக்க ராணுவம் அங்கு நிறுத்தப்பட்டு இருக்கு??


thehindu
ஏப் 25, 2025 11:05

தீ தண்ணீரால் அணைந்து விட்டதா? இதைவைத்து இந்துமதவாத நாடுமுழுவதும் உலகமுழுவதும் பற்றவைத்த தீ கூட அணையவில்லை. நாடு இரண்டு தீயிலும் இனியும் பற்றி எரிந்துகொண்டுதான் இருக்கிறது. அவர்கள் பற்றவைத்ததோ காஸ்மீரில் மட்டும். இந்து மதவாத அரசு அவர்கள் பேரில் பற்றவைத்ததோ நாடு முழுவதும் இனியும் கொழுந்து விட்டு எரிகிறது


Dharmavaan
ஏப் 25, 2025 12:28

முஸ்லீம் மதவாத தீயை வளர்க்க வேண்டுமா


Rajkumar
ஏப் 25, 2025 09:28

அருமையான நகைச்சுவை ..


பாமரன்
ஏப் 25, 2025 08:16

செய்தி சுருக்கமாக இருந்தாலும் சிறப்பாக போட்டதுக்கு வாழ்த்துக்கள்... உண்மை... இதை ஒரு சமிக்ஞையா மட்டுமே பார்க்கனும்... அதாவது காப்பி குடிச்சிட்டு நங்குன்னு டபராவை வைக்கும் பெருசுக நடவடிக்கை மாதிரி... நம் கண்ட்ரோலில் இருக்கும் அணைகளில் பாக் செல்லும் மொத்த நீரில் பத்து சதவீதம் கூட சேர்த்து வைக்க முடியாது... மீறினால் அருகில் உள்ள ஸ்ரீநகர் மூழ்கும்... இந்த பகுதியில் ஒரே நைட்ல என்விரோண்மெண்ட் பர்மிஷன் கிடைத்தாலும் ஒரு அணை கட்ட பத்து முதல் இருபது வருடங்களுக்கு மேல் ஆகும்... ச்ச்ச்சும்மா மிரட்டல் அவ்ளோ தான்


yakub
ஏப் 25, 2025 08:52

சரிங்க ....


VENKATASUBRAMANIAN
ஏப் 25, 2025 08:16

இந்த தண்ணீர் நிறுத்தத்தால் நமக்கு எந்த பிரச்சனையும் வரக் கூடாது அதை சரியாக திருப்பி விடவேண்டும். நேற்று ஒரு அறிவுஜீவி நல்லதை சொல்லுவது போல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசினார். இது போன்ற விவாதங்களை ஊடகங்கள் நடத்தக்கூடாது


நிக்கோல்தாம்சன்
ஏப் 25, 2025 06:45

இந்த தண்ணீர் நிறுத்தம் பலமாதங்கள் தொடர்ந்தால் தான் அங்கு வலிக்கும் , அதற்குள் இங்கிருக்கும் பாகிஸ்தான் ஆண்களுக்கு பிறந்த குடிமகன்கள் வேறு விதத்தில் உள்ளிருந்தேde போர் தொடுப்பார்கள் பாருங்கள் , இன்னமும் அந்த ஸ்லீப்பர் செல்களுக்கு உத்தரவு வரவில்லை


சமீபத்திய செய்தி