உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  தி.மு.க., ஆட்சியில் திராணியற்று விட்டதா தமிழ் சமூகம்?

 தி.மு.க., ஆட்சியில் திராணியற்று விட்டதா தமிழ் சமூகம்?

சென்னை: 'தன்னை ஏற்க மறுக்கும் பெண்ணை கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு தைரியம் அளிப்பது, சீரழிந்த சட்டம் - ஒழுங்கா; கைகட்டி வேடிக்கை பார்க்கும் காவல் துறையா?' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:

திருமணத்திற்கு மறுத்ததால் தஞ்சையில் பள்ளிக்கு செல்லும் வழியில் பெண் ஆசிரியர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதேபோல, சில நாட்களுக்கு முன், ராமேஸ்வரத்தில், காதலிக்க மறுத்த மாணவி ஒருவர், பள்ளி செல்லும் வழியில், கொலை செய்யப்பட்டார். அந்த ரணம் அகலாத நிலையில், மீண்டும் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. தி.மு.க., ஆட்சியின் கீழுள்ள தமிழ் சமூகம், நம் பெண்களின் விருப்பு, வெறுப்பை மதிக்கக் கூட திராணியற்று விட்டதா? தன்னை மறுக்கும் பெண்ணை, கொலை செய்யும் அளவிற்கு தைரியம் அளித்தது, சீரழிந்த சட்டம் - ஒழுங்கா; கைகட்டி வேடிக்கை பார்க்கும் காவல் துறையா? பாலியல், கடத்தல், காதலிக்க மறுத்ததால் கொலை என, தொடரும் பெண்களுக்கு எதிரான கொடூர குற்றங்களை கண்டு, பெண் பிள்ளைகளை பெற்றோர், வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு தவிக்கின்றனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் தன் மகன் பிறந்த நாளுக்கு, வாழ்த்து மடல் வாசித்து மகிழ்கிறார். இந்த லட்சணத்தில், 'அப்பா' என்ற பட்டத்திற்கு ஆசைப்படுவது வெட்கக்கேடு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

T.Senthilsigamani
நவ 28, 2025 06:13

உண்மை தான் .தமிழகம் குருதிகள் சிந்தும் கொலைக்களமாக மாறி வருகிறது .எதையும் கண்டுகொள்ளாத மொண்ணைத்தனமான அரசு இயந்திரம் . துருப்பிடித்திருக்கும் அந்த இயந்திரத்தை துதி பாடி வாழ்த்தி வாழ்க்கை நகர்த்தும் , திராவிட சார்பு சமூக ஊடகங்கள் .சமூக நீதி பேசி சமூக நாதி இன்றி தமிழ் சமூகத்தை தவிக்க விடும் விடியா அரசு முடியட்டும் .இனியும் திராவிட மாயையில் இருந்து தமிழகம் மீளாவிடில் ,வரும் தலைமுறைகள் நரகத்தை இனி தமிழகத்தில் அனுபவிக்க கூடும் .மதசார்பின்மை என்ற போர்வையில் இந்த விடியா அரசில் நடக்கும் கொலைகளை மென்போக்கில் கூட கண்டிக்க துணியாத திமுக தோழமை கட்சிகளான காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட் ,விசிக ,மதிமுக ஆகியவற்றை தங்களின் நினைவுகளில் இருந்து தமிழக மக்கள் முற்றிலும் அகற்ற வேண்டும் .அந்த திராணியை தமிழ் சமூகத்திற்கு வாலறிவன் வரமென அருளட்டும் .


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