உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2030-க்குள் 48 நகரங்களில் ரயில் எண்ணிக்கை இருடமங்காக அதிகரிக்க திட்டம்

2030-க்குள் 48 நகரங்களில் ரயில் எண்ணிக்கை இருடமங்காக அதிகரிக்க திட்டம்

புதுடில்லி : அடுத்து வரும் 5 ஆண்டுகளில் 48 நகரங்களில் ரயில்களின் எண்ணி்க்கையை இரு மடங்காக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்து இருப்பதாவது: பயணத்திற்கான தேவையில் ஏற்பட்டுள்ள விரைவான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அடுத்தது வரும் 5 ஆண்டுகளில் முக்கிய நகரங்களில் இருந்து புதிய ரயில்களை இயக்கும் திறனை தற்போதைய நிலையிலிருந்து இருமடங்காக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதற்காக ரயில் டெர்மினல்கள், நடைமேடைகள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த உள்ளது.டில்லி, மும்பை( மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வே) கோல்கட்டா, கோல்கட்டாமெட்ரோ, சென்னை, ஜம்மு, ஜெய்ப்பூர், மட்காவ், பூரி,திருப்பதி மற்றும்ஹரித்வார் உள்ளிட்ட 48 நகரங்களில் ரயில்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை