உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: ராஜ வாழ்க்கை!

டில்லி உஷ்ஷ்ஷ்: ராஜ வாழ்க்கை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி முதல்வராக இருந்து ஊழல் வழக்கில் சிக்கி, தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். கைதாகி சிறையில் இருந்தவர், தற்போது ஜாமினில் வெளியே உள்ளார்.இவரது கட்சி, ஆம் ஆத்மி; அதாவது சாதாரண குடிமகன் என்பது. கட்சி துவங்கி முதன்முறையாக டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது, 'நான் முதல்வரானால் என் வீடு வெறும் நான்கு அல்லது ஐந்து அறை உள்ள, ஒரு சாதாரண வீடாகத் தான் இருக்கும்; ஒரு எளிமையான வாழ்க்கை தான் என்னுடையது' என்றார், கெஜ்ரிவால்.ஆனால் உண்மை அதுவல்ல என்பது, கெஜ்ரிவால், அரசு பங்களாவை காலி செய்தபோது தான் தெரிய வந்துள்ளது. தன் வீட்டை, கண்ணாடி மாளிகையாக மாற்றியுள்ளார் கெஜ்ரிவால்; இதற்கு, 45 கோடி ரூபாய் செலவாகியுள்ளது என, கடந்தாண்டே இது குறித்து செய்திகள் வெளியாகின.இவர் வீட்டைக் காலி செய்த உடனேயே, டில்லி பொதுப்பணித்துறை உள்ளே நுழைந்து, புதிய முதல்வர் ஆதிஷிக்கு வீட்டை தயார் செய்ய ஆரம்பித்தது. இந்த பங்களாவில் உள்ள பொருட்களை கணக்கு எடுத்தனர். 21,000 சதுர அடி உள்ள இந்த பங்களாவில் உள்ள பொருட்களை பார்த்த அதிகாரிகள் அசந்து போயினர்.'சாதாரண குடிமகனாக இருப்பேன்' என, கூறிய கெஜ்ரிவால், ராஜ வாழ்க்கை வாழ்ந்துள்ளார் இந்த பங்களாவில்.கிட்டத்தட்ட 64 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்ட 16 'டிவி'கள், மோட்டாரால் இயங்கக் கூடிய திரைச்சீலைகளின் விலை 5 கோடி. மேலும், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், வசதியாக சாய்ந்து அமரக் கூடிய சோபாக்கள். இப்படி ராஜபோக வாழ்க்கை நடத்தியுள்ளார், கெஜ்ரிவால்.இதையெல்லாம் துாக்கி சாப்பிடும் வகையில் உள்ளது, இந்த பங்களாவில் உள்ள கழிப்பறைகள். இவை அனைத்தும் 'ஆட்டோமேடிக் ஸ்மார்ட் டாய்லெட்'கள். சென்சார் வாயிலாக தானாக திறக்கும் டாய்லெட் சீட். தானியங்கி சுத்தம் செய்யும் அமைப்பு என, ஒவ்வொரு கழிப்பறையும் ஆடம்பரமாக உள்ளதாம். இந்த கழிப்பறை அமைப்பு ஒன்றின் விலை 10 லட்சம் ரூபாயிலிருந்து 12 லட்சம் ரூபாய் வரை.'ஆம் ஆத்மி என சொன்னவர், இப்படி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளாரே' என, அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. ஆனால், கெஜ்ரிவால் இதுவரை வாயே திறக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Azar Mufeen
நவ 03, 2024 17:27

அடிச்சி விடு, என்னமோ இவர் அந்த வீட்டையே பெயர்த்து எடுத்து விட்டு சொந்தமாக்கிக்கொள்ளபோகிறாரா? ஏன் 6000கோடி ஊழல் செய்த பிஜேபி கவுன்சிலர்களை என்ன சொல்லப்போகிறீர்கள்?


vijay
நவ 03, 2024 21:45

நீ அடிச்சி விடு. பதில சொல்லுயா.


subramanian
நவ 03, 2024 22:46

மக்களின் இவ்வளவு பணம் வீணடிக்க பட்டுள்ளது.....அதற்கு பதில் என்ன.... உன்னுடைய மோடி வெறுப்பு அப்புறம்....


Sivagiri
நவ 03, 2024 12:31

நான்கைந்து அறைகள் உள்ள வீடு - சாதாரண வீடாக்கும்? இந்தியாவில் உள்ள கோடானுகோடி ஆம்-ஆத்மீயின் வீடு அவ்வளவு பெரிசா? அப்போ குடிசையில் இருப்பவர்கள் எல்லாரும் சும்மா டைம் பாஸிங்கிற்காக, பிகினிக் வந்து குடிசையில் குந்திகினு இருக்காங்களாம்?. திஹாரின் 8 க்கு10 அறைதான் இவருக்கு பொருத்தமான அரண்மனை ? . .


