உள்ளூர் செய்திகள்

மாணவர்களை அச்சுறுத்தும் ஆபத்தான திறந்தவெளி கிணறு

மரக்காணம்: ஆலப்பாக்கம் பள்ளி அருகே ஆபத்தான நிலையில் திறந்தவெளி கிணறு, மாணவர்களை அச்சுறுத்தி வருகிறது. மரக்காணம் ஒன்றியம் ஆலப்பாக்கம் கிராமத்தில், இ.சி.ஆர். சாலை அருகில் அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. பள்ளி அருகே பயனற்ற கிணறு ஒன்று, பாதுகாப்பற்ற நிலையில் திறந்த நிலையிலேயே உள்ளது. அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளதால் மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கருதி, இந்த கிணற்றுக்கு கம்பி வேலி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்