அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு: சுவர் ஏறிக்குதித்த அகிலேஷ் யாதவ்!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: உ.பி., மாநிலம் லக்னோவில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் சர்வதேச மையத்தில் யாரும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் கட்சியினர், தடுப்புச்சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்தநாளான இன்று(அக்.,11) அவருக்கு அஞ்சலி செலுத்தினர். உ.பி.யின் தலைநகரான லக்னோவில் உள்ள ஜே.பி. நாராயண் சர்வதேச மையத்தின் (ஜே.பி.என்.ஐ.சி.) வாயிலில் எஸ்.பி. தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஜே.பி. நாராயண் சர்வதேச மையத்தின் கேட் மூடப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pkybirsg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜெயப்பிரகாஷ் நாராயணன் சர்வதேச மையத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் கட்சியினர், தடுப்புச்சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தனர். ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்தநாளான இன்று அவருக்கு அஞ்சலி செலுத்த சமாஜ்வாதி கட்சியினர் இவ்வாறு செய்தனர். அகிலேஷ் யாதவ் சுவர் ஏறி குதிக்கும் போட்டோ சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.