Sridhar
நவ 03, 2024 11:24

இதெல்லாம் கூட பரவா இல்லிங்க. நம்ம ஊரு திராவிட மாடல் கணக்குல ஹெல்த் மாடல் எடுகேஷன் மாடல்னு உருட்டறான் பாருங்க. நம்ம ஊரு விஞ்ஞான ஊழல் கட்டுமரத்தையே தூக்கி சாப்புடற விதத்தில் சாராய ஊழல், முஹல்லா க்ளினிக்ல ஊழல், ஏன் தண்ணீர்ல கூட ஊழல்னு டெல்லியை ஒரு வழி பண்ணி வச்சிருக்கான் இந்த பயல். இதுலயும் வேடிக்கை என்னென்னா நம்ம ஜனங்க அடுத்த தேர்தல்லகூட இவனுக்கு மறுபடியும் வோட்டு போடுவாங்க பாருங்க. அறிவுகெட்ட கூட்டத்த வச்சுக்கிட்டு ஜனநாயகம் நடத்துறது ரொம்பவே கஸ்டம்தான்


SP
நவ 03, 2024 10:49

ஊழலுக்கு எதிராக கட்சி ஆரம்பித்து,ஊழலால் பதவியிழந்த மகா யோக்கியன் இவராகத்தான் இருக்கும்


yts
நவ 03, 2024 09:41

தனி விமானம் அல்ல யார் இந்திய பிரதமராக இருந்தாலும் அதில் தான் செல்வார்கள்


SANKAR
நவ 03, 2024 10:23

likewise ANY Delhi CM can live in this house.


Azar Mufeen
நவ 03, 2024 17:29

அது அவரின் தனி வீடு அல்ல, யார் முதல்வராக வந்தாலும் அங்கே தங்கலாம்


Shunmugham
நவ 03, 2024 09:02

கபடநாடகதாரி. மக்கள் வரிப்பணத்தில் ராஜ வாழ்க்கை. அரசியல் திருடன்.


S S
நவ 03, 2024 08:40

ரூ8000 கோடியில் தனி விமானம் வாங்கி பறக்கலாம். 10 லட்ச ரூபாய்க்கு உடை அணியலாம். அதெல்லாம் தவறில்லை எனில் 45கோடியும் தவறில்லை.


ஆரூர் ரங்
நவ 03, 2024 10:52

விஐபி விமானத்துக்கு ஆர்டர் கொடுத்தது மன்மோகன் காங்கிரஸ் அரசு. ஆனா பழைய மினரல் வாட்டர் பாட்டில்களை அழித்து செய்த ஆடை ஆயிரம் ரூபாய் கூட பெறாதே.


Sridhar
நவ 03, 2024 11:31

மோடி விமானமே உபயோகப்படுத்தமாட்டேன்னு சொல்லி பதவிக்கு வந்தாரா? அவர் அணிந்திருந்த உடையைக்கூட ஏலத்துக்கு விட்டு அந்த தொகையை அரசுக்கு கொடுத்தவர் மோடி. எதை எதோடு ஒப்பிடுவதுங்கற விவஸ்த்தையே இல்லையா? கடய்ந்தெடுத்த ஒரு அயோக்கிய அரசியல்வாதியை ஆதரிக்கும் மனநிலை எப்படி வருகிறது?


vijai
நவ 03, 2024 15:18

டுபாக்கூர் டுபாக்கூர்க்குசப்போர்ட் பண்ணுவார்


Muralidharan S
நவ 03, 2024 08:37

சாதாரண கவுன்சிலர் / வட்டம் / செயலாளர் - இன்னோவா காரில் வலம் வரும் காலத்தில், தலைவன் எப்படி இருப்பான்? ஒரு வித்தியாசம் வேண்டாம்? அவன் கோடியில் அடித்தால், இவன் லட்சம் கோடிகளில் அடிப்பான்.. முகலாயர்கள் 800 வருடம் கொள்ளை அடித்தனர்.. பிரிட்டிஷ் மிஷினரிகள் 200 வருடம் கொள்ளை அடித்தார்கள்.. இப்படி 1000 வருடங்களில் கொள்ளை போன நமது தேசத்தில், சுதந்திரத்திற்கு பிறகு நமக்கு நாமே சுதந்திரமாக கொள்ளை.. வாழ்க ஜனநாயகம்.. இந்த லக்ஷணத்தில் இருக்கிற தேசம் "வளர்ந்த நாடுகள்" பட்டியலில் எப்படி சேரும் ?? அரசியல் "வியாதிகள்" மட்டுமே இங்கு வளர்வார்கள். நாடு சுரண்டலில் அப்படியேதான் இருக்கும்.


Muralidharan S
நவ 03, 2024 08:28

நூத்துக்கு தொண்ணூறு சதவிகித அரசியல் "வியாதிகள்" சொத்து குவிக்கவே அரசியலில் இருக்கிறார்கள். புதிதாக வருபவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.. இது இந்த நாட்டின் சாபக்கேடு.. ஓட்டுக்கு பணம் வாங்கும் மற்றும் இலவசங்களை எதிர்பார்த்து ஒட்டு போடும் பொது மக்கள் இருக்கும் வரை, அப்படிப்பட்ட ஊழல் அரசியல் வியாதிகள்தான் வளர்வார்கள்.. பொது மக்கள் வறுமை கோட்டிலேயே தான் இருப்பார்கள். இதை மக்கள் உணரப்போவதில்லை. அதனால், அரசியல் வியாதிகள் காட்டில் நிரந்தர மழை..


KR
நவ 03, 2024 08:27

How gullible was Delhi electorate to have elected this fraudster by huge margins in 2 state assembly elections. We have to investigate if any foreign powers were behind this systematic projection of this gang


Columbus
நவ 03, 2024 16:32

Of course, he was a stooge of US and Germany among others. Remember who protested when he was arrested. These 2 countries only. To project them as good leaders they give awards like Nobel and Magsaysay. Amartya Sen, Kejriwal and that Ladaki leader Sonam Wangchuk. And they finance them too.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை