உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வருங்கால தலைமுறைகளுக்கு எது அவசியம்: மத்திய அமைச்சர் சொல்வதை கேளுங்க!

வருங்கால தலைமுறைகளுக்கு எது அவசியம்: மத்திய அமைச்சர் சொல்வதை கேளுங்க!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சூரத்: வருங்கால தலைமுறைகளின் நலன் கருதி இப்போதிருந்தே மழை நீரை சேகரிக்க தொடங்க வேண்டும் என மத்திய ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீல் கூறினார்.சூரத்தில், 2021 மார்ச் மாதத்தில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட 'கேட் தி ரெயின்' பிரசாரத்தின் கீழ் 'நீர் சேகரிப்பு - பொதுமக்கள் பங்கேற்பு' என்ற தலைப்பில் இன்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் மற்றும் பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி ஆகியோரும் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பாட்டீல் பேசியதாவது:மக்கள், பெரிய அளவில் தண்ணீர் பிரசாரத்தில் ஈடுபடுவது, வருங்கால தலைமுறைகளுக்கு அவசியமானது.மழைநீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீரை நிரப்புவதற்கான பிரசாரத்தில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் இணைந்து வருகின்றனர்.உலக மக்கள் தொகையில், இந்தியா 18 சதவீதமும், கால்நடைகள் 18 சதவீதமும் உள்ளது, ஆனால் குடிநீர் மட்டும் 4 சதவீதமே உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்யாவிட்டால் மிகவும் சிரமம்.நமது வருங்கால தலைமுறைகளுக்கு பணத்தையும் சொத்துக்களையும் விட்டுச் செல்லலாம்; தண்ணீர் இல்லாத பூமியை விட்டுச் சென்று யாருக்கு என்ன பயன்? இதை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும். இவ்வாறு மத்திய ஜல் சக்தி அமைச்சர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Lion Drsekar
அக் 14, 2024 13:14

வருங்கால தலைமுறைகளுக்கு நிம்மதியான வாழ்க்கை, உயிர் மற்றும் உடமைகளை பாதுகாப்பு , கொள்ளையடிக்கும் வரிவிதிப்பில் விலக்கு , இனப்பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஒருவரே என்ற நிலையில் இருக்க ஒரு வாய்ப்பு , மனித நேயம் இவைகள்தான் தேவை , கொடுக்க முடியுமா, கொடுத்தால் நல்லது, இதைத்தான் மக்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் வந்தே மாதரம்


Sundar R
அக் 14, 2024 06:37

மழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் வாழ்பவர்கள் வீட்டருகில் நீர் செல்லும். நீரை அங்கேயே தேங்க விடாமல் அருகிலுள்ள குளங்கள், ஏரிகள், கண்மாய்களுக்கு பாய விடுவதற்கு பாதைகளை வெட்டி விட்டு வருடாவருடம் மழைக்காலத்திற்கு முன்பு தூர் வார வேண்டும். ஆறுகளில் பாயும் கடலில் வீணாக கலப்பதைத் தடுக்க போதிய எண்ணிக்கையில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். இவை அனைத்தையும் சிவில் இன்ஜினியர்கள் மேற்பார்வையில் நேர்த்தியாக செய்ய வேண்டும். இதற்கு செலவாகும் பணத்தை மாநில அரசின் பிரதிநிதியாக விளங்கும் ஒரே ஆளிடம் கொடுத்தால் மொத்த பணத்தையும் விழுங்கி விடுவான். எனவே, பணத்தை அந்தந்த வார்டுகளுக்கு நேரடியாக அனுப்ப வேண்டும்.


Kasimani Baskaran
அக் 14, 2024 05:43

கடலில் ஏராளமான அளவில் நீர் இருக்கிறது. ஆகவே நிலத்தில் இருந்து கடலுக்கு நீர் சென்றுதான் கடலை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே நீர் நிலைகளை சரியாக பராமரித்து மழை நீரை சேமித்தால் முக்கால் வாசி பிரச்சினை தீர்ந்து விடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை