நாளை மறுநாள் துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் வரும் 26ம் தேதி முதல் வெளியாகிறது.அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கடந்த ஜூன்/ஜூலை மாதங்களில் நடந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யது கொள்ளலாம். பிளஸ் 2 சான்றிதழ் ஜூலை 26ம் தேதியும், பத்தாம் வகுப்பு சான்றிதழ் 30ம் தேதியும், பிளஸ் 1 சான்றிதழ் 31ம் தேதியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விடைத்தாள் மற்றும் மறுகூட்டல்விடைத்தாள் நகல் பெற விரும்பும் தேர்வர்கள் குறிப்பிட்டுள்ள தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் சென்று கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.பிளஸ் 2 விடைத்தாள் நகல்: ஜூலை 29, 30; பாடம் ஒன்றிற்கு ரூ.275.பிளஸ் 1 விடைத்தாள் நகல்: ஆக.,1, 2; பாடம் ஒன்றிற்கு ரூ. 205; உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305பத்தாம் வகுப்பு விடைத்தாள் நகல்: ஆக.,1,2; பாடம் ஒன்றிற்கு ரூ.275.தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு நேரில் சென்று கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் தேர்வர்கள் மட்டுமே பின்னர் மறுகூட்டல்/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.