வாசகர்கள் கருத்துகள் ( 33 )
புயலாக எல்லாம் மாறாது. குறாவளியாக வேனா மாறும்.
இதுநாள் வரையில் இவரை நடிகர் விஜய் என்று மட்டும் அழைத்து விட்டு அரசியல் களத்தில் களமிறங்கியதும் அவரை ஜோசப் விஜய் என்று அவர் சார்ந்திருக்கும் மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக சொல்லிக் கொண்டிருக்கும் கேடுகெட்ட மனிதர்களை இங்கே காண்பதில் மிகவும் வருத்தம் எனக்கு. ஒரு ஹிந்துவாக இருந்து கொண்டு ஹிந்துக்களில் கறைபடிந்த சங்கிகள் என்றழைக்கப்படும் ஒரு சிறு பகுதியினரை தொடர்ந்து எதிர்ப்பதில் எந்நாளும் பெருமை கொள்கிறேன். பெரும்பாலான ஹிந்துக்கள் அதிலும் தமிழகத்தில் இருக்கும் ஹிந்துக்கள் அடுத்த மதத்தினவரை சக மனிதர்களாக போற்றும் மாண்பு கொண்டவர்கள். பிஜேபியில் இருக்கும் ஒரு சில கழிசடைகள் மட்டுமே எப்போதும் மாற்று மதத்தவரை சீண்டிக் கொண்டே இருப்பர். அவர்களை அசிங்கப்படுத்த வேண்டுமென்றால் சங்கிகள் என்று சொன்னாலே போதுமானது. அவர்களை அண்ட விடாமல் செய்தாலே போதும். தமிழகம் அமைதியாக நடைபோடும்...
சினிமாவில் நீ வேடதாரி. இங்கு அரசியலிலும் நீ வேடதாரி. யாரோ எழுதிய வசனத்தை நீ பேசி கைதட்டல் வாங்கி கோடிகளில் காசு பார்த்தாய். இப்போது எவனோ எழுதிய உரையை அதே சினிமா பாணியில் ஏற்ற இறக்கங்களுடன் பேசி நீ அழைத்து வந்து உட்கார வைத்த கூட்டத்தின் கைதட்டல் பார்த்து மக்கள் ஏமாந்து போக மாட்டார்கள். இந்த கூட்டத்தில் நீ எதுகை மோனையாகப் பேசுவதைவிட, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று தம்பட்டம் அடிப்பதை விட , இத்தனை நாள் நீ நடிகனாக இருந்த போதும், அரசியலுக்கு வந்த பின்னரும் மக்களுக்கு என்ன நன்மைகள் செய்தாய் என்று லிஸ்ட் போட்டு சொல்ல முடியுமா? அதுதான் உன்னுடைய மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற தீராத தாகத்தை நிரூபிக்கும்!!!
தேராத கேஸ். குட்டையை குழப்ப வந்த குள்ள நரி.
அண்ணே விஜய் அண்ணே முத்தாய்ப்பாக நீங்கள் நேற்று பேசிய வசனம் - Men may come, Men may go, I go on forever - இதை எழுதிய கவிஞர் யார்? இந்த வசனம் உங்களுக்கு எழுதிக் கொடுத்தது யாரு? அந்த ஆங்கில கவிஞரின் சரியான பெயர் என்ன? இப்படி உருப் போட்டு உருப்படி இல்லாமல் பேசினால்? அது Willam Blake இல்லை Lord Tennyson ! முதல் மீட்டிங் லேயே இப்படி மாட்டிக் கொண்டு விட்டீர்களே?
B team
வெறும் சினிமா வசனம் பேசத் தான் இவர் லாயக்கு. விவஸ்தைகெட்ட ஈர வெங்காயத்தைத் தூக்கிப் பிடிக்கும் போதே இவர் சரியான பாதையிலிருந்து விலகி வெகுதூரம் சென்று விட்டார். விரைவில் தேய்ந்து இருக்கும் இடம் தெரியாமல் உலக்கை நாயகம் போல பின்னங்கால் பிடரியில் பட ஒடிவிடுவார் என்றே தோன்றுகிறது.
விஜய் நாட்டு நடப்பு பற்றி தெரியாமல் அரசியல் மேடையை சினிமா ஷுட்டிங் மேடை என்று நினைத்து பேசுகிறார். ஏற்கனவே ஒரு மையம், திமுகவிடம் குய்யம் ஆகி கிடக்கிறது. வரும் தேர்தலுக்கு பிறகு உங்கள் நிலை அதை விட மோசமான நிலைக்கு போய் விடும்.
இவர் சாயம் வெளுக்க ஒரு தேர்தல் வந்தால் போதும்!
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பெரிய கட்சியான அ.தி.மு.க கூட்டணி இலாமலேயே, தமிழகத்தில், பி.ஜெ.பி பல இடங்களில் மிக அதிகமான வாக்குகளை பெற்றது. அந்த வகையில், தி.மு.க எதிர்ப்பு வாக்குகளை பிரித்து, தி.மு.க வை மீண்டும் வெற்றி பெற வைக்க, களமிறக்கப்பட்டவரா இவர் ?