உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / போட்டியே இல்லாத போட்டியில் நான் போட்டியிடவில்லை; அண்ணாமலை பேட்டியால் பா.ஜ.,வினர் குழப்பம்

போட்டியே இல்லாத போட்டியில் நான் போட்டியிடவில்லை; அண்ணாமலை பேட்டியால் பா.ஜ.,வினர் குழப்பம்

கோவை: ''பா.ஜ., மாநில தலைவர் போட்டியில் நான் இல்லை,'' என, கோவையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:

பார்லிமென்டில் ஒரு சரித்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இரு சபைகளிலும் தனிப்பெரும்பான்மையுடன் வக்ப் போர்டு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.சட்டம் கொண்டு வருவதற்கு முன், மசோதா தொடர்பாக ஒரு கோடி பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 13 மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, மசோதாவை நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு. ஏழை முஸ்லிம்களுக்கு, வக்ப் திருத்தச் சட்டம் ஒரு வரப்பிரசாதம். இதில் எதுவும் புதியது இல்லை. ஆனால், தமிழகத்தில் இருப்போர், இதை குற்றஞ்சாட்டுகின்றனர். கடந்த 2013 முதல் 2023 வரை, வக்ப் போர்டில் இருந்த சொத்து 18 லட்சம் ஏக்கர். 2023 முதல் 2025 வரை, 21 லட்சம் ஏக்கர் சேர்க்கப்பட்டுள்ளது. வக்ப் போர்டு வசம் 39 லட்சம் ஏக்கர் உள்ளது. இதில் நிறைய குழப்பங்கள் உள்ளன. தனிப்பட்ட சொத்தையும் வக்ப் போர்டு எடுத்துக்கொள்ள முடியும். அரசின் சொத்தையும், பிரிவு 40ன்படி எடுத்துக் கொண்டால், அதற்கு எந்தத் தீர்வும் இல்லை. இதை சரி செய்யத்தான், வக்ப் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, நேர்மையான முறையில் அரசு சொத்து காக்கப்பட்டுஉள்ளது. வக்ப் போர்டுக்கு சொத்து யாரெல்லாம் கொடுக்கலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள ஷியா, சன்னி முஸ்லிம் பிரிவுகளுடன், மேலும் இரு பிரிவுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. முஸ்லிம் மதத்தில் உள்ளவர்கள் மட்டுமே இருப்பது, வக்ப் போர்டு அல்ல. வக்ப் போர்டு சொத்தை நிர்வகிப்பவர்கள் முஸ்லிம் ஆக இருக்கலாம்.ஆனால், அதற்கு கீழ் உள்ளவர்கள் முஸ்லிம் மதத்தைச் சாராதவர்களாக இருக்கலாம். இந்த வக்ப் திருத்தச் சட்டத்தை தி.மு.க., எதிர்க்கிறது; ஆனால், கிறிஸ்துவர்கள் ஆதரித்து, பாராட்டிஉள்ளனர்.

எதற்காக போராட்டம்?

வக்ப் சட்டத்தில், பிரிவு 40 மற்றும் 108 ஆகியவை திருத்தச் சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளன. இதனால், இவர்களுக்கு பயன் கிடைக்கும். எல்லா மக்களும் ஏற்றுக் கொண்ட சட்ட திருத்தத்திற்கு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாத கட்சிகளும் ஆதரவாக ஓட்டளித்துள்ளன.இந்த சட்டத் திருத்தத்தால், சிறுபான்மை சமூகத்தவருக்கு வலிமை ஏற்பட்டுள்ளது. சிறுபான்மையினரிடையே பயத்தை ஏற்படுத்தி, அதன் வாயிலாக அவர்களை தங்கள் பக்கமே வைத்துக் கொள்வதை தி.மு.க., வழக்கமாகக் கொண்டுள்ளது. வக்ப் போர்டு கீழ் 39 லட்சம் ஏக்கர் உள்ளது. வருமானம் 126 கோடி ரூபாய். முறையாக நிர்வகித்தால், 10,000 கோடி ரூபாய் வருவாய் இருக்கும் என கூறப்படுகிறது. பாதி வக்ப் போர்டு சொத்துக்களை, தி.மு.க.,வினர் அபகரித்து வைத்துள்ளனர். வக்ப் போர்டுக்கு, அதில் இருந்த வருவாய் செல்லவில்லை. அரசியல் கட்சிகள், வக்ப் போர்டு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக, எதற்காக போராட்டம் நடத்துகின்றன என்பதை சொல்லட்டும். என்ன காரணத்துக்காக த.வெ.க., போராடுகிறது? தமிழக சட்டசபையில் போடப்பட்ட 'நீட்' தீர்ப்பை ஜனாதிபதி நிராகரித்து திருப்பி அனுப்பி விட்டார். நீட் நாடகம் முடிந்தது. அடுத்த நாடகத்தை முதல்வர் துவங்கட்டும். தைரியம் இருந்தால் உச்ச நீதிமன்றம் செல்லட்டும்.தமிழக பா.ஜ., புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. பா.ஜ.,வை பொறுத்தவரை தலைவர் பதவிக்கு பொதுவாக போட்டியிருக்காது. யாரும் போட்டியிட்டு தேர்வு நடப்பதில்லை. எல்லாரும் சேர்ந்து, ஒரு தலைவரை ஏகமனதாக தேர்வு செய்வோம்.

ஏன் மாற்ற வேண்டும்?

ஒரு விவசாயியின் மகன் நான். கட்சியின் தொண்டனாக என் பணி எப்போதும் தொடரும். ஊழலுக்கு எதிராக வந்தவன் நான். அதில் ஒருபோதும் சமரசம் இல்லை. ஒரு நல்ல ஆட்சியை கொண்டுவர, என் முயற்சி தொடரும். தி.மு.க., அமைச்சரவையில் 13 அமைச்சர்கள் மீது, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு, தமிழக நீதிமன்றங்களில் நடக்கிறது.தற்போது திடுமென டாஸ்மாக் தொடர்புடைய வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என, தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது. டாஸ்மாக் வழக்கை மட்டும் ஏன் அடுத்த மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்? உங்கள் மடியில் கனமிருக்கிறது; வழியில் பயம் உள்ளது. அமலாக்கத்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் உரியவர்களை கைது செய்ய வேண்டும்; நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் தி.மு.க., தலைவர்கள் பெரும் சிக்கலுக்குள்ளாவர்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

மண்டை காயும் தொண்டர்கள்!

வழக்கமாக எந்த விஷயத்தையும் விளக்கமாக பேசக்கூடியவர் அண்ணாமலை. ஆனால், கோவையில் தலைவர் பதவி குறித்து அவர் அளித்த பேட்டி ரொம்பவும் குழப்பமாக இருப்பதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். இது குறித்து கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:சமீபத்தில் டில்லிக்குச் சென்ற அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துவிட்டு திரும்பினார். தமிழக நலன்களுக்காக அமித் ஷாவை பார்த்ததாக பழனிசாமி சொன்னாலும், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி பேச்சு நடப்பதாக அமித் ஷா பேட்டியளித்துள்ளார். இதையடுத்து, அண்ணாமலையையும் டில்லிக்கு அழைத்து பேச்சு நடத்தினார் அமித் ஷா. டில்லிக்கு அண்ணாமலை சென்று திரும்பிய பின், அவரை தமிழக பா.ஜ., தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, புதிய தலைவர் ஒருவரை நியமிக்கப் போவதாக தகவல் பரவி உள்ளது. இந்த தகவலுக்கு அண்ணாமலை விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக பா.ஜ.,வினர் எதிர்பார்த்தனர். இந்நிலையில், கோவைக்கு சென்ற அண்ணாமலை, அங்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தலைவர் பதவி மாற்றம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கம் ரொம்பவும் குழப்பமாக இருப்பதாக அனைவரும் தெரிவிக்கின்றனர். போட்டியே இல்லாத போட்டியில், நான் போட்டியிடவில்லை என்ற ரீதியில் அவர் சொல்லி இருப்பது, அனைவரையும் மண்டை காய வைத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க., மாநாடு போல நடந்த

மருதமலை கும்பாபிஷேகம்மருதமலையில் நடந்த கும்பாபிஷேகத்திற்கு, பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அமைச்சர் சேகர்பாபுவின் குடும்பத்தினர், போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க.,வினருக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, மருதமலையில் முருகனை அவமானப்படுத்தி உள்ளனர். தி.மு.க., மாநாடு போல நடந்திருக்கிறது. இந்த வெட்கங்கெட்ட செயலை பா.ஜ., கண்டிக்கிறது.- அண்ணாமலை, தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Karthik
ஏப் 05, 2025 22:41

அதுக்கு அன்னப்போஸ்ட் னு அர்த்தம் .


KRISHNAN R
ஏப் 05, 2025 21:09

கருத்துள்ள விசயம் பேசுபவர்..


venugopal s
ஏப் 05, 2025 09:53

அண்ணாமலை வழக்கமாக எப்போதும் பேசுவது போல் குழப்பமாக பேசியுள்ளார்,இது ஒன்றும் புதிதில்லையே!


vivek
ஏப் 05, 2025 11:23

டாஸ்மாக் மட்டைகளுக்கு புரியாது......


தமிழ்வேள்
ஏப் 05, 2025 09:50

பெண் பித்து கஞ்சா சாராய திருட்டு வெறி பிடித்த ஒழுக்கம் அற்ற தறுதலை திராவிட கட்சிகளோடு ஒத்து போக வேண்டும் என்று சொல்வதே, அப்படி சொல்பவர்களின் தரம் பற்றிய ஐயத்தை கிளப்பி விடுகிறது...


அப்பாவி
ஏப் 05, 2025 09:30

போன தடவை போட்டியிருந்தா போட்டியில்தான் போட்டியிட்டு தலைவர் ஆனமாதிரி பேச்சு. உங்களுக்கு அனைவரையும் அணைச்சுக்கிட்டு போற அளவுக்கு ஆளுமை இல்லை. பேசாம ஏட்டு வேலைக்கே திரும்ப போயிடலாம்.


ஈசன்
ஏப் 05, 2025 08:32

ஆம். எதற்காக எதிர் கட்சியினரிடம் சுமுகமாக போக வேண்டும். ஓவியா குறிப்பிடும் கணேசன், பொன்னார், தமிழிசை போன்றவர்களால் இது வரை தமிழக பாஜகவில் ஒன்றும் செய்ய இயலவில்லை. காரணம் சுமுகமாக போனதால் தான். அரசியலுக்கு வந்து வெறும் 5 வருடத்தில் 15% க்கும் மேல் வாக்குகளை உருவாக்கி இருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமா. எம்ஜிஆர் அவர்கள் திரைப்படங்கள் மூலம் பிரபலம் ஆனார். அதனால் ரசிகர்களை அப்படியே தொண்டர்களாக திருப்ப முடிந்தது. அண்ணாமலை ஜியின் நிலை அப்படி இல்லை. தன்னை யார் எப்படி பேசினாலும், யாரையும் தரக்குறைவாக பேசாமல், ஊழல் எதிர்ப்பு என்ற ஒன்றையே ஆயுதமாக கொண்டு மக்களை தனது பேச்சால் கவர்ந்து மிகுந்த பாடுபட்டு தொண்டர்களை உருவாக்கி இருக்கிறார். தங்களை விட வயதில் குறைந்த ஒருவர் குறுகிய காலத்தில் பிரபலமாவதை விரும்பாத பழைய பிஜேபி தலைவர்களின் ஒத்துழையாமை போன்ற சவால்கள் இருந்தும் தன்னை மட்டும் முன்னிறுத்தவில்லை. வாய்க்கு வாய் ஆண்ணன் அவர்கள், அக்கா அவர்கள் என்று அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை இந்நாள் வரை கொடுத்து வந்திருக்கிறார். ஓவியா சொல்வது போல் ஸ்டாலின், எடப்பாடி போன்றவர்களிடம் சுமுகமாக உறவாடி தன்னை மட்டும் உயர்த்தி கொள்ள தெரியாத ஒரு ஐபிஎஸ் அதிகாரியால். இரு ஊழல் கட்சிகளுக்கு தனது பேச்சாற்றல் மற்றும் அனைவரின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டி மரண அடி கொடுத்து வரும் ஒரு தலைவரை புகழ்ந்து பேசவிடாலும், வெறும் 200 ரூபாய்க்கு விலை போய் விடாதீர்கள்.


vivek
ஏப் 05, 2025 10:11

200 ரூபாய் அர்டிஸ்ட்கு அப்படித்தான் வளர்ப்பு


pmsamy
ஏப் 05, 2025 07:49

அண்ணாமலை போட்டி போட்டாலும் போடாட்டாலும் ஒரு வித்தியாசமும் இல்லை அவன் ஒரு டம்மி பீஸ்


Oviya Vijay
ஏப் 05, 2025 03:53

இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் எழுதிய பதிவை இங்கே மீண்டும் நினைவு படுத்துகிறேன்... அண்ணாமலை கூட்டணி குறித்த பேச்சுக்களில் ஒத்து வராத காரணத்தால் தன் சொந்தக் கட்சியாலேயே கூடிய விரைவில் ஒதுக்கி வைக்கப்படப் போகிறார்... அவ்வளவே... எதிர்க்கட்சிகளுடன் சுமூகமான முறையில் பழகக் கூடியவராக நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை போன்றோர்களில் ஒருவரை முன்னிறுத்தி கட்சியின் தலைமை அண்ணாமலையை ஓரங்கட்டபோகிறது... எந்தக் கட்சியும் ஒரு மாநிலத்தில் தன் கட்சியின் வளர்ச்சியைப் பார்க்கத்தான் விரும்புமேயொழிய, வாய்ச்சவுடால் செய்வது ஒன்றே தன் தொழில் என்றிருக்கும் இவர் போன்றோருக்கு எந்தக் கட்சியின் தலைமையும் என்றைக்குமே பக்க பலமாக இருக்காது... இவரின் அரசியலுக்கு கூடிய விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 05, 2025 07:36

அடுத்தவர் கட்சியின் உட்கட்சி விவகாரத்தை ஆருடம் கணிப்பதில் கைதேர்ந்தவர் ஓவியா.....பொருத்திருந்து பாருங்கள் ஓரங்கட்ட படுகிறாரா அல்லது உச்சியில் அமர வைக்க படுகிறாரா என்று .... நீங்கள் சார்ந்திருக்கும் கட்சியை போல அல்ல பாஜக.... சமயத்தில் குப்பையை கிளறி கிடைக்கும் அறிய பொருட்களை எடுத்து கோபுரத்தில் வைத்து அழகு பார்க்கும் கட்சி.... வேண்டுமானால் ஒதுக்க படுகிறார், ஓரங்கட்ட படுகிறார், நீக்கப்படுகிரார், என்று எழுதி சந்தோஷ பட்டு கொள்ளுங்கள்....தங்கம் எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் தங்கம் தங்கம் தான்.....!!!


Chandran,Ooty
ஏப் 05, 2025 09:00

நீ ஏன் அண்ணாமலை என்ற பெயரை கேட்டவுடனே பயந்து நடுங்குகிறாய். ரொம்ப நடுக்கமா இருந்தா நியூரோபியன் போட்டுக் கொள். காலங்காத்தால ஓவியமா கருத்து போட வந்துர்றானுக.


vivek
ஏப் 05, 2025 10:10

ஏல ஆர்டிஸ்ட்...200 100=300 ஓகே வா...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை