உள்ளூர் செய்திகள்

உதவி பெறும் பள்ளிகளுக்கு வினாத்தாள் செலவு மறுப்பு

ராமநாதபுரம்: தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டு இறுதி தேர்வுகள் நடக்கிறது. 1 முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வினாத்தாள் செலவினங்கள் வழங்கப்பட்டு வருகிறது.6 முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் வினாத்தாள் செலவினங்கள் வழங்கப்படுவதில்லை. ஆனால் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் செலவினத்தொகை வழங்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்