மாணவர்கள் வீதி நாடகம்
திருவொற்றியூர்: திருவொற்றியூர், ஏழாவது வார்டில் நேற்று காலை, மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் ஒர்க் கல்லுாரி முதலாமாண்டு மாணவர்கள், திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தொடர்ந்து, விழிப்புணர்வு வீதி நாடகத்தில், குப்பையை தரம் பிரித்து வழங்குதல், காலி மனைகளில் குப்பையை வீசுவதால் மழைநீர் தேங்கி, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவுதல் போன்றவை குறித்து விளக்கினர்.