உள்ளூர் செய்திகள்

கலைத்திறன் போட்டி பிப்., 7ல் நடக்கிறது

சென்னை: சென்னை மாவட்ட பள்ளி மாணவ மாணவியருக்கு, அடுத்த மாதம் 7ம் தேதி, கலை பண்பாட்டு துறை சார்பில், பல்வேறு கலைத் திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.கலை பண்பாட்டு துறையின்கீழ் செயல்படும், ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், 5 - 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு கலை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.சிறுவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில், மாவட்டங்கள்தோறும் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய பிரிவுகளில், 5 - 8; 9 - 12; 13 - 16 என்ற வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அந்த வகையில் இந்த ஆண்டுக்கு, சென்னை மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டிகள், பிப்., 7ம் தேதி, காலை 9:00 மணிக்கு, சென்னை ராஜா அண்ணாமலைபுரம், டி.ஜி.எஸ்., தினகரன் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக்கல்லுாரி வளாகத்தில் நடக்க உள்ளது.பங்கேற்க ஆர்வமுள்ள மாணவ - மாணவியர் தங்கள் பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளி முகவரி உள்ளிட்ட விபரங்கள் மற்றும் போட்டிக்கு தேவையான கருவிகளுடன் நேரில் செல்ல வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 2152 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்