உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் நாட்டை ஒருங்கிணைக்க விரும்புகிறார்: சொல்கிறார் கார்கே

ராகுல் நாட்டை ஒருங்கிணைக்க விரும்புகிறார்: சொல்கிறார் கார்கே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: ராகுல் நாட்டை ஒருங்கிணைக்க விரும்புகிறார் என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறினார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கார்கே பேசியதாவது: எதிர்க்கட்சி தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்புகிறது. பயத்தின் காரணமாக, சிலர் கூட்டணியை விட்டு வெளியேறுகிறார்கள். மக்களை மிரட்டுகிறார்கள். இதுவே மக்களுக்கு ஓட்டளிக்க கடைசி வாய்ப்பு. இதற்கு பிறகு ஓட்டெடுப்பு நடக்காது. மோடி மீண்டும் நாட்டின் பிரதமரானால் நாட்டில் தேர்தல் முறைக்கு முடிவு கட்டி விடுவார். மேலும் அவர் நாட்டின் ஜனநாயகத்திற்கு முடிவு கட்டிவிட்டு, சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தி விடுவார். நரேந்திர மோடியுடனான நட்பால் ஒடிசா முதல்வர் என்ன லாபம் அடைந்தார்?. ராகுல் நாட்டை ஒருங்கிணைக்க விரும்புகிறார். நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பா.ஜ.,வும் ஆர்.எஸ்.எஸ்.,சும் நமது உரிமைகளைப் பறிக்கிறது. இவ்வாறு கார்கே பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Venkatesh
ஜன 30, 2024 05:54

இவர் ஏதாவது உளறிக்கொண்டே இருப்பவர் போல இருக்கு இவர் பேச்சு


NACHI
ஜன 30, 2024 05:06

ஆணியே புடுங்கவேணாம்


Bhakt
ஜன 30, 2024 02:02

பாகிஸ்தான், சீனா கூடவா ?


panneer selvam
ஜன 30, 2024 00:42

Kharge ji , Is there any major problems with Unity of India ? Why you are a scaremonger ? Even Kashmiri secessionists have disappeared now . So let Rahul ji not to worry about fictitious issues .


பேசும் தமிழன்
ஜன 30, 2024 00:26

கான் கிராஸ் கட்சி எப்போதும் நாட்டில் பிரிவினையை தானே ஏற்படுத்தும்.... இப்போது என்ன புதிதாக ஒற்றுமை என்று கதை விடுகிறீர்கள் ???


Ramesh Sargam
ஜன 29, 2024 23:27

ராகுல் நாட்டை ஒன்றிணைக்க விரும்புகிறார். அது இருக்கட்டும் ஒரு பக்கம், மொதல்ல நீங்களும், ராகுலும் எப்பொழுது ஒன்றிணைவீர்கள், சொல்லுங்கள் பார்க்கலாம்? ராகுல் உங்களை வயதில் பெரியவர் என்றும் மதிப்பதில்லை.


Rajagopal
ஜன 29, 2024 21:56

ஒருங்கிணைக்க முயலவில்லை. ஓரங்காட்ட முயல்கிறார். இவரும், இவரோடு சேர்ந்த கூட்டணியும், பல வழக்குகளில் ஜாமீன் வாங்கிக்கொண்டு, ஊரை ஏமாற்றிக்கொண்டு, கொள்ளையடித்த பணத்தில் சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கிறது. இவர்கள் சிறையில் சென்றால் நாட்டுக்கு நல்லது.


தாமரை மலர்கிறது
ஜன 29, 2024 21:25

ராமர் கோவிலை கட்டியதன் மூலம் ஏற்கனவே நூற்றிநாற்பது கோடி மக்களின் மனதை மோடி வென்றுவிட்டார். தேர்தல் நடத்துவதே வீண் செலவு தான். அதற்கு புளிமூட்டை குடவுனிலே இருக்கலாம்.


J.V. Iyer
ஜன 29, 2024 20:16

பாப்பு I.N.D.I.A. வை சீனாவுடன் ஒருங்கிணைக்க ஆசைப்படுகிறார். நடக்குமா?


ராஜா
ஜன 29, 2024 19:34

சரி உங்கள் ராகுலை இந்தியாவில் இருந்து பிரிந்து போன பாகிஸ்தான், பங்களாதேசம் போன்ற நாடுகளை மீண்டும் இந்தியாவோடு இணைக்க வேண்டும் என்ற பேச சொல்லுங்கள்.அவர் பாட்டனார் சீனாவிடம் இழந்த அக்ஷய் சின் பகுதியையும் இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்க பாடுபட சொல்லுங்கள். அது தான் காங்கிரஸ் இந்திய மக்களுக்கு கொடுக்கும் ஒரே நியாயமாக இருக்க முடியும்.


ராமன்
ஜன 30, 2024 07:18

பாட்டனார் இல்லை. கொள்ளுத் தாத்தா - பாட்டியின் தகப்பனார்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை