உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தே.ஜ., கூட்டணி தலைவராக மோடி தேர்வு

தே.ஜ., கூட்டணி தலைவராக மோடி தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : டில்லியில் பிரதமரின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நிறைவுப்பெற்றது. அதில் தே.ஜ/. கூட்டணி தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்துனர். அதன்படி, 3வது முறையாக பா.ஜ., ஆட்சி அமைக்க உள்ளது.இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, நட்டா, பீஹார் முதல்வர் நிதீஷ்குமார், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல கூட்டணி கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அதில், கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதற்கு நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்தனர். மேலும், 7 சுயேட்சை எம்.பி.,க்கள் உட்பட தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்காத 10 எம்.பி.,க்களும் ஆதரவளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கிடையே காலையில் 17வது லோக்சபாவை கலைக்க ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி பரிந்துரை செய்திருந்தார். அதனை ஏற்று லோக்சபாவை ஜனாதிபதி கலைத்தார். இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை இன்றே பிரதமர் மோடி சந்தித்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.

நிதிஷ், சந்திரபாபு நாயுடு ஆதரவு கடிதம்

பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைப்பதற்காக நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு கடிதம் வழங்கினர். வரும் 7-ம் தேதி நடைபெறும் பா.ஜ.,எம்.பிக்கள் கூட்டத்தில் பிரதமராக மோடி ஒரு மவதாக தேர்வு செய்ய்பபட்ட பின்னர் ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என கூறப்படுகிறது.

பியூஷ்கோயல் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

தே.ஜ., கூட்டணி கூட்டம் முடிந்த பின்னர் மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் இல்லத்தில் அவரை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். அப்போது ஆட்சியில் பங்குபெறும் போது முக்கிய துறைகள் கேட்டு பெறுவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

மோடிக்கு கூட்டணி தலைவர்கள் பாராட்டு

உலகில் இந்தியாவின் பெருமையை அதிகரிப்பதில் மோடியின் பங்களிப்பு அதிகம். மோடியின் தலைமைத்துவம், அவரது தலைமையில் தேசம் வளர்ச்சி அமைந்துள்ளது . வறுமை ஒழிப்புக்காக மோடி மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது. இவ்வாறு கூட்டணி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

செல்வம்
ஜூன் 06, 2024 09:35

நீ மூடிட்டு போ.. 200 உ.பி.. அவங்க இஷ்டம்.. தி.மு.க வுக்கு கொடுத்தது போல நல்ல பணம் குவியும் துறைகளை கொடுத்தால் 5 ஆண்டுகள் என்ன 10 ஆண்டுகள் கூட மோடி காலையும் சேர்த்தே பிடிப்பார்கள்.. ????


Rajesh
ஜூன் 06, 2024 00:12

கோயில் குளம்னு ஜாலியா சுத்திக்கிட்டு இருந்த ஒரு மனிதர் இப்படி தல குனிந்து உட்கார்ந்து இருக்க காரணம் யார்.


M S RAGHUNATHAN
ஜூன் 05, 2024 22:51

Those parties who filed a petition in SC about EVMs, should apologise to the nation through Supreme Court that they were wrong and are illiterates vis a vis technical knowledge. They should also apologise to Election Commission. If they do not do, the SC should suo moto call the leaders of the party or should direct the EC to derecognise the Parties forthwith. This anarchy of the opposition should be put to an end by EC and SC. If they fail to do so, it will be deduced that they are hand in glove with the opposition.


venugopal s
ஜூன் 05, 2024 22:48

இந்த பாஜக கூட்டணி ஆட்சி ஐந்து வருடங்கள் நிறைவு செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.ஏனென்றால் கூட இருக்கும் நிதிஷ்குமாரும் சந்திரபாபு நாயுடுவும் கூட இருந்தே குழி பறிப்பதில் வல்லவர்கள்!


venugopal s
ஜூன் 05, 2024 22:42

பத்து வருடங்களாக சிங்கம் போல் கர்ஜித்து கம்பீரமாக வலம் வந்தவர் இப்போது பூனை போல் ஆகி விட்டாரே!


Neutrallite
ஜூன் 06, 2024 16:33

அப்போ மொதல்லியே பூனை மேல் மதிலா இருக்கிறவர்


Easwar Kamal
ஜூன் 05, 2024 22:36

எப்படி இருந்த நான் இப்படி ஐயிட்டன். இப்போ பாவம். சும்மாவ சொன்னாங்க பழமொழி யானைக்கும் ஆதி செருக்கும்


Kasimani Baskaran
ஜூன் 05, 2024 22:17

தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல ஊழல் செய்தவர்களை ஒழித்துக்கட்டுவதில் எந்த தயக்கமும் காட்டக்கூடாது. கூட்டணி குறுக்கே வந்தால் ஆட்சியை கலைத்து மறு தேர்தலை எதிர் கொள்ளலாம். பத்து ஆண்டுகள் நேர்மையான, நாட்டுக்கு முன்னேற்றத்தை கொடுத்த பாஜகவுக்கு இழக்க எதுவுமே இல்லை என்பதை மறந்துவிடக்கூடாது.


theruvasagan
ஜூன் 05, 2024 22:15

அ்ங்கே பதவியேற்பு நடந்தவுடன் புள்ளி கூட்டணி நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டின மாதிரி தலைக்கொரு பக்கம் உருண்டு போய்விடும்.


M S RAGHUNATHAN
ஜூன் 05, 2024 22:11

Since NDA is a pre poll alliance, the President should insist the alliance partners that they should give unconditional support for the entire tenure of Lok Sabha. Similarly, the alliance partners of groups should stick to their alliance for the entire tenure of LS. For different elections, they may form different alliance.


M S RAGHUNATHAN
ஜூன் 05, 2024 22:07

நாயுடு மற்றும் நிதிஷ் அவர்கள் கொடுத்த ஆதரவுக் கடிதத்தை ஜனாதிபதி மீடியாவில் வெளி இடவேண்டும். இல்லையென்றால் அந்த இத்தாலிய குடும்பம் எனக்கு 295 உறுப்பினர்கள் ஆதரவு என்று ஜனாதிபதி இடம் கடிதம் கொடுத்து ஏமாற்றுவார்கள். அம்மாதிரி இத்தாலிய பெண்மணி 25 வருடத்திற்கு முன் செய்து இருக்கிறார்.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி