முழு எழுத்தறிவு பெற சி.இ.ஓ., வலியுறுத்தல்
மதுரை: மதுரையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டப் பயனாளிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் விழா சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் நடந்தது.வடக்கு ஒன்றியம் சுப்பராயலு நடுநிலைப்பள்ளி மையத்தில் நடந்த விழாவில் பயனாளிகளுக்கு நோட்டு, பென்சில் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கி சி.இ.ஓ., பேசுகையில் மத்திய அரசால் வழங்கப்படும் இந்த உபகரணங்கள் மூலம் தினமும் நீங்கள் பார்க்கும் பொருட்களின் இடங்களின் பெயர்களை எழுதவும், அவசரகால தொலைபேசி எண்கள் எழுதி தெரிந்துகொள்ளவும் பழகிக்கொள்ள வேண்டும். கற்றல் மையங்களுக்கு தொடர்ந்து வந்து முழு எழுத்தறிவு பெற வேண்டும் என்றார். ஒருங்கிணைந்த கல்வி உதவி திட்ட அலுவலர் சரவணமுருகன், ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு, வட்டார வளமைய (பொறுப்பு) மேற்பார்வையாளர் பாக்யராஜ், ஆசிரியர் பயிற்றுநர் ராஜா பங்கேற்றனர்.