உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மேட்டூர் அணையில் கதவணைகள் கட்டியிருந்தால் நீர் கடலுக்கு போயிருக்காது

மேட்டூர் அணையில் கதவணைகள் கட்டியிருந்தால் நீர் கடலுக்கு போயிருக்காது

சென்னை: கடந்த மாதம் வறண்டு கிடந்த காவிரி, தற்போது கர்நாடகாவில் ஆர்ப்பரித்து வெள்ளமாக ஓடோடு வருகிறது. பாளம் பாளமாக வெடித்துக் கிடந்த மேட்டூர் அணைப் பகுதி இப்போது ததும்பி வழிவதால், இரண்டு நாட்களில் 27 டி.எம்.சி., உபரி நீர் வெளியேற்றப்பட்டு விட்டது.சேலம் மேட்டூர் அணை, 93.4 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. அணை நிரம்பியுள்ளதால், 1ம் தேதி, வினாடிக்கு 1.67 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இரண்டு நாட்களில் மட்டும், 27.1 டி.எம்.சி., நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. இந்த நீர், கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் வழியாக டெல்டா பாசனத்திற்கு செல்கிறது. வெள்ள சேதத்தை தவிர்ப்பதற்காக, கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு அதிகளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.அ.தி.மு.க., ஆட்சியில் கொள்ளிடம் ஆற்றில் நீரை சேமிக்கும் வகையில், கடலுார் - மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள ஆதனுார் - குமாரமங்கலம் இடையே, கதவணை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 496 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு ஆண்டுகளாக பணி நடந்து வருகிறது.இதில் நிலம் கையகப்படுத்துவதற்கு மட்டும், 31.3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில், 98 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு விட்டதாக, நீர்வளத்துறையினர் கூறி வருகின்றனர். நிலம் கையகப்படுத்தும் பணிகளை முடிக்க முடியாததால், கதவணையை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.இதேபோல, கரூர் மாவட்டத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே, நஞ்சை புகளூர் என்ற இடத்தில், 406 கோடி ரூபாயில் கதவணை கட்டும் பணி நடக்கிறது. இதில், 75 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு, எஞ்சிய பணிகள் இழுபறியில் உள்ளன.இந்த இரண்டு கதவணை பணிகளை முடித்திருந்தால், அவற்றில் நீரை தேக்கி பாசனம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்தி இருக்க முடியும். நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்திருக்கும். ஆனால், பணிகளை முடிப்பதற்கு நீர்வளத்துறையினர் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதனால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு உள்ள நீரில், அதிகளவு கடலுக்கு சென்று வீணாகி வருகிறது.அண்ணாமலை கிண்டல்தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'கொள்ளிடம் ஆற்றில் தி.மு.க., ஆட்சியில், 6.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணையை காணவில்லை' என, தெரிவித்துள்ளார். 'கிணற்றை காணவில்லை' என, நடிகர் வடிவேலு, திரைப்படம் ஒன்றில் கூறும் படத்தையும் வெளியிட்டுள்ளார்.

'

'கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதிக்கப்பட்ட மண்தாங்கு சுவரின் நிலை குறித்து முழுமை யாக அறிய முடியவில்லை' என, நெடுஞ்சாலை துறை தெரிவித்து உள்ளது.இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை - திருச்சி - திண்டுக்கல் சாலையில், 2014 - 15ம் ஆண்டு உயர்மட்ட பாலம் கட்டும் பணி, 24 கண்களுடன் 792 மீட்டர் நீளத்திற்கு நெடுஞ்சாலை துறையால் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2018ல் காவிரியில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் திருப்பி விடப்பட்டதால், பழைய இரும்பு பாலத்தின், 18 மற்றும் 19வது கண்கள் சேதமடைந்து அடித்துச் செல்லப்பட்டன.புதிய பாலத்தில், பாலத் துாண்கள் 17 முதல் 21 கீழ் உள்ள நிலத்துாண்கள் வரை, 2லிருந்து 4 மீட்டர் ஆழத்திற்கு அடித்தளம் தெரியும் வகையில், மண் அரிப்பு ஏற்பட்டது. இதை தடுப்பதற்கும், பாலத்தின் உறுதி தன்மையை மேம்படுத்துவதற்கும், கொள்ளிடம் ஆற்றுப்படுகையை பாதுகாப்பதற்கும், பாலத்தின் அடியில் மணல் சேருவதற்காக, 6.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 800 மீட்டர் நீளத்திற்கு மண்தாங்கும் சுவர் அமைப்பதற்கு, 2020ல் அனுமதி பெறப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, 300 மீட்டர் நீளத்திற்கு இரும்புக் கட்டுமானத்துடன் கூடிய கான்க்ரீட் தடுப்பு சுவரும், 492 மீட்டர் நீளத்திற்கு வெறும் கான்க்ரீட் தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டது. இந்த கான்க்ரீட் அமைப்பே மண் தாங்கு சுவர்.கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள கன மழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக, மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு, 1.50 லட்சம் கனஅடி நீர், கடந்த 31ம் தேதி இரவு திறக்கப்பட்டது.அதிகளவு நீர் திடீரென கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டதால், பாலத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட மண்தாங்கு சுவர்களில், 30 மீட்டர் அளவிற்கும், பாலத்தின் 22 மற்றும் 23வது கண்ணுக்கு இடைப்பட்ட பகுதியில் சற்று மேல்நோக்கியும் நகர்த்தப்பட்டு விட்டது.நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதிக்கப்பட்ட மண்தாங்கு சுவரின் தற்போதைய நிலை குறித்து முழுமையாக அறிய முடியவில்லை. நீர்வரத்து குறைந்த பின்னர் தான், பாதிக்கப்பட்ட மண்தாங்கு சுவரின் விபரங்கள் தெரியவரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Selvaraju
ஆக 08, 2024 00:35

If the Government should have already taken measure by implementing 10 feet diameter pumbing tem to filter the water by High Power electric motors and surplus water during rain seasons they are reach the lake and fill up throughout the tamilnadu by doing this the rain seasons water should be preserved to the greater extent to avoid to go to the sea by doing so the ground water sources will increased


Manivannan KP
ஆக 05, 2024 12:34

தயவுகூர்ந்து தமிழக அரசு மெத்தனம் காட்டாமல் உடனடியாக நீர் மேலாண்மையை பயன்படுத்தி காவிரி நீரை சேமிக்க வேண்டுகிறோம். நீரின்றியமையாதுலகு நன்றி


Manivannan KP
ஆக 05, 2024 12:28

அரசு மெத்தனம் காட்டாமல் உடனடியாக நீர் மேலாண்மையை செய்து தமிழகத்தை செழிப்பாக்க வேண்டும். எல்லா தொழில் நுட்பமும் நம்மிடம் உள்ளது. காற்றுள்ளபோதே தூற்றிகொள்ளவும். நன்றி


Gajageswari
ஆக 05, 2024 04:29

மேகதாதுவில் அவர்களும் ராசி மணல் நாமும் ஆணை கட்டியிருந்தால் இருவருக்கும் பயன் தரும். எனக்கு இரண்டு கண் போனால் போகட்டும் ஆனால் அவர்களுக்கு ஓரு கண்ணாவது போகவேண்டும்


Selva Priya
ஆக 04, 2024 18:16

மேட்டூர் அணை தூர்வாரி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன. அணையில் தேங்கியிருக்கும் சேறு சகதிகள் இருபது முப்பது அடிகளுக்கு மேல் இருக்கும். தூர்வாரினாலே இன்னும் சிறிது நீரை சேமிக்க முடியும்.


RADHAKRISHNAN
ஆக 04, 2024 15:13

கர்னாடக அரசு கட்டிக்கொடுக்கவேண்டும் என ஒரு தரமனத்தைப்போட்டுவிட்டால் அதை வைத்து ஒரு ஐம்பது வருடம் ஆட்டலாமே காவிரி பங்கீடுபோல, மலைகலத்தில் காவிரியில் வரும்நீரை சேமித்து வைக்க இதுவரை ஒரு அரசுகூட நடவடிக்கையில்லை, இதில் வரடாவருடம் காவிரி தண்ணீரபிரச்சணையை வைத்து அரசியல் செய்வது, எங்காவது ஒரு அணை கட்ட துப்பு உள்ளதா என்றால் துப்பிக்கொள்ளவேண்டுயதுதான்,


Manivannan KP
ஆக 05, 2024 13:09

நன்றி. ஒரு அணை கட்டப்படவேண்டும். பெருவெள்ளநீர் சேமிக்கப்படவேண்டும். அது இந்த அரசின் வாழ்நாள் சாதனையாக வேண்டும்


G.Manikandan
ஆக 04, 2024 12:08

காவேரி ஆற்றின் புலப்படத்தை ஒருமுறை பார்வையிடுங்க, மேட்டூர் நீர்த்தேக்க பகுதியிலிருந்து நேர் கிழக்கே 50 கிமீ தொலைவில் வெள்ளாறு எனப்படும் வசிஷ்டநதி ஆடி மாதங்களில் வறண்டநிலையில்தான் காணப்படும். ஸ்டான்லி நீர்பிடிப்பு பகுதியிலிருந்து வெள்ளாற்றுடன் ஒரு கால்வாய் வெட்டி இணைத்து விட்டால் ஆத்தூர் தலைவாசல் ஆறகளூர் பாக்கம்பாடி கூகையூர் மாமாந்தூர் பனையாந்தூர் வள்ளிமதுரம் ஒரங்கூர் போன்ற இப்பகுதிகளும், மற்றும் பாக்கம்பாடி ஏரியிலிருந்து வடபுறமாக பிரிந்துசெல்லும் குரால் அலம்பலம் நைனார்பாளையம் மற்றைய பலபகுதிகளும் பலனடையும்.அந்த இடைப்பட்ட 50 கிமீ உயரமான பகுதியாகும். ஆனால் தொழில்நுட்பம் மிகுந்த இந்த காலத்தில் அது ஒரு பெரிய விஷயமே அல்ல.


Gunasekaran Chellan
ஆக 04, 2024 11:56

நாம் டெல்டா பாசனத்திற்கு எந்தளவிற்கு முக்கியதுவம் கடலில் வீனாக இதுவரை 27 டி எம் சி தண்ணீரை விட்டுவிட்டோம். இப்படி இதற்கு தமிழக அரசு இதுவரை எந்த அர்த்தமுள்ள விளக்கமும் அளிக்கவில்லை. மேட்டூர் அணையில் இல்லாத காலகட்டத்தில் 1 அல்லது 2 டிஎம் சி தண்ணீருக்கு கர்நாடகாவிடம் பிச்சை எடுத்தோமே மறந்து விட்டதா. தமிழக விவசாயிகள் அரசியல்வாதிகள் போல நடந்து கொள்கிறார்கள் இவ்வளவு தண்ணீர் வீணாக கடலுக்கு போய் கொண்டிருப்பதை கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை 40 டி எம் சி தண்ணீர் கடலில் வீனாக கலந்து விட்டது. கர்நாடகா அரசு முதல்வர் தமிழ்நாடு அரசு தண்ணீரை வீண்டிக்கிறது என்பது இப்போது உண்மையாகி விட்டது. தமிழ் நாட்டின் நீர்வளத்துரை அமைச்சர் பொறுப்பேற்று ராஜினமா செய்யவேண்டும்.


venugopal s
ஆக 03, 2024 23:18

அந்த இரண்டு கதவணைகள் கட்டியிருந்தால் எவ்வளவு டி எம் சி டி காவிரி நீர் சேமித்திருக்க முடியும் என்ற விபரத்தை மட்டும் சொல்லவில்லையே! வேண்டும் என்றே சொல்லவில்லையா அல்லது சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லையா?


Sathyanarayanan Sathyasekaren
ஆக 04, 2024 06:10

வேணுகோபால் வழக்கம் போல கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வழக்கமான திருட்டு திராவிட கொள்ளைக்கூட்ட வழக்கப்படி, இன்னொரு தேவை இல்லாத கேள்வியை கேட்கிறாய்.


ராஜ்
ஆக 03, 2024 13:03

அதற்கெல்லாம் எங்களிடம் நிதி இல்லைங்க நாங்களே மடி ஏந்தி வசூல் செய்து கார் ரேஸ் நடத்துகிறோம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை