உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை; போட்டு உடைத்தார் காங்கிரஸ் தலைவர் ஷக்கீல் அகமது

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை; போட்டு உடைத்தார் காங்கிரஸ் தலைவர் ஷக்கீல் அகமது

புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் மீது காங்கிரஸ் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷக்கீல் அகமது தெரிவித்துள்ளார். பீஹார் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஓட்டு திருட்டு, இவிஎம் இயந்திரத்தில் முறைகேடு என அடுக்கடுக்கான புகார்களை கூறிய ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மஹாகட்பந்தன் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bs0gbfor&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தத் தோல்வியானது, அடிமட்டத் தொண்டர்கள் முதல் முக்கிய தலைவர்கள் வரை காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் கட்சி செயலை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷக்கீல் அகமது கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் கூறியிருப்பதாவது; பீஹார் சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட யுக்திகள் அனைத்தும் பலவீனமாக இருந்தன. ராகுலின் ஓட்டு அதிகார யாத்திரையில் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் மட்டுமே கலந்து கொண்டனர். உண்மையான வாக்காளர்கள் பங்கேற்கவே இல்லை. பீஹார் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் மீது காங்கிரஸ் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. அதேபோல, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை எதிர்க்கும் காங்கிரஸின் அணுகுமுறைக்கு மக்களிடையே எந்த வரவேற்பும் இல்லை. அதேபோல, தேர்தலில் போட்டியிடுவதற்கான சீட் வழங்குவதில் ஊழல் நடந்துள்ளது.கட்சியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை ஏற்கனவே எடுத்து விட்டேன். ஆனால், தற்போது தான் அதனை அறிவிக்கிறேன். என்னால் ஒரு 5 ஓட்டுகள் கூட குறைந்து விடக் கூடாது என்பதால் தான் தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கவில்லை. இந்த முடிவை எடுக்கக் காரணம், கட்சியின் கருத்தியலுடன் ஏற்பட்ட முரண்பாடு அல்ல. கட்சியில் உள்ள சில குறிப்பிட்ட நபர்களுடன் உள்ள தனிப்பட்ட வேறுபாடுகளினால் தான் இந்த முடிவு எடுத்துள்ளேன். நான் வேறு எந்த கட்சியிலோ அல்லது அமைப்பிலோ சேரப்போவதில்லை. அந்த எண்ணமும் எனக்கு இல்லை. எனது முன்னோர்களைப் போலவே, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

naranam
நவ 17, 2025 18:47

முற்றிலும் உண்மை தான். ராகுல் சொன்ன ஒரு குற்றச்சாட்டு இது வரை நிரூபிக்கப்படவில்லை. மாறாக காங்கிரஸ் தலைவர்கள் மீதுள்ள குற்றச் சாட்டுகளில் பெரும்பாலானவை நிரூபிக்கப்பட்டுள்ளன. என்ன குற்றம் செய்தாலும் தப்பி விடலாம் என்ற எண்ணமும் என்ன பொய் சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள் என்ற எண்ணமும் தான் காங்கிரஸ் காரர்களிடம் தெரிகிறது. நாட்டுக்கும் மக்களுக்கும் உபயோகப் படும்படியான ஒரு கருத்தும் ஒரு யோசனையும் அவர்களிடம் இல்லையோ என்ற ஐயம் தான் மனதில் எழுகிறது. ஏதாவது பொய்களை அள்ளிவிட்டு பிரதமர் மோடியின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையைக் குறைத்து விடலாம் என்ற குறுக்கு புத்தி தான் ராஹுலிடம் இருக்கிறது. இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவார்கள் என்ற பொய்யைப் பரப்பி அதன்மூலம் நாடாளுமன்ற பிஜேபி உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்த பின்னும் காங்கிரசால் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதுவும் இந்த ஆண்டு வாக்குத் திருட்டு என்ற ராகுலின் பொய் மக்களிடையே சுத்தமாக எடுபட வில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இனிமேலாவது நாட்டுக்குப் பயன்தரும் வகையில் ஆக்கப் பூர்வமான ஏதோ கட்சியாக அரசியலை முன்னெடுக்குமா காங்கிரஸ்?


பேசும் தமிழன்
நவ 17, 2025 07:42

கரடியே காறி துப்பிய தருணம்..... பப்பு உன் வாயை திறந்தாலே பொய் மட்டுமெ வெளியே வருகிறது..... எப்போதும் உண்மை பேசியதே இல்லையா ???


spr
நவ 16, 2025 23:30

" நான் வேறு எந்த கட்சியிலோ அல்லது அமைப்பிலோ சேரப்போவதில்லை. அந்த எண்ணமும் எனக்கு இல்லை." நான் விற்பனைக்கு உள்ளேன் விரும்புவோர் தக்க விலையைக் கொடுத்து ஏற்றுக் கொள்ளவும் என்று மறைமுகமாக கூறுகிறார் ஒருவேளை இவரையும் கண்ணிருந்தும் குருடராக அநியாயங்களை பொறுத்துக் கொண்ட பீஷ்மபிதாமஹர் போல என்று கூறலாமோ


V K
நவ 16, 2025 22:10

அப்போ ஒட்டு கட்சேரி ஒட்டு கச்சேரி கூவி கொண்டு இருந்தான் குழுந்தை ராகுல் எல்லாம் வேஸ்ட்


KRISHNAN R
நவ 16, 2025 20:37

இப்போதாவது உண்மை வெளி வந்தது


ganesan
நவ 16, 2025 20:10

அதான் எல்லோருக்கும் தெரியுமே .


V Venkatachalam, Chennai-87
நவ 16, 2025 18:34

ராகுல் ஜோடிச்ச பொய்களை நீங்களும் போட்டு அமுக்கி கொண்டு தானே இருந்தீர்கள்? கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.


ManiK
நவ 16, 2025 18:29

வேறு எந்த கட்சியிலும் சேரமாட்டேன் என்றால் ...


S.VENKATESAN
நவ 16, 2025 18:15

இவர் சோனியா காந்திக்கு மிகவும் வேண்டியவர் காங்கிரஸ் கட்சியில் ஏதோ பெரிய பிரச்சினை உள்ளது


Rameshmoorthy
நவ 16, 2025 17:31

The cat has come out finally


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை