மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கடலுார் வாலிபர்கள் 3 பேர் கைது
பாகூர்: கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கடலுார் வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் - சார்காசிமேடு சாலையில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. விசாரணையில், கடலுார் கோண்டூர், மாரியம்மன் கோவில் தெரு விஜய் (எ) சூர்யா, 19; ராகவன், 20; சஞ்சய், 21; என்பது தெரிய வந்தது.இதுதொடர்பாக கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த 250 கிராம் கஞ்சா, இரண்டு மொபைல் போன், ரொக்க பணம் ரூ.10 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.