உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு வங்கியில் அதிகாரி ஆகணுமா; பட்டப் படிப்பு இருந்தால் போதும்; 4,465 பேருக்கு சூப்பர் வாய்ப்பு

அரசு வங்கியில் அதிகாரி ஆகணுமா; பட்டப் படிப்பு இருந்தால் போதும்; 4,465 பேருக்கு சூப்பர் வாய்ப்பு

தேசிய வங்கிகளான பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, கனரா பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இண்டியா, இந்தியன் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் அன்ட் சிந்து பேங்க், யு.சி.ஓ. பேங்க் உள்ளிட்ட வங்கிகளில் மொத்தம் 4,465 அதிகாரி பணியிடங்களுக்கு ஆட்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு

ஐ.பி.பி.எஸ்., (IBPS) நடத்தும் இந்த பணியிடங்களுக்கான தேர்வு வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. முன்னதாக, அக்டோபர் மாதத்தில் ஆன்லைனில் ஆரம்பநிலைத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இதற்கு செப்டம்பரில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சியில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுக்கு இன்று முதல் வரும் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டிசம்பர்/ஜனவரியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். பின்னர், நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்படும்.

தகுதியான வயது

இந்தப் பணிக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

அதிகபட்ச வயது வரம்பு, தளர்வு

எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு - 5 வருடங்கள்ஓ.பி.சி., - 3 வருடங்கள்மாற்றுத்திறனாளிகள் - 10 வருடங்கள்

தேர்வு கட்டணம்

தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆக.,1 முதல் ஆக., 21ம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக கட்டணத்தை செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.175 கட்டணம்பிற பிரிவினருக்கு ரூ.850 கட்டணமாக நிர்ணயம்

எப்படி விண்ணப்பிப்பது?

https://www.ibps.in/என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கு உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம். புகைப்படம், கையெழுத்து, இடது கைரேகை, கையால் எழுதப்பட்ட சுயஒப்புதல் சான்று உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்தல் கட்டாயமாகும்.

நேர்முகத்தேர்வு

நேர்முகத்தேர்வுக்கு தகுதியானவர்கள் தங்களின் அழைப்பாணையுடன், அசல் சான்றிதழ்களுடன், சொன்ன தேதியில் நேரில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு மையங்கள்

நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற இருக்கிறது. கூடுதல் விபரங்களை https://www.ibps.in/ இணையதளத்தில் பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Rajarajan
ஆக 01, 2024 12:03

அரசு வங்கிகளில் அப்படி என்னதான் பெரும்பாலும் செய்கிறார்கள் ?? நாம் எழுதிக்கொடுத்த சலான், அதை அப்படியே பார்த்து கணினியில் டைப் செய்கிறார்கள். அவ்வளவுதானே. மற்றதை எல்லாம் கணினியே வரவு செலவில் வைக்கிறது. தனியாக ஆறாவது அறிவை உபயோகிக்க வேண்டிய அவசியமே எழவில்லை. மேலும், மின்தடை ஏற்பட்டால், அந்த வேலையையும் இவர்கள் செய்வதில்லை. மேலும், தற்போது மெஷினிலியே பணத்தை செலுத்தி ரசீது பெறுகிறோம். சாதாரண ஐம்பது ரூபாய் கால்குலேட்டர் செய்யும் வேலைக்கு எதற்கு இவ்வளவு பேர்கள்? இவ்வளவு ஆயிரத்தில் சம்பளம், பஞ்சபடிகள், போனஸ் மற்றும் சலுகைகள்?? தவிர ஓய்வூதியம் வேறு. அதிலும் பஞ்சபடி. இதில் வாரம் இருமுறை விடுமுறை, பண்டிகை கால விடுமுறை, சிறப்பு விடுமுறைகள் வேறு தனி. இதைத்தவிர, இன்னும் கூடுதல் சம்பளம் / போனஸ் / சலுகை மற்றும் விடுமுறைகள் வேண்டும் என்ற வேலை நிறுத்தங்கள் வேறு. தெரியாமல் தான் கேட்கிறேன். இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில், தனியார் நிறுவனங்கள் மேற்சொன்ன எதுவும் அளவுக்கு அதிகமாக இல்லாமல், திறன்பட தங்கள் நிறுவனங்களை நிர்வாகம் செய்யும் போது, எந்த அரசும் நமது நாட்டின் பொருளாதாரத்தை அனாவசியமாக மேலும் மேலும் இதன்மூலம் வீணடிக்க வேண்டுமா என்ன?? ஓ புரிகிறது. தனியார் ஊழியர்கள் தங்கள் வாயை வயிற்றை கட்ட தயாராக இருக்கையில், அரசு ஜமாய்க்க வேண்டியது தானே. இதில் அந்த அரசு, இந்த அரசு, எந்த அரசாக இருந்தால் என்ன? இக்கரைக்கு அக்கறை பச்சை தானே. அரசியல் வேறு, நிர்வாகம் வேறு என்று, திரு. காமராஜர் மற்றும் திரு. மன்மோகனை போல யார் ஒருவர் இந்தியாவுக்கு ஆள்வதற்கு கிடைக்கிறாரோ, அப்போது தான் இந்தியா அடுத்த கட்டத்துக்கு வேகமாக முன்னேறும். அந்த பொன்நாள் எந்நாளோ?? இறைவா, தனியார் ஊழியரை கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு மற்றும் வரி விதிப்பிலிருந்து காப்பாற்று. உன்னையே சரணடைந்தோம்.


venugopal s
ஆக 01, 2024 19:31

நீங்கள் வங்கி வேலைக்கு மிகவும் முயற்சி செய்து அது கிடைக்காத ஆத்திரம் உங்கள் கருத்து மூலம் தெரிகிறது. வங்கி வேலை என்பது வெறுமனே பணத்தை வாங்கி கணக்கில் போட்டு அதே பணத்தை திருப்பி கொடுக்கும் வேலை அல்ல. ஃபாரின் எக்ஸ்சேஞ்ச், கார்ப்பரேட் ஃபைனான்ஸ், ப்ராஜெக்ட் ஃபண்டிங்,கன்ஷார்ஷியம் ஃபைனான்ஸ், மல்டிபிள் பாங்கிங், ரிஸ்க் மேனேஜ்மென்ட்,ரெக்கவரி என்று ஆயிரெத்தெட்டு கலைகள் உள்ளன. லோன் கொடுத்து விட்டு அதிலும் கோடிக்கணக்கில் கொடுத்து விட்டு இரவு தூக்கம் வராமல் தவிக்கும் வங்கி உயரதிகாரிகள் நிறையவே உள்ளனர்.மத்திய அரசு, மாநில அரசு ஊழியர்களை விட எவ்வளவோ மேலானவர்கள், நேர்மையானவர்கள் வங்கி ஊழியர்கள்!


அப்பாவி
ஆக 01, 2024 10:20

இந்த நாலாயிரம் வேலைக்கு நாப்பது லட்சம் பேர் மனு போடுவாங்க. தலைக்கு நூறு ரூவா கட்டணம் வசூலிச்சாலும் நாப்பது கோடி வருமானம் வந்துரும். காசு வாங்கிட்டு வேலை போட்டுக்.குடுத்திரலாம்.


அப்புசாமி
ஆக 01, 2024 10:18

பட்டப்படிப்பு இருந்தா போதும். ஆனால் நுழைவுத் தேர்வில் சரித்திரம், பூகிளம், இங்கிலீஷ், கம்பியூட்டர் சயன்ஸ், கணிதம், பௌதிகம், ரசாயனம் இன்ன பிற துறைகளில்.பி.ஹெச்.டி லெவலில் கேள்விகள் கேப்பாங்க. எவனாவது கேள்வித்தாள்களை கசியவிட்டு தேர்வில் பாஸ் பண்ணி, லஞ்சம் குடுத்து வேலை வாங்கிடுவான். இவ்வளவு படிச்சுட்டு அங்கே கிளார்க் வேலை பாக்கறதுக்குள்ளே ஐ.எஸ்.ஆர்.ஓ, நாசா வில் வேலைக்குப் போற தகுதி நமக்கு வந்துரும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை