உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஜல் ஜீவன் திட்டத்துக்கு ரூ.1,700 கோடி; கிடைக்காமல் தவிக்கும் குடிநீர் வாரியம்

ஜல் ஜீவன் திட்டத்துக்கு ரூ.1,700 கோடி; கிடைக்காமல் தவிக்கும் குடிநீர் வாரியம்

சென்னை: வீடுகளுக்கு நேரடி குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் திட்ட இலக்கை முடிப்பதற்கு, மத்திய அரசிடம் 1,700 கோடி ரூபாய் எதிர்பார்த்து, தமிழக குடிநீர் வாரியம் காத்திருக்கிறது.தரமற்ற குடிநீரை பயன்படுத்துவதால், உடல் உறுப்புகள் பாதிப்பு பிரச்னைகளுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். எனவே, நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தினமும் 55 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஒரு கோடி குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், கடந்த ஏப்., மாதத்திற்குள் வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கான பணிகளை, தமிழக குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டது. தற்போது வரை, 80 சதவீத கிராமப்புற குடியிருப்புகளுக்கு, குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.இத்திட்டத்திற்கு மத்திய அரசு, 4,900 கோடி ரூபாய் வழங்குவதாக உறுதியளித்து உள்ளது. அதில், 1,700 கோடி ரூபாய், மத்திய அரசிடம் இருந்து வர வேண்டி உள்ளது. கடந்த ஆண்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில், புயல் மற்றும் அதி கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதற்கான சீரமைப்பு பணிகளுக்கு, அதிக நிதியை தமிழக அரசு செலவிட்டு உள்ளது. இதனால், நிதி பற்றாக்குறை காரணமாக, ஜல் ஜீவன் திட்ட இலக்கை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகை, 1,700 கோடி ரூபாயை பெற, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நிலுவை தொகையை வழங்குவதுடன் பணிகளை முடிக்க, 2028 வரை கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.இதுகுறித்து, தமிழக குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மற்ற மாநிலங்களை காட்டிலும், ஜல் ஜீவன் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழாய் இணைப்புகள் வழங்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது. நிதி பற்றாக்குறையால் பணிகள் தாமதமாகின்றன. மத்திய அரசு நிதி வழங்கினால், நிலுவையில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை முடித்து, ஜல் ஜீவன் திட்டத்திற்கான நிரந்தர குடிநீர் ஆதாரங்களை உருவாக்க முடியும். அப்போது தான், தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் வழங்க முடியும். இதற்காகவே, 2028 வரை கால அவகாசம் கோரப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அசோகன்
டிச 06, 2024 16:26

நமக்கு கிடைத்த கொத்தடிமைகள் அருமையான கொத்தடிமைகள் ?? வெறும் பைப்பை மண்ணில் நட்டுவைத்தே பல கோடிகளை நாம் பார்த்ததை எவ்வளவு நசுக்காக முரட்டு முட்டு கொடுக்கிறார்கள் அப்பாவி போன்ற அடிமைகள் ....... ஸ்டாலின் உபி களுக்கு மகிழ்ச்சி கடிதம் ???


karthik
டிச 06, 2024 09:34

பிரச்சனை என்றவுடன் திராவிட மாடல் மத்திய அரசின் பக்கம் எவ்ளோ நேக்கா திருப்பி விடுகிறது.. இத்தனை நாள் இந்த திட்டம் மூலம் தமிழ் நாடு முழுதும் கடந்த 5 வருஷங்களாக கிராமம் தோறும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது தமிழக மக்கள் யாருக்காவது தெரியுமா? இன்று சென்னையில் கழிவு நீர் குடிநீரில் கலந்தவுடன் .....ஆஆஆ மத்திய அரசு பணம் தரவில்லை என்று உருட்ட பார்க்கிறார்கள்.


அப்பாவி
டிச 06, 2024 08:40

குழாய் போட்டு என்ன பிரயோஜனம்? பா.ஜ ஆளும் மராத்வாடாவுலேயே தண்ணி கஷ்டம். குழாய் போடறாங்களாம். கொழாய்.


hari
டிச 06, 2024 10:16

குழாயில் அடைப்பு இருந்தால் நம்ம அப்பாவியை கூப்பிடுங்க....


VENKATASUBRAMANIAN
டிச 06, 2024 08:11

எதற்காக குழாய் மட்டுமே போட்டு கணக்கு காண்பிக்கவா. திருட்டு திராவிட மாடல்


Rajasekar Jayaraman
டிச 06, 2024 08:00

எத்தனை கோடி திருடப்பட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை