உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இதற்கு தான் தேர்தல் தள்ளிவைப்பு!

இதற்கு தான் தேர்தல் தள்ளிவைப்பு!

மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஜார்க்கண்டில் ஹேமந்த சோரன் கட்சியை உடைத்து, அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பா.ஜ., நினைக்கிறது. அதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் தேர்தலை தள்ளி வைத்துள்ளனர். சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி., - சிவசேனா உத்தவ் பால் தாக்கரே அணி

சொல்வது ஒன்று நடப்பது வேறு!

அடிக்கடி நடக்கும் தேர்தல்களால் நாட்டின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுவதாக பிரதமர் சுதந்திர தின உரையில் கூறினார். ஆனால் அடுத்த நாளே, மூன்று வெவ்வேறு மாநிலங்களுக்கு, வெவ்வேறு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரதமர் ஒன்று பேசுகிறார். நடப்பது வேறொன்றாக இருக்கிறது.சரத் பவார், தலைவர், தேசியவாத காங்., சரத் பவார் அணி

அரசியலில் இருந்தே விலகுவேன்!

மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டுக்கு நான் தடையாக இருப்பதாக, அதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மனோஜ் ஜராங்கே கூறியுள்ளார். அனைத்து முடிவுகளையும் எடுக்கும் பொறுப்பில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளார். நான் தடையாக இருக்கிறேன் என்று முதல்வர் சொன்னால், அரசியலை விட்டே விலகுவேன்.தேவேந்திர பட்னவிஸ், மஹா., துணை முதல்வர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை