அண்ணா பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி மற்றும் அண்ணா பல்கலை இணைந்து புத்தாக்க தொழில்முனைவோர்களுக்கு இடவசதி, தொழில்நுட்ப உதவி மற்றும் துறை சார்ந்த வழிகாட்டுதல், பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஓப்பந்தம் செய்துள்ளனர்ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் செயல்படும் இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன் கவுன்சில் நிறுவனம் மாவட்டத்தில் புத்தாக்க தொழில்முனைவோருக்கு இடவசதி, தொழில்நுட்ப உதவி, துறை சார்ந்த வழிகாட்டுதல் போன்ற பணிகளை செய்கிறது.இதைமேம்படுத்த சென்னை அண்ணா பல்கலையின் அண்ணா இன்குபேட்டர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். இனிவரும் நாட்களில் கருத்தரங்கங்கள், பயிற்சி முகாம்கள், தொழில்நுட்ப போட்டிகளை இரு நிறுவனங்களும் இணைந்து மாவட்ட மற்றும் தேசிய அளவில் நடத்த உள்ளன.சென்னை அண்ணா பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் பல்கலை இன்குபேட்டர் சி.இ.ஓ., உமா, செய்யது அம்மாள் இன்னோவேஷன்கல்லுாரி முதல்வர் பெரியசாமி, இன்குபேஷன் கவுன்சில் சி.இ.ஓ., கார்த்திகேயன் பங்கேற்றனர்.