உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.யில் அனைத்து கல்வி நிலையங்களிலும் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்படும்: முதல்வர் யோகி ஆதித்யநாத்

உ.பி.யில் அனைத்து கல்வி நிலையங்களிலும் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்படும்: முதல்வர் யோகி ஆதித்யநாத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ; உத்தரப்பிரதேசத்தில் அனைத்து கல்வி நிலையங்களிலும் வந்தே மாதரம் பாடல் பாடப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளார்.கோரக்பூரில் ஒற்றுமை அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று (நவ.10) நடைபெற்றது. இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது; பாரத மாதா மீதும், தாய்நாட்டின் மீதும் மக்களிடையே மரியாதை, ஒற்றுமை மற்றும் பெருமையை ஏற்படுத்துவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும். வந்தே மாதரத்தை பாடுவது நாட்டின் கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை நினைவூட்டுவதாக உள்ளது. மேலும் மாணவர்கள் இடையே தேசப்பக்தியை வலுப்படுத்துவாகவும் இருக்கும். இந்த பாடலின் மீது மரியாதை உணர்வு நமக்கு இருக்க வேண்டும். உ.பி.யில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் பாரத மாதாவின் மீது மரியாதை உணர்வை பிரதிபலிக்கும் வகையில், இங்குள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை பாடுவதை கட்டாயமாக்குவோம்.இவ்வாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

மணிமுருகன்
நவ 10, 2025 23:47

வரவேற்கிறேன்


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 10, 2025 21:48

வந்தே மாதரம் தேசிய கீதம் ஆக்கப்பட வேண்டும் ...... அப்போது தேசவிரோதிகளும், ஊடுவல்காரர்களும் பாடவேண்டிய கட்டாயம் ஏற்படும் .....


Field Marshal
நவ 10, 2025 19:49

துண்டு சீட்டு இல்லாமல் முதல்வரும் துணை முதல்வரும் தமிழ்தாய் வாழ்த்து பாடுவாங்களா ?


bharathi
நவ 10, 2025 19:48

State in control ....wise man BJP need such leadership in all state. TN is in worst leadership better BJP must have announced ADMK as its leadership


M S RAGHUNATHAN
நவ 10, 2025 18:46

அப்படி போடு ஜெய் யோகி


Rathna
நவ 10, 2025 18:40

இந்த நாட்டில் ஒரே முதுகு எலும்பு உள்ள மனிதர். அதற்கு மேல் தேசபக்தர். வந்தே மாதரம். தாயின் மணிக்கொடி பாரீர்.


Rajkumar Ramamoorthy
நவ 10, 2025 18:06

Super...


GMM
நவ 10, 2025 18:04

நாட்டின் குடிமகனை அன்னியரிடம் இருந்து பாதுகாக்கும் தேசிய கீதம் பாடு , தேசிய கொடியை வணங்கு என்று 75 ஆண்டுகள் கழித்து சட்டம் போடும் நிலையில் உள்ளது நம் நிலை. அரசியல் சாசன அமைப்பு கொண்டு நீதிமன்றம் சட்டத்துக்கு முன் சம படுத்த முடியவில்லை. சில அரசியல் வாதிகள், நீதிபதிகள் அரசியல் சாசனம் வழங்காத தடையில்லா அதிகாரம் எடுத்து வருகிறார்கள். தேசியத்தை விரும்பாத நபர் இந்திய குடிமகன் உரிமை பெற முடியுமா? இதனை உறுதி செய்ய அதிகாரம் பெற்றது உச்ச நீதிமன்றம். ஆனால், தயங்குகிறது.


V RAMASWAMY
நவ 10, 2025 17:51

வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்


Tamilan
நவ 10, 2025 17:47

யோகி ஜி போல் தமிழகத்தில் அண்ணாமலை அவர்களை பா ஜா க கட்சி முழு அதிகாரம் கொடுக்க வேண்டும். ஜெய் ஹிந்துஸ்தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை