இலவச கல்விக் கண்காட்சி
திண்டிவனம்: திண்டிவனத்தில் விருக்ஷா கல்வி குழுமத்தின் சார்பில் இலவச கல்விக் கண்காட்சி நடந்தது. மயிலம் ரோட்டிலுள்ள என்.பி.சி. திருமண நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்த கல்வி கண்காட்சிக்கு, விருக்ஷா கல்விக்குழுமத்தின் தலைவர் சந்துரு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சங்கர் வரவேற்றார். கல்விக் கண்காட்சியை, விஞ்ஞானி வெங்கடேசன் துவக்கி வைத்தார். நிர்வாகி ஜெயலட்சுமி, விவசாய சங்க தலைவர் குமார், விருக்ஷா கல்விக்குழுமத்தின் நிர்வாகிகள் ஆனந்தி, ராஜா, பிருந்தா, சீதா சல்மா, நிவேதிதா, உமாமகேஸ்வரி, காஞ்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர் . கண் காட்சியை, திண்டிவனம் பகுதியை சேர்ந்த நூற்றுக் கணக்கான மாணவர்கள் பெற்றோர்களுடன் நேரில் வந்து பார்வையிட்டனர்.