உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 8 மணி நேரத்தில் ரூ.10 கோடி இழந்த ஓய்வுபெற்ற பொறியாளர்

8 மணி நேரத்தில் ரூ.10 கோடி இழந்த ஓய்வுபெற்ற பொறியாளர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஆன்லைன்' வாயிலாக பணம் பறிக்கும் கும்பல், 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில், மோசடி செய்து, கோடிக்கணக்கில் பணம் சுருட்டி வருவது அதிகரித்துள்ளது.இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். டிஜிட்டல் முறையில் கைது செய்யும் விதி உலகளவில் எங்குமே நடைமுறையில் இல்லை என்றும் கூறியுள்ளனர்.இந்நிலையில், டில்லி ரோகிணி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளரிடம், டிஜிட்டல் கைது என்ற பெயரில், 10 கோடி ரூபாயை மர்ம நபர்கள் சமீபத்தில் ஏமாற்றியுள்ளனர்.இது குறித்து போலீசில் அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: நானும், என் மனைவியும் டில்லி ரோகிணி செக்டார் 10ல் வசித்து வருகிறோம். என் மகன் துபாயிலும், மகள் சிங்கப்பூரிலும் வசிக்கின்றனர். சமீபத்தில் என்னை தொடர்பு கொண்ட நபர், தைவானில் இருந்து என் பெயருக்கு வந்த பார்சல் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.மேலும், அந்த பார்சலில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் இருப்பதாகவும், இது தொடர்பாக மும்பை போலீசின் குற்றப்பிரிவு அதிகாரிகள் என்னிடம் பேசுவர் என்றும், அதற்காக 'ஸ்கைப்' எனப்படும் வீடியோ கால் செயலியை டவுன்லோடு செய்யும்படியும் அந்நபர் கூறினார்.ஸ்கைப் வீடியோ காலில் தோன்றிய நபர் டிஜிட்டல் முறையில் என்னை கைது செய்திருப்பதாக கூறி, 8 மணி நேரம் ஒரே இடத்தில் இருக்கச் செய்தார். பின், என் வங்கிக் கணக்கில் இருந்த 10.30 கோடி ரூபாயை, விசாரணை முடியும் வரை அரசு வசம் செலுத்தும்படி கூறி, வெவ்வேறு வங்கி கணக்குகளை தந்தார்.நான் பணத்தை மாற்றியதும், தொடர்பை துண்டித்துக் கொண்டார். இது குறித்து என் பிள்ளைகளிடம் தெரிவித்த போது தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.டில்லி போலீசின் சைபர் குற்றப்பிரிவு தனிப்படை அமைத்து விசாரித்து வருகிறது. வெளிநாட்டில் இருந்து ஸ்கைப்பில் பேசியுள்ளதையும், அவருக்கு உள்ளூர் நபர் தகவல்கள் தந்து உதவியதையும் கண்டறிந்துள்ளனர். இதுவரை, மோசடியாளரின் வங்கிக் கணக்கில் இருந்த 60 லட்சம் ரூபாயை முடக்கியுள்ளனர். மீதமுள்ள பணத்தை மீட்கவும் முயற்சித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Mohan Loganathan
நவ 17, 2024 09:42

Every body blames the person who lost the money..it is not proper.the guy who engages the person by talking and he will mesmerize the person and make him do what he wants him to do ..the person who hears him will do as he says...so .i am saying this out of my personal experience by loosing money..


ellar
நவ 17, 2024 06:34

இந்த சமாச்சாரத்திற்கு யாருமே புலம்ப வேண்டியதில்லை தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள் எவ்வளவு வருடம் என்ஜினியராக இருந்து இவர் என்ன சாதித்திருக்க போகிறார் பேப்பரில் பலமுறை வந்ததை பார்த்து அறிய விட்டால் பரவாயில்லை தனக்கே புரியாமல் இருந்திருந்ததும் நாட்டின் பிரதம மந்திரி இதைப்பற்றி தெளிவாக பேசியதை கேட்காமலோ அல்லது தெரிந்து கொள்ளாமலோ இருந்திருந்த ஒரு மனிதர் எவ்வளவு பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்திருக்கப் போகிறார் எனவே அந்த பணத்திற்காவது ஒரு விடுதலை கிடைத்திருக்கிறது என்று நேர்மறையாக சிந்தித்துப் பார்த்தோம் என்றால் இந்த நிகழ்ச்சியில் தவறே இல்லையே


VIDYASAGAR SHENOY
நவ 16, 2024 23:28

கொள்ளை அடித்த பணம் போல போனால் போகட்டும்


Ganesh
நவ 16, 2024 16:37

இதே மாதிரி தான் எனக்கும் கால் வந்தது... ஆனால் நான் அனுப்பாத பார்சல் க்கு எதற்கு டென்ஷன் ஆகணும்.... ரொம்ப கூல் ஆக அந்த பார்சல் ஐ என்னுடைய வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் க்கு அனுப்பி விடுங்க நானும் என்னோட வக்கீலும் செர்ந்து போய் வாங்கிறோம் னு சொன்னேன்.. அதுக்கப்புறம் ஒரு போனேயும் காணோம்...


Mohamed Kasim
நவ 16, 2024 12:28

நன்கு படித்தவர் அனுபவும் மிக்கவர் இப்படியா


theruvasagan
நவ 16, 2024 12:12

ஒரு பொறியாளரிடம்10 கோடி. அதை வருமான வரிக் கணக்கில் காட்டுகிறாரா. வரி கட்டுகிறாரா. இந்தமாதிரி மோசடிகள் நடக்கும் போதுதான் சில பேரிடம் அபரிமிதமாக குவிந்து கிடக்கும் செல்வம் பற்றி தெரிய வருகிறது.


Vivekanandan Mahalingam
நவ 16, 2024 09:33

ஆன்லைன் மோசடி தடுக்க எல்லா மொபைல் சேவை நிறுவனங்களும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - கடந்த 15 நாட்களாக மோடி பேசிய பிறகு இது குறைந்து உள்ளது


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 16, 2024 09:12

பெரும் சொத்துக்களுடன் உயர் அரசுப்பணியில் இருப்பவர்கள், உயர் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இவர்களையே குறிவைத்து மோசடி செய்யப்படுகிறதோ ???? ஆக ஆக ஆக இந்தியாவும் இனி வல்லரசு ஆகும் .....


Kasimani Baskaran
நவ 16, 2024 06:59

இவ்வளவு ரொக்கம் வைத்திருந்தால் கண்டிப்பாக அது அவருக்கு சொந்தம் என்று நம்ப முடியவில்லை...


Raj
நவ 16, 2024 06:49

இது எல்லாம் நடக்க காரணம் எல்லாம் ஆன் லைன் கொள்முதல் தான் நமது வங்கி கணக்கின் தகவல்கள் நாமே ஷேர் செய்கிறோம் லிங்க் என்ற பெயரில். முடிந்த வரை ஆன் லைன் கொள்முதலை தவிர்ப்போமாக. நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஒரு கிளிக்கில் தொலைத்து விடுகிறோம்.


Dharmavaan
நவ 16, 2024 08:49

எப்படி என்று விளக்கவும்


சமீபத்திய செய்தி