உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு நிதி டில்லி செல்ல நெடுஞ்சாலை துறை முடிவு

சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு நிதி டில்லி செல்ல நெடுஞ்சாலை துறை முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், 6,606 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில், 5,095 கி.மீ., சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது. இவற்றில் கட்டணம் வசூல் செய்ய, 59 இடங்களில், சுங்கச்சாவடிகள் உள்ளன. மீதமுள்ள 1,511 கி.மீ., சாலைகள், மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் இயங்கும் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு வாயிலாக பராமரிக்கப்படுகின்றன. இச்சாலைகளை பராமரிப்பதற்கான நிதி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக வழங்கப்படுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில், மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்காமல், அவற்றை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு, 2,500 கி.மீ., நீளமுள்ள பல்வேறு சாலைகளை எடுத்துக்கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதில், திண்டுக்கல் - காரைக்குடி, பெரம்பலுார் - ஆத்துார், சேலம் - திருப்பத்துார், தொப்பூர் - ஈரோடு, மாலுார் - அதியமான்கோட்டை, ஒரகடம்செய்யார் - அரூர், கும்பகோணம் - சீர்காழி உள்ளிட்ட 841 கி.மீ., சாலைகளை தரம் உயர்த்த, மத்திய அரசு அனுமதி வழங்கிஉள்ளது. திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி, வள்ளியூர் - திருச்செந்துார், கொள்ளேகால் - மேட்டூர், மேட்டுப்பாளையம் - பவானி, அவினாசி - மேட்டுப்பாளையம், பவானி - கரூர், பழனி - தாராபுரம், ஆற்காடு - திண்டிவனம் உள்ளிட்ட, 500 கி.மீ., சாலைகள் மேம்படுத்த கொள்கை ரீதியாக ஒப்புதல் வழங்கப்பட்டது. திண்டுக்கல் - நத்தம், நத்தம் - கொட்டம்பட்டி, சேலம் - திருப்பத்துார் உள்ளிட்ட 21 சாலைகளை 1,497 கி.மீ., தரம் உயர்த்தும் திட்டம் நிலுவையில் வைக்கப்பட்டது. சுங்க கட்டண வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்ட சாலைகள் மட்டும் மேம்படுத்தப்பட்டு உள்ளன. எஞ்சிய சாலைகளை சீரமைப்பதற்கு தேவையான நிதியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கவில்லை. இதையடுத்து, டில்லி சென்று, தேசிய நெடுஞ்சாலை ஆணைய உயர் அதிகாரிகளை சந்தித்து, இதுகுறித்து வலியுறுத்த, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு அதிகாரிகள், அடுத்த வாரம் டில்லி செல்ல உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

LS Jothilingam
ஜூன் 08, 2024 22:35

தமிழக நெடுஞ்சாலைத்துறையில் திராவிட மாடல் ஆட்சி பதவியேற்ற நாள் முதல் அனைத்து பணிகளுக்கும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 30 சதவீதம் கமிஷன் தொகை பெறப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் சுமார் 60 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதி தமிழக அரசால் நெடுஞ்சாலைத்துறைக்கு பார் ஒதுக்கீடு செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது போக கூடுதலாக மத்திய அரசிடம் இருந்தும் நெடுஞ்சாலைத்துறை கட்டமைப்புக்கு சிறப்பு நிதி ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது, அதிலும் 30 சதவீதம் கொள்ளையடிக்கப்படுகிறது.தற்போது கூடுதல் நிதியை பெற்றால் இன்னும் சிறப்பாக கொள்ளையடிக்கலாம் என்பதற்காக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு ஏ.வ.வேலு அவர்கள் தலைமையில் திராவிட மாடல் நாயகன் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி 30% கமிஷன் அரசு மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியை பெற்று கொள்ளையடிக்க மத்திய அரசை அணுகி உள்ளது.


அருண், சென்னை
ஜூன் 08, 2024 18:57

எல்லா துறையிலும் கொள்ளை அடிதாகிவிட்டது... இப்போ இந்த துறையோ? தெரு நாய்களுக்கு கருத்தடைக்கு ஒதுக்கிய 2500 என்ன ஆச்சு?... எல்லாமே முதல் குடும்பத்துக்கு போகுது


Jai
ஜூன் 08, 2024 12:37

சென்னை சேலம் எட்டு வழி சாலையை அரசியலுக்காக ஆர்ப்பாட்டம் செய்து நிறுத்தி வைத்துவிட்டு இன்று சாலைகளை மேம்படுத்த மத்திய அரசிடம் கெஞ்ச வேண்டியது ஏன்? இந்திய அளவில் விபத்துகளில் அதிகம் உயிரிழப்பது தமிழ்நாட்டில் தான். புதிய தரத்துடன் போடப்படும் சாலைகளினால் இந்த விபத்துகள் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. ஆகவே புதிய சாலைகள் போடுவதில் அரசியல் செய்யாமல் மாநில ஆளும்கட்சியினர் திறமையை பயன்படுத்தி தரமான ரோடுகளை கொண்டு வந்து மக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும். இந்தியா முழுவதும் பிரம்மாண்டமான சாலைகள் போடப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது. இங்கு அரசியலுக்காக சாலைகளை விரிவாக்கம் செய்யாமலும் புதிய சாலைகள் போடவும் மக்கள் உயிர்போது கேட்பதற்கு வருத்தமாகவும் எரிச்சலாகவும் உள்ளது.


ஆரூர் ரங்
ஜூன் 08, 2024 12:17

தமிழகத்தில்தான் அதிக வாகனங்கள் உற்பத்தியாகி அதிகமாக விற்கின்றன. சாலை வாகன வரி வசூலும் அதிகம். மலைப் பகுதிகள் குறைவு என்பதாலும் சிமெண்ட் ஜல்லி மணல் இங்கேயே கிடைப்பதால் சாலை அமைக்கும் செலவும் குறைவு. பின்னர் ஏன் மத்திய அரசிடம் உதவி கேட்க வேண்டும்? மேலும் மத்திய நெடுஞ்சாலைத் துறை சாலை அமைக்க FILLING MATERIAL தருவதிலும் மாநில அரசு சுணக்கம் காட்டி ஒத்துழைப்பளிப்பதில்லை என்ற புகாரும் உள்ளது.


ellar
ஜூன் 08, 2024 09:51

மாநிலம் சாலைகளை பராமரிக்க வசதி இல்லாததால் மத்திய அரசிடம் கொடுத்தால் அப்புறம் சுங்கவரி வசூலித்து தானே அதைச் செய்வார்கள்? அப்பொழுது சாலை வரி அதிகம் என்று சுட்டிக் காண்பிப்பதால் என்ன பலன்? மந்திரத்தில் மாங்காய் விழுமா? சாலை பராமரிப்பு வெறும் வார்த்தையினால் நடைபெறுமா? நமது மாநிலத்தில் விற்பனையாகும் வாகனங்களில் இருந்து நாம் வசூலிக்கும் சாலை வரி இந்த நெடுஞ்சாலைகளுக்கும் சேர்த்து தானே ? அப்படி இருக்க அந்த வருமானத்தை நாம் மத்திய அரசுக்கு தருகிறோமா?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை