உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் கோயில் நினைவு தபால் தலைகள்: பிரதமர் மோடி வெளியிட்டார்

ராமர் கோயில் நினைவு தபால் தலைகள்: பிரதமர் மோடி வெளியிட்டார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராமர் கோயிலை குறிப்பிடும் வகையிலான 6 நினைவு தபால் தலைகளை பிரதமர் மோடி வெளியிட்டார்.அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ல் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்விற்காக முக்கியமான தலைவர்கள், பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=af5vyno2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, ராமர் கோயில் நினைவு தபால் தலைகளை வெளியிட்டார். ராமர் கோயில், சூரியன், சராயு நதி மற்றும் கோயில் சிற்பங்கள் போன்ற படங்கள் அடங்கிய தபால் தலைகளை அவர் அறிமுகப்படுத்தினார். மேலும், உலகம் முழுவதும் இருக்கும் ராமர் பற்றிய தபால் தலைகளின் ஆல்பத்தையும் வெளியிட்டார்.பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், 'ராமர் கோயில் பிரதிஷ்டை செய்யும் நிகழ்விற்கான ஏற்பாடு நடக்கையில் மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்தது. ராமர் கோயிலை குறிப்பிடும் வகையிலான 6 நினைவு தபால் தலைகள் மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் ராமர் பற்றிய தபால் தலைகளின் ஆல்பம் வெளியிடப்பட்டது. நாட்டு மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து ராம பக்தர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

கனோஜ் ஆங்ரே
ஜன 18, 2024 16:03

எவ்வளவு ஆடணுமோ... அவ்வளவு ஆடுங்க. கடவுள் இருக்கான் குமாரு.... கடவுள் எப்பவுமே பாரபட்சம் பார்ப்பதே இல்லை... அக்கிரமம் செய்து பிரேமானந்தா. அவர் சிறையிலேயே உயிர் விட்டார். அப்பதான் உணர்ந்தேன்... கடவுள் இருக்கார் குமாரு..


hari
ஜன 18, 2024 17:52

அப்படித்தான் ஆடுவோம்... இன்னும் பல வருஷம் நீ மும்பையில் கதறனும்


R Kay
ஜன 18, 2024 15:27

ஜெய் ஸ்ரீராம்


madhavaraman
ஜன 18, 2024 14:06

சாதனை படைக்கும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா முன்னிட்டு தபால் தலை வெளியீட்டிற்கு இனிதான வரவேற்புகள்-ஜெய் ஸ்ரீராம்


ஆரூர் ரங்
ஜன 18, 2024 13:58

ஒரு மூதறிஞருக்கு உயிருடன் இருந்த போதே அவரது உருவத்துடன் ஸ்டாம்பு வெளியிட முயற்சி செய்தார்களாம். எதுக்கு? ஸ்டாம்ப் வெளியிட்டு என் மூஞ்சில தினமும் போஸ்ட் ஆபீஸில் கருப்பு முத்திரை குத்த வேண்டாம் என்றாராம்.


Seshan Thirumaliruncholai
ஜன 18, 2024 13:49

கடிதங்கள் மூலம் கடித தொடர்புகள் குறைந்துவிட்டதால் அஞ்சல் தலை வாங்குபவர்கள் அதிகமாய் இருக்காது. எனவே நாட்டு மக்கள் எல்லோரும் தலைக்கு ஸ்ரீ ராமர் அஞ்சல் தலை ஓன்று வாங்கி மணிபர்சில் வைத்து கொள்ளலாம் ஆல்பம் என்ன விலை என்று தெரியாது எல்லோரும் வாங்க இயலாது. எனவே கல்யாணம் பண்டிகை நாட்களில் வாழ்த்து பரிசளிப்பாக கொடுக்கலாம். அஞ்சல் தலையாய் உபயோகிப்பது தவிர்த்தல் என்பது அவர்கள் விருப்பம்.


மேலும் செய்திகள்