உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000: பிரதமர் மோடி போட்ட முதல் கையெழுத்து

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000: பிரதமர் மோடி போட்ட முதல் கையெழுத்து

புதுடில்லி: 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி ஒதுக்கீடு செய்யும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார்.தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் மோடி, தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். நரேந்திர மோடிக்கு நேற்று (ஜூன் 9) ஜனாதிபதி திரவுபதி பதவி பிரமாணம் செய்துவைத்தார். இதனைத்தொடர்ந்து இன்று, சவுத்பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இருக்கையில் அமர்ந்து முறைப்படி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பொறுப்பேற்றுக்கொண்டதும் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டு, தனது அலுவல் பணிகளை துவக்கினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=93n7bjsi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி ஒதுக்கீடு செய்யும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார். அதன்படி, 9.3 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.20 ஆயிரம் கோடி தொகையை பிரதமர் மோடி விடுவித்தார். மோடியின் வாக்குறுதிகளில் ஒன்றான, விவசாயிகளுக்கு நிதி வழங்கும் இந்த திட்டத்தின்கீழ், 17வது தவணையாக இந்த தொகை விடுவிக்கப்படுகிறது.

அர்ப்பணிப்பு

முதல் கையெழுத்திட்ட பிறகு பிரதமர் மோடி தெரிவிக்கையில், ''விவசாயத்துறையின் வளர்ச்சிக்காக மேலும் கடுமையாக பணியாற்ற நாங்கள் விரும்புகிறோம். விவசாயிகளின் நலனிற்காக தங்களது அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட முடிவு செய்துள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

கோபாலு
ஜூன் 10, 2024 21:21

தப்பு... இது அவரது ரெண்டாவது கையெழுத்து. முதல் கையெழுத்து நேத்திக்கி பதவி பிரமாணம் எடுத்த போதே முதல்.கையெழுத்து போட்டாரே..


Aadi kudi korkai
ஜூன் 10, 2024 18:42

Engalukkum appadiye varumaana variyil oru paththaayiram vidivithu kaiyeluththu poadavum !!!


venugopal s
ஜூன் 10, 2024 17:42

இதையே எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் கொடுத்தால் இலவசம் என்று சொல்ல வேண்டியது ,இவர்கள் கொடுத்தால் விவசாயிகள் நலத் திட்டம் என்று சொல்லி கைதட்ட வேண்டியது!


sundaran manogaran
ஜூன் 10, 2024 17:21

ஆனால் வழங்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு பணியாற்றும் நீலகிரி மாவட்ட வேளாண்மைத்துறையை பிரதமரால் எதுவும் செய்ய முடியாது.


என்றும் இந்தியன்
ஜூன் 10, 2024 16:47

இது ஸ்டாலினை நக்கல் செய்வது போல இருக்கின்றது. என் முதல் கையெழுத்து மது ஒழிப்பு நீட் ஒழிப்பு ...சொல்லிட்டு"மோடி சொன்னதை செய்வேன் செய்வதை சொல்வேன்


Balasubramanian
ஜூன் 10, 2024 16:00

6000 ரூபாய் 9.3 கோடி நபர்களும் கொடுக்க ரூ 20,000 கோடி என்றால் யாரோ மாதா மாதம் 50 கோடி பெண்களுக்கு ரூ 8500 தருவதாக வாக்களித்தாங்கள்


R.RAMACHANDRAN
ஜூன் 10, 2024 15:16

விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து அதனை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வதை விட்டுவிட்டு எல்லோருக்கும் மாதம் 500 ரூபாய் என பிச்சைபோல கொடுப்பதற்கு முதல் கையெழுத்து.


GMM
ஜூன் 10, 2024 13:09

ரூ.6000 பணமாக விவசாயிகளுக்கு பணமாக கொடுப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும். நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தினாலும், விவசாயத்திற்கு தான் பயன்படுத்துவர் என்பதை அறிய முடியாது. தேவை கேட்டு பொருளாக வழங்க வேண்டும். நிர்வாக விதியில் வரி பணம் பொது உபயோகத்திற்கு மட்டும். ஜெயா போல் ஆடு, மாடு வாங்கி கொடுக்கலாம்.


Apposthalan samlin
ஜூன் 10, 2024 13:06

உரங்கள் பூச்சி கொல்லி மருந்துக்கு கொடுக்க பட்ட மானியத்தை ரத்து செய்து விட்டு வருசத்துக்கு 6000 கொடுப்பது சாதனையா ? எல்லாம் வில்லை ஏறும் வில்லை பொருட்கள் மட்டும் அதே விலை


Raja
ஜூன் 10, 2024 14:55

மானியம் எதுவும் நிறுத்தப்படவில்லை, பொய் தகவல்களை சொல்ல வேண்டாம்


Kumar Kumzi
ஜூன் 10, 2024 15:31

நாட்டுக்கு எதிரானவன் வேறு எப்படி பேசுவார்


நிக்கோல்தாம்சன்
ஜூன் 10, 2024 16:10

விவசாயிகள் வயிற்றிலும் அடிக்க இருக்கிறார்கள்


திண்டுக்கல் சரவணன்
ஜூன் 10, 2024 13:06

நீங்க வெள்ள நிவாரண நிதியை எப்படி கொடுத்தீங்கன்னு மக்கள் தான் பார்த்தார்களே


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை