உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அறநிலையத்துறை நில அபகரிப்பு வழக்கு: அழகிரியை விடுவிக்க ஐகோர்ட் மறுப்பு

அறநிலையத்துறை நில அபகரிப்பு வழக்கு: அழகிரியை விடுவிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டையில், மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லுாரி உள்ளது. இந்தக் கல்லுாரி, ஹிந்து அறநிலைய துறைக்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததாக, மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hzny6rkv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

குற்றச்சாட்டு

இப்புகாரில், அழகிரி உள்பட ஏழு பேர் மீது, 2014ல் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பான வழக்கு, மதுரை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி, அழகிரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த, மதுரை மாவட்ட நீதிமன்றம், போலி ஆவணங்கள் தயாரித்தது, மோசடி, ஏமாற்றுதல், போலி ஆவணத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து மட்டும் அழகிரியை விடுவித்து, 2021ல் உத்தரவிட்டது.ஆனால், நம்பிக்கை மோசடி, கூட்டுச்சதி போன்ற குற்றச்சாட்டுகளை, அழகிரி எதிர்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, மதுரை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்தனர்.அதேபோல, மதுரை மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், வழக்கில் இருந்து தன்னை முழுமையாக விடுவிக்கக் கோரியும், அழகிரி மனுத்தாக்கல் செய்தார்.இந்த இரண்டு மனுக்களும், 2023ம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களை அடுத்து, இந்த மனுக்கள் மீதான உத்தரவை, உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் தள்ளிவைத்து இருந்தார்.

தள்ளுபடி

இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான உத்தரவை, நீதிபதி பி.வேல்முருகன் நேற்று பிறப்பித்தார். நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை ஏற்று, போலி ஆவணங்கள் தயாரித்தது, மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து அழகிரியை விடுவித்து, மதுரை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நீதிபதி ரத்து செய்தார்.அத்துடன் வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக்கோரி, அழகிரி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ராமகிருஷ்ணன்
மார் 05, 2025 13:37

திருமங்கலம் பார்முலாவை உறுவாக்கிய விஞ்ஞான களவாணியை ஏன் ஜெயிலில் போடவில்லை.


SUBBU,MADURAI
மார் 05, 2025 14:49

அதை விட மதுரை தினகரன் அலுவலகத்தை எரித்து அதில் மூன்று அப்பாவிகளை கொன்ற அழகிரியை என்று சொன்னால் அந்த வார்த்தை பொருத்தமாக இருக்கும்.


Anantharaman
மார் 05, 2025 13:11

அப்பாக்கு பிள்ளைகள் தப்பாமல் பிறந்துள்ளனர்.


Barakat Ali
மார் 05, 2025 10:45

உடன்பிறப்பை நேருல சந்திச்சு பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னதுக்கும் , இந்த வழக்குக்கும் சம்பந்தம் உண்டுங்களா ????


Vivek Anandan
மார் 05, 2025 10:43

Pls finish the case fast, put the culprits in jail


ஆரூர் ரங்
மார் 05, 2025 09:13

அரசின் அறநிலையத்துறைக்கு ஒரு பைசா சொந்த சொத்துகூட கிடையாது. ஆலய நிதியை சுரண்டி திங்கும் துறை அது. இன்னும் சொல்லபோனால் அரசே நிறைய ஆலய இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. இஷ்டத்திற்கு அரசுப் பயன்பாட்டுக்கு எடுத்துள்ளனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை