உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி மீது நடவடிக்கை? விளக்கம் கேட்டது சுப்ரீம் கோர்ட்

அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி மீது நடவடிக்கை? விளக்கம் கேட்டது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி : விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, சமீபத்தில் நடத்திய நிகழ்ச்சியில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பங்கேற்று பேசியதாவது:பெரும்பான்மையினராக உள்ள ஹிந்துக்களின் விருப்பப்படியே இந்த நாடு செயல்படும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில், குழந்தைகளின் கண் எதிரே விலங்குகள் கொல்லப்படுகின்றன. இதை பார்த்து அந்த குழந்தைகள் வளர்கின்றனர். இந்த சூழ்நிலையில், அந்த குழந்தைகள் எப்படி கனிவாகவும், சகிப்புத்தன்மையுடனும் இருப்பர்? அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மோசமானவர்கள் இல்லை என்றாலும், சிலர் ஆபத்தானவர்கள்.இவ்வாறு நீதிபதி பேசினார்.

சர்ச்சை

நீதிபதி சேகர் குமார் யாதவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூ., மூத்த தலைவர் பிருந்தா காரத், சி.ஜே.ஏ.ஆர்., எனப்படும், நீதித்துறை பொறுப்பு மற்றும் சீர்திருத்தங்களுக்கான இயக்கத்தினர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு கடிதம் எழுதினர்.சி.ஜே.ஏ.ஆர்., எழுதிய கடிதத்தில், 'நீதிபதி சேகர் குமார் யாதவுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும். அவரிடம் உள்ள அனைத்து வழக்குகளின் விசாரணைகளை திரும்ப பெற வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.பிருந்தா காரத் எழுதிய கடிதத்தில், 'இதுபோன்ற செயல்கள் ஒட்டுமொத்த நீதித் துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்துகின்றன. நீதித்துறையில் இத்தகைய சார்புநிலையை வெளிப்படுத்தும் நபர்களுக்கு இடமில்லை.'ஒரு நீதிபதி சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக பாரபட்சமான கருத்துகளைக் கொண்டிருக்கும் நீதிமன்றத்தில், எந்த வழக்கறிஞரும் நீதியை எதிர்பார்க்க முடியாது' என, தெரிவித்திருந்தார்.இந்த விவகாரத்தை, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவரும், ஹைதராபாத் லோக்சபா தொகுதி எம்.பி.,யுமான அசாதுதீன் ஓவைசி, லோக்சபாவில் நேற்று எழுப்பினார். மேலும், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவை பதவியில் இருந்து நீக்கக் கோரி கையெழுத்திட்டு அவர் நோட்டீஸ் அளித்தார்.

பரிசீலனை

இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நேற்று வெளியிட்ட செய்தி:அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது, பத்திரிகைகள் வாயிலாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. நீதிபதி யாதவ் நிகழ்ச்சியில் பேசிய விபரங்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்திடம் கேட்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் பரிசீலனையில் உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

S. Neelakanta Pillai
டிச 11, 2024 21:05

அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை, ஐயோ ஐயோ என்று குதிப்பதில் தான் உள் அர்த்தம் இருக்கிறது. எதிர்ப்பை புறந்தள்ள வேண்டியதுதான்.


venugopal s
டிச 11, 2024 19:15

சங்கிகளில் படித்தவர் படிக்காதவர் என்ற வித்தியாசமே கிடையாது , எல்லாம் ஒன்று தான்!


Ashok Subramaniam
டிச 12, 2024 13:23

காங்கி மற்றும் கம்மீஸ் மங்கிகளில் மட்டும் என்ன வாழுதாம்? சங்கிகளாவது தேசபக்தியிலே பேசுகின்றனர்.. மங்கி கும்பல் அத்தனையும் தேச விரோத நாசகாரர்கள்தானே?


V GOPALAN
டிச 11, 2024 18:11

உச்ச நீதிமன்றம் கோத்ரா கொன்றவர்களை விட்டுவிட்டு கோத்ரா பின்பு நடப்புகளை மட்டும் சப்போர்ட் செய்த உதவாக்கரை உச்ச நீதிமன்றம் எல்லோருக்கும் தெரியும்


Balaganesan K
டிச 11, 2024 18:10

நீதிபதி ஏதும் தவறாக பேசியதாக தெரியவில்லை.. உச்ச நீதிமன்றம் இந்துக்களுக்கு எதிராக கருத்து சொல்பவர்களை இதே போல ஏன் கேள்வி கேட்க தயங்குகிறது என தெரியவில்லை..


ஆரூர் ரங்
டிச 11, 2024 11:34

மெஜாரிட்டி மக்களின் விருப்பப்படி நடப்பதுதான் ஜனநாயகம்..பொது சிவில் சட்டம் கொண்டு வர அரசியல் சட்டத்தின் DIRECTIVE PRINCIPLES கூறியுள்ளது. அதனைத்தானே இந்த நீதிபதி வலியுறுத்தியுள்ளார்? இவர் மீது நடவடிக்கை எடுத்தால் அது நேர்மையான நீதிபதிகளை அச்சுறுத்தும்.


J.Isaac
டிச 11, 2024 12:23

இந்தியாவில் மெஜாரிட்டி எஸ்சி , எஸ்டி தான்


RAMAKRISHNAN NATESAN
டிச 11, 2024 12:42

இந்தியாவில் மெஜாரிட்டி எஸ்சி , எஸ்டி தான் ........ மடக்கி கேள்வி கேட்டுட்டாராம் .... மதம் மாறிய எஸ்சி , எஸ்டி எத்தனை சதவிகிதம் & மதம் மாறாத எஸ்சி , எஸ்டி எத்தனை சதவிகிதம் ???? மதம் மாறியும் சாதிக்கொடுமைகளை அனுபவிக்கும் எஸ்சி , எஸ்டி எத்தனை சதவிகிதம் ????


ஆரூர் ரங்
டிச 11, 2024 11:31

இதே அலஹாபாத் நீதிமன்றம்தான் இந்திரா லோக்சபா தேர்தலில் முறைகேடு செய்ததால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என சிறந்த தீர்ப்பை அளித்தது. ஆனால் அவசரநிலை காலத்தில் நீதி வளைந்து இந்திராவை பதவியில் தொடர அனுமதித்தது. பணிமூப்பு புறக்கணிக்கப்பட்டு ஜால்ரா ஜூனியர் தலைமை நீதிபதியானார். அதையும் பெரும்பாலான சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வாய்மூடி ஏற்றனர் காரணம் அப்போது அத்தனை நீதிபதிகளும் காங் அரசாலேயே நியமிக்கப்பட்டவர்கள். காங்கிரசுக்கு மாற்றுக் கருத்துடையவர்கள் இங்கு நீதியளித்தல் கடினம்.


Barakat Ali
டிச 11, 2024 10:28

The top 10 judgements of Chief Justice D.Y. Chandrachud ..... கூகுள் செய்து பாருங்கள் ..... அவர் மட்டுமல்ல ... அதற்கு முன்பும் பல தீர்ப்புகள் இஸ்லாமியர்களுக்கு உதவும் போர்வையில் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைக்க வழங்கப்பட்டவை .....


RAMAKRISHNAN NATESAN
டிச 11, 2024 10:00

சபரிமலையில் பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தில் அரசியல் சட்டத்திலுள்ள தீண்டாமை அம்சம் கூட பேசப்பட்டது ..... தீர்ப்பிலும் அது எதிரொலித்தது ..... அவரு உச்சா மன்ற தலைமை நீதிபதியாகவே இருந்துட்டு போயிட்டாரு ..... இவரு பேசியதெல்லாம் ஜுஜுபி ...........


Kanns
டிச 11, 2024 09:30

Misuse of Power by Supreme Court& Wastage of Precious CourtTimes for UnBiasedly Solving Imp Petitions/Problems. Said Prayag HC Judge Not Said Objectionable& that Majority Views/ Decisions Must be Respected/Accepted thats what Democracy Says. Suspend that SC Judge for this Notice


enkeyem
டிச 11, 2024 09:29

இப்போது பொங்கும் பிருந்தா காரத், சி.ஜே.ஏ.ஆர் இயக்கத்தினர், இவர்கள் எல்லாம் தமிழகத்தில் ஒரு அமைச்சர் சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என்று திருவாய் மலர்ந்தருளியபோது எங்கே போய் ஒளிந்து கொன்டு இருந்தார்கள்?


முக்கிய வீடியோ