உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடில்லி: அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராகவும், அவர் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு எதிராகவும் டில்லி உயர் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என தொடர்ந்து பல நீதிமன்றங்களில் விசாரணைகள் நிலுவையில் இருந்து வருகிறது.நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை, அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என சூர்யமூர்த்தி, ராம்குமார், ஆதித்யன் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையமும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.இந்நிலையில், தேர்தல் ஆணையம் நடத்தும் விசாரணைக்கு தடை கோரி, அ.தி.மு.க., சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 9ம் தேதி பிறப்பித்த உத்தரவில், தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக ராமச்சந்திரன் என்பவரது தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று, நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இந்த வழக்கு வரும் 27ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. எனவே, தற்போதைய சூழலில் இந்த விவகாரத்தில் இடைக்கால தடை உத்தரவு எதையும் பிறப்பிக்க தேவையில்லை என நாங்கள் கருதுகிறோம்' என, உத்தரவிட்டனர்.இதையடுத்து, மனுதாரர் வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kanns
ஜன 21, 2025 08:45

If Case is Not Finished Within 03months from Filing Date on Merits, this Matter Must be Decided UnBiasedly by Highest Executive President After Lower Executive EC decides on tge Matter. If Earlier Admk Council Decided that JJ is Permanent GS on Higher Votes all Votes only Physical& not by Voice, then EPS stagemanaged Council Votes-Decision Must be Dumped


Kasimani Baskaran
ஜன 21, 2025 08:33

ஆத்தா தீமகாவினர் ஒன்று கூடி இலையை பிய்க்காமல் விடமாட்டார்கள் போல...


Velan Iyengaar
ஜன 21, 2025 09:35

இதுக்கு பின்னாடி எந்த கட்சி இருக்கு என்று குறை அறிவு உள்ளவனுக்கு கூட தெரியும்போது இவருக்கு தெரியவில்லை என்றால் ....


Kasimani Baskaran
ஜன 21, 2025 10:04

ஆத்தா கட்சிக்காரனுக்கு புத்தி இல்லை என்றால் அடுத்த கட்சிதான் அவர்களை உடைத்ததாக நினைப்பது ஒருவகை திராவிட பகுத்தறிவு.. ஒற்றுமையாக கட்சி நடத்த தெரியாத கூட்டம் ஆடத்தெரியாமல் தெரு கோணல் சென்று சொல்வதும் கூட பகுத்தறிவு... ஆயிரம் ராமசாமி பிறந்தாலும் ஒங்களையெல்லாம் திருத்த முடியாது...


Ganapathy Subramanian
ஜன 21, 2025 13:36

இரட்டை இலையினால் எழுந்திருக்க முடியாத அளவுக்கு அடி வாங்கி வலியை அனுபவிப்பவன்தான் இதற்கு காரணமாக இருக்கமுடியும் என்பது எங்களுக்கு நீங்கள் உருட்டும் ராமசாமி நாயக்கனால் நாங்கள் கற்ற கல்வியின் மூலமாக எங்கள் சிற்றறிவுக்கு எட்டியது. தவறென்றால் உங்கள் கல்வி முறையில்தான் தவறு.


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 21, 2025 08:27

சிபிஐ, அமலாக்கத்துறை, இவனுங்க கூட இப்போ தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து எதிர்க்கட்சிகளை பதம் பார்க்கிறது.


ராஜாராம்,நத்தம்
ஜன 21, 2025 09:08

நீயே திராவிடமாடல் திமுக கட்சியின் கொத்தடிமை உனக்கு ஏன் எதிர்கட்சிகளை பற்றிய கவலை?


Barakat Ali
ஜன 21, 2025 17:54

பல முக்கிய நடவடிக்கைகளில் சிபிஐ, அமலாக்கத்துறை, தேர்தல் கமிஷன் தோல்வியைச் சந்தித்துள்ளன .... அல்லது கண்டுகொள்ளவில்லை .... ஆகவே அவை எதிர்க்கட்சி கிரிமினல்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறலாமா ????


அப்பாவி
ஜன 21, 2025 08:26

நாட்டாமை செய்ய வாய்ப்பில்லை. லாபமுமில்லை.


Selvan
ஜன 21, 2025 07:51

நீதிமன்றங்கள்?????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை